வெள்ளிக்கிழமை உங்கள் வீட்டில் பச்சரிசியில் இந்த 3 பொருளை போட்டு வைத்தால் போதும். திடீர் அதிர்ஷ்டம் திடீர் பணவரவு வாசல் கதவை தட்டும்.

mahalakshmi2
- Advertisement -

எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத காசு நம் கைக்கு வந்தால் சொல்வதற்கு வார்த்தையே இருக்காது. நிச்சயம் சந்தோஷம் பொங்கி வழிய தான் செய்யும். அதாவது அனாவசியமாக, இலவசமாக நமக்கு சொந்தம் இல்லாத பொருளை என்றைக்குமே நாம் அனுபவிக்க கூடாது. அது வீடு, நிலம், வாகனம், போன்ற சொத்துக்கள் ஆக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி. ஆனால் நமக்கு உரிய பணம் நமக்கு வரவேண்டிய சொத்து நமக்கான காசு வராமல் ஏதோ ஒரு காரணத்தினால் தடைபட்டு இருக்கும் பட்சத்தில், அந்தத் தடைகள் தகர்க்கப்பட்டு நமக்கான பணம், நமக்கான சொத்து நம் கைக்கு வந்து சேர இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

அப்படி இல்லை என்றால், சில பேருக்கு கோர்ட் கேஸ் வழக்குகள் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கும். நியாயமாக வர வேண்டிய சொத்து நமக்கு வராமல் தடையாக நிற்கும். சில பேர் கொடுத்த பணத்தை திருப்பி வாங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருவார்கள்‌. இப்படிப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். கட்டாயம் பச்சரிசி தான் வைக்க வேண்டும். புழுங்கலரிசி பயன்படுத்தக் கூடாது. அந்த பச்சரிசியில் 3 சோழி, 3 ஒரு ரூபாய் நாணயங்கள், ஒரு மஞ்சள் கிழங்கு, இந்த பொருட்களை வைத்து வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விட வேண்டும்.

மகாலக்ஷ்மியை மனதார நினைத்துக்கொண்டு இந்த வேண்டுதலை செய்யுங்கள். மாதம் ஒருமுறை கிண்ணத்தில் போட்டு வைத்திருக்கும் பச்சரிசியை யாருக்காவது தானமாக கொடுத்து விட வேண்டும். அதாவது பசியோடு இருப்பவர்களுக்கு, கஷ்டப்படுபவர்களுக்கு, இந்த அரிசியை தானமாக கொடுக்க வேண்டும். அவர்கள் அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டு பசியாற வேண்டும். அப்படிப்பட்ட ஒருவராக பார்த்து தேர்ந்தெடுத்து கொடுத்துவிடுங்கள்.

- Advertisement -

மீண்டும் அந்தக் கிண்ணத்தில் புதியதாக பச்சரிசியை நிரப்பி ஏற்கனவே பயன்படுத்திய சோழி, ஒரு ரூபாய் நாணயம், மஞ்சள் இந்த மூன்று பொருட்களையும் அந்த பச்சரிசியில் போட்டு மீண்டும் வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விட வேண்டும். இப்படி செய்துவர எதிர்பாராத பணவரவு உங்களுக்கு கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

பிரச்சினை இருப்பவர்கள் மட்டும்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மனதார உங்கள் வீட்டிற்கு எப்போதும் மகாலட்சுமியின் வருகை இருக்க வேண்டும். பணவரவு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு இந்த பரிகாரத்தை செய்தாலும் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வறுமை விலகும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை அதிகமாக கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -