எத்தகைய பணப் பிரச்சனையும் விரைவாக தீர சமையல் அறையில் அரிசி பானைக்குள் இந்த 1 பொருளை போட்டு வையுங்கள்!

money-madhulai
- Advertisement -

தீராத பணப் பிரச்சனைகள் எல்லோருக்குமே உண்டு ஆனால் அதை எப்படி தீர்ப்பது? என்பது தான் எல்லோருக்கும் கேள்விக் குறியாக இருக்கிறது. பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாகி கொண்டு இருக்கிறான் ஆனால் ஏழ்மையில் இருப்பவனோ கடைசி வரை ஏழ்மையிலேயே வாழ்ந்து மடிகிறான். பணம் என்பது இந்த சமுதாயத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பணம் தான் அனைத்தையும் நிர்ணயிக்கிறது. ஆனால் பணமே வாழ்க்கை அல்ல என்பதும் உண்மை தான். இவ்வகையில் பண பிரச்சனையை தீர்க்க கூடிய ஒரு எளிய விஷயத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

mahalakshmi

ஆன்மீகத்தில் செல்வ அதிபதியாக விளங்குபவர் மகாலட்சுமி ஆவார். மகாலட்சுமியை வணங்குவது வெறும் பணம், காசு வர வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல! மகாலட்சுமி நம்மிடம் இருந்தால் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும் என்பதும் இந்த வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மகாலட்சுமியை வணங்கினால் காசு, பணம் வரும் என்று நினைத்து பூஜை செய்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

- Advertisement -

மகாலட்சுமி அன்னையாக விளங்குபவள்! அன்னையின் ஸ்பரிசம் இருந்தால் ஒரு குழந்தை எவ்வளவு பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக இருக்க முடியுமோ, அந்த அளவிற்கு மகிழ்ச்சியும், பாதுகாப்பும் நம்மிடம் இருக்க மகாலட்சுமியின் அருள் கட்டாயம் தேவை. மகாலட்சுமி 108 பொருட்களில் நிறைந்திருப்பதாக ஐதீகம் உண்டு. 108 பொருட்களில் வாசம் செய்யும் மகாலட்சுமி ஆனவர் நம் வீட்டில் இருக்கும் நிறைய பொருட்களிலும் வாசம் செய்து கொண்டிருக்கிறார்.

mahalakshmi1

அவரை தகுந்த முறையில் நாம் மரியாதை கொடுத்து பக்தியுடன் பாதுகாத்து வந்தால் நமக்கு அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகிக் கொண்டே செல்லும் என்பது சூட்சும பரிகாரம் ஆகும். சிறு சிறு விஷயங்களில் கூட மகாலட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படுகிறது. வீட்டில் விளக்கு ஏற்றுவது முதல் வீட்டை சுத்தம் செய்வது வரை அனைத்திலும் மகாலட்சுமி இருக்கிறார். சமைக்கும் சாப்பாட்டிலும், எண்ணும் எண்ணங்களிலும், சொல்லும் வார்த்தைகளிலும் கூட மகாலட்சுமி ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அசுப வார்த்தைகளை பேசும் பொழுது உங்களை விட்டு தானாகவே பணம், காசு ஓடி போய்விடும்.

- Advertisement -

இப்படி நம்முடன் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒன்றி இருக்கும் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் மாதுளை மரமாகும். இந்த மரத்தின் ஒரு சிறு குச்சியும் மிகப் பெரிய அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கக் கூடியது என்பது சூட்சும ரகசியம் ஆகும். மாதுளை குச்சியில் இருக்கும் அற்புதங்கள் ஏராளம். நீங்கள் பணம் வைக்கும் இடங்களில் ஒரு சிறு மாதுளை குச்சியை ஒடித்து வைத்துக் கொண்டால் பணமானது வீண் விரயம் ஆகாமல் உங்களிடம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்குமாம்.

madhulai 5

இந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி செல்வ செழிப்பு அதிகரிக்க நீங்கள் சமையல் செய்யும் சாப்பாட்டு அரிசியில் ஒரு துண்டு மாதுளை குச்சியை புதைத்து வையுங்கள். எப்போதும் இந்த மாதுளை மரத்தின் குச்சி அரிசிப் பானையில் இருந்து கொண்டே இருந்தால் உங்களிடம் செல்வமானது பெருக துவங்கும். மேலும் மகாலட்சுமிக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதன் மூலமும், வெள்ளிக்கிழமையில் நெய் தீபம் போடுவதும் சிறந்த பலன்களை கொடுக்கும். பித்ரு வழிபாடு முறையாக செய்து வருபவர்களுக்கு, எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு அளிப்பவர்களுக்கு, பெரியவர்களை மரியாதையுடன் நடத்துபவர்களுக்கு இந்த எல்லாம் பாக்கியமும் நிச்சயம் கிடைக்கும்.

- Advertisement -