பெருமாளை நினைத்து இந்த சந்தனத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் போதும். பண கஷ்டம் என்பது வரவே வராது. காலத்துக்கும் செல்வந்தராக வாழும் யோகம் கிட்டும்.

perumal1
- Advertisement -

நம்முடைய பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அதிலும் வீட்டில் ஒரு திருமணம் வைத்திருக்கின்றோம். சுபகாரிய நிகழ்ச்சியை நல்லபடியாக நடத்தி முடிக்க வேண்டும் என்றால், அவரவர் தகுதிக்கு ஏற்ப பணம் நிச்சயம் தேவைப்படும். தகுதிக்கு மீறிய செலவாக இருந்தாலும் சில பேர் கடன் வாங்கியாவது தங்களுடைய பிள்ளைகளுக்கு திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்தி முடிப்பார்கள். இப்படி திடீரென்று உங்களுக்கு ஏதோ ஒரு சுபகாரிய தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. திருமணம் நடத்த, வீடு கட்ட, பிள்ளைகளை மேல் படிப்புக்கு படிக்க வைக்க, எந்த தேவையாக இருக்கட்டும் அந்தத் அவசர பண தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றால் நாம் என்ன செய்யலாம். இதற்கு ஒரு பெருமாள் வழிபாடு உள்ளது. உங்கள் பண தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்யக்கூடிய ஸ்ரீரங்கநாதர் பெருமாள் வழிபாட்டை பற்றித்தான் இன்று இந்த ஆன்மீகம் பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பணக்கஷ்டம் தீர்க்கும் பெருமாள் வழிபாடு:
வெள்ளிக்கிழமை திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்க பெருமாள் கோவிலுக்கு நீங்கள் செல்ல வேண்டும். அந்த கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் குருக்களிடம் கேட்டால் இந்த சந்தனம் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். பெருமாளுக்கு சந்தன அபிஷேகம் செய்வார்கள். பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் மேலே ஊற்றி அபிஷேகம் செய்த சந்தனம் என்று அவர்களிடம் கேட்டு வாங்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய பிரச்சனைகளை சொல்லி அவர்களிடம் பொறுமையாக கேட்டால் நிச்சயமாக இந்த சந்தனமானது உங்களுக்கு கிடைக்கும். ரங்கநாத பெருமாளின் ஆசிர்வாதத்துடன், அந்த மகாலட்சுமி தாயாரின் ஆசீர்வாதத்துடன் அந்த சந்தனத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அதை அப்படியே வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு, உங்கள் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று அந்த சந்தன திலகத்தை நெற்றியில் இட்டு வர வேண்டும். இப்படி இந்த சந்தன திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளும் போது பின் சொல்லக் கூடிய இந்த மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும்.

பண கஷ்டத்தை நீக்கும் மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
வஸுதே வஸுதாரே வஸூகரீ
தனகரீ தான்யகரீ ரத்னகரீ
சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா

- Advertisement -

இந்த மந்திரத்தை சொல்லி ரங்கநாதரையும் மகாலட்சுமி தாயையும் மனதில் நினைத்து, தினமும் இந்த சந்தன திலகத்தை நெற்றியில் இட்டு வந்தால் உங்களுடைய தேவைகளுக்கு உண்டான பணத்தை எப்படியாவது அந்த எம்பெருமான் உங்கள் கையில் கொண்டு வந்து சேர்த்து விடுவார். பணம் கிடைக்க முயற்சிகளை நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். முயற்சிகளில் வரும் தடைகளில் இருந்து விடுபட இந்த சந்தன திலகமும் இந்த மந்திரமும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ சாபம் உங்கள் குடும்பத்திற்கு தீராத கஷ்டத்தை கொடுக்கிறதா? வாசலில் நிற்கும் குலதெய்வத்தை வீட்டிற்குள் வர வைக்க 1 கைப்பிடி சில்லறை காசுகள் இருந்தால் போதும்.

ஒரு வெள்ளிக்கிழமை அன்றோ அல்லது பௌர்ணமி தினத்தன்று திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கநாத பெருமாளை தரிசனம் செய்தால், உங்களை வாட்டி வதைக்கும் பணப்பிரச்சனையிலிருந்து நிச்சயம் ஏதாவது ஒரு ரூபத்தில் விடிவு காலம் கிடைக்கும். மேல் சொன்ன பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -