இந்தப் பொடியைப் போட்டு முகத்தைக் கழுவினால் வறண்ட பொலிவிழந்த சருமம் கூட 5 நிமிடத்தில் கலராக பொலிவாக அழகாக மாறும்.

face2
- Advertisement -

நம்முடைய முகம் இருபத்தி நான்கு மணி நேரமும் பொலிவாக பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டுமென்றால் இந்த பொடியை போட்டு தினமும் காலை மாலை இரண்டு வேளை முகத்தை கழுவ வேண்டும். இயற்கையான பொருட்களை வைத்து வீட்டிலேயே சுலபமாக முகம் கழுவும் பொடி எப்படி தயார் செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். குழந்தைகள் கூட தொடர்ந்து இந்த பொடியை பயன்படுத்தி முகத்தை கழுவி வந்தால் அவர்களுக்கு சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். அவர்களுடைய முகம் நாளுக்கு நாள் பொலிவாக கலராக மாறிக் கொண்டே இருக்கும். சரி வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெமிடியை பார்த்து விடுவோம்.

இந்தப் பொடி தயார் செய்ய நமக்கு 3 பொருட்கள் மட்டும்தான் தேவை. சுத்தமான சந்தன பொடி, ஓட்ஸ் பொடி, ஆரஞ்சு தோல் பொடி. எந்த ஒரு ஃபிலேவரும் இல்லாத ஓட்ஸை வாங்கி மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோல் பொடி, சந்தனப் பொடி, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஆர்கானிக் பொருட்களாக பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு பெரிய பௌலில் சந்தனப் பொடி 1/4 கப், ஓட்ஸ் பொடி – 1/4 கப், ஆரஞ்சு தோல் பொடி 1/4 கப் இந்த மூன்றையும் சேர்த்து கலந்தால் நமக்கு தேவையான முகம் கழுவ கூடிய பொடி தயார். இந்த பொடியை ஈரம் படாமல் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு காற்று புகாமல் மூடி போட்டு ஸ்டார் செய்தால் இரண்டு வாரங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

முகம் கழுவுவதற்கு முன்பு ஒரு சிறிய கிண்ணத்தில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பொடியை தேவையான அளவு எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ரொம்பவும் டிரை ஸ்கின் ஆக இருந்தால் இதில் பால் அல்லது தயிர் ஊற்றி கலந்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அப்படி உங்களுக்கு ரொம்பவும் ஆயில் ஸ்கின் ஆக உள்ளது என்றால் ரோஸ் வாட்டர் அல்லது அரிசி வடித்த கஞ்சி, அரிசி கழுவிய தண்ணீர் இதில் ஏதாவது ஒன்றை ஊற்றி இந்த பொடியை பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். தயாராக இருக்கும் இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்றாக தடவி இரண்டிலிருந்து மூன்று நிமிடம் ஜென்டிலாக வட்ட வடிவில் மசாஜ் செய்து அதன் பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான். தொடர்ந்து இந்த முகம் கழுவ கூடிய பொடியை பயன்படுத்தி வரும் போது உங்களுக்கே சருமத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். முகத்தில் இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அது படிப்படியாக ஒரு சில நாட்களிலேயே குறைந்துவிடும். வெயிலினால் ஏற்படும் சன் டேன் நீக்கக்கூடிய சக்தியும் இதற்கு உண்டு. இரண்டு வாரம் பயன்படுத்திதான் பாருங்களேன். உங்களுக்கே தெரியும். பிறகு நீங்களே நினைத்தாலும் இந்தப் பொடியை நிறுத்த மனசு வராது.

- Advertisement -