உங்கள் வீட்டு செடிகளுக்கு பக்க கிளைகள் வரவில்லையா? எந்த வகையான செடிக்கும் இணை கிளைகளை அதிகம் துளிர்க்கச் செய்யும் இந்த ஒரு உரத்தை 10 பைசா செலவில்லாமல் கொடுத்து பாருங்கள்!

rose-uram-dry-leave
- Advertisement -

செடி வளர்ப்பவர்கள் அதிகம் விரும்புவது பக்க கிளைகள் நன்கு முளைத்து புதர் போல தன்னுடைய செடி நன்றாக பூத்துக் குலுங்க வேண்டும் என்பதைத்தான்! இணை கிளைகள் அதிகம் வருவதில் தடைகள் ஏற்பட்டால், அங்கு தேவையான சத்துக்கள் குறைகிறது என்று அர்த்தம். நீங்கள் கொடுக்கக்கூடிய உரத்தை உறிஞ்சும் சத்து அந்த மண்ணிற்கு குறைவாக இருப்பதையும் இது உணர்த்துகிறது. எனவே கொடுக்கக்கூடிய உரம் நன்கு உரிந்து கொள்ளவும், பக்கக் கிளைகள் அதிகம் முளைக்க செய்யக்கூடிய இந்த உரத்தை எப்படி தயாரிப்பது? அது என்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

ரோஜா செடியை நட்டு வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு கிளையில் பூக்கள் அதிகம் பூத்து விட்டால் மீண்டும் அந்த கிளையில் பூக்கள் பூப்பதில்லை. அதை வெட்டி விடும் பொழுது பக்க கிளைகள் வளர்ந்து அதில் மீண்டும் புதிதாக பூக்கள் பூக்கும். இப்படி பக்க கிளைகள் வராமல் இருந்தால் அதில் எப்படி பூக்கள் பூக்கும்? எனவே பக்க கிளைகள் அதிகம் முளைப்பதற்கு, முதலில் நீங்கள் கொடுக்கக்கூடிய உரத்தை உறிஞ்சும் சக்தி அந்த பூச்செடிக்கு தேவை.

- Advertisement -

எந்த உரத்தை நீங்கள் கொடுத்தாலும் அந்த மண் கலவை அதனை முழுவதுமாக உரிந்து கொள்ளும் திறனை பெற்றிருக்க வேண்டும். இந்த திறனை அளிக்க கூடிய சக்தி இந்த ஒரு உரத்திற்கு அதிகம் உண்டு. நீங்கள் காய்ந்து விழும் இலைகள், கிளைகளை எப்பொழுதும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி நீங்கள் சேகரித்த காய்ந்த இலைகளை ஒரு 20 லிட்டர் கேன் அல்லது ஏதாவது ஒரு உடைந்த பிளாஸ்டிக் வாளியில் மண் கலவையை கொட்டி அதில் போட்டு வைத்து விட்டு விடுங்கள். ஓரளவுக்கு அந்த தொட்டியில் நீங்கள் காய்ந்த இலைகளை சேகரித்த பின்பு, அந்த மண் கலவையுடன் மக்கி போகுமாறு தண்ணீரை தெளித்து கலந்து விட்டு கொண்டே வாருங்கள். 2 அல்லது 3 மாதங்களில் நன்கு மண்ணுடன் மண்ணாக மக்கி அந்த இலைகள் ஒரு நல்ல ஊட்டச்சத்துள்ள உரமாக மாறிவிடுகிறது.

- Advertisement -

உரமாக இப்படி மாறிய பின்பு நீங்கள் அதை கைகளால் உதிர்த்து உதிரியாக செய்து கொள்ள வேண்டும். பின்பு இதனை வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டால், நல்ல ஒரு உரம் செலவில்லாமல் தயார்! இந்த உரத்தை ஒரு கைப்பிடி அளவிற்கு உங்கள் வீட்டில் வளர்க்கும் எல்லா வகையான செடிகளுக்கும் நீங்கள் கொடுத்து வந்தால் போதும், பக்கக் கிளைகள் சரசரவென முளைக்க ஆரம்பித்துவிடும். அதில் பூக்கள், காய், கனிகள் அனைத்தும் உங்களுக்கு கொத்துக் கொத்தாக கொடுக்க ஆரம்பிக்கும்.

இந்த உரத்தை நீங்கள் கொடுத்த பின்பு வேறு எந்த உரத்தை நீங்கள் கொடுத்தாலும் அதனை உடனடியாக அந்த மண் கலவையானது உரிந்து கொண்டு விடும். இதனால் சீக்கிரமே நல்ல பலன்களை உங்களுடைய உரம் கொடுக்க ஆரம்பிக்கும். எனவே காய்ந்த இலைகளை இனி தூக்கி எறியாமல், ஒரு தொட்டியில் போட்டு சேகரித்து வாருங்கள். உங்கள் வீட்டு பூச்செடிகளும், காய், கனி செடிகளும் சிரித்துக் கொண்டே உங்களை வரவேற்க காத்திருக்கும்.

- Advertisement -