பலநாள் பணப் பிரச்சனையிலிருந்து வெளிவர 1 ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும். வராத கடனையும் வசூல் செய்யலாம். வாங்கிய கடனையும் திருப்பி கொடுக்கலாம்.

vendhayam
- Advertisement -

பணப்பிரச்சனையில் மனிதர்களுக்கு இரண்டு வகையான பிரச்சனை இருக்கும். ஒன்று கடனை கை நீட்டி வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்போம். இரண்டாவது நாம் யாருக்காவது கடன் கொடுத்து இருப்போம். அந்த கடனை வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருவோம். பணம் என்றாலே அது பிரச்சினையை கொடுக்கக் கூடிய விஷயம் தான். அதை நினைத்து கவலை படாதிங்க. நீங்கள் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கடனை வசூல் செய்ய வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது புதிய நோட்டாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் வீட்டில் எழுதாமல் வைத்திருக்கும் புதிய நோட்டுப்புத்தகமாக இருந்தாலும் சரி. அந்த நோட்டுப் புத்தகத்தில் வேறு எந்த விஷயத்தையும் எழுதி வைத்திருக்கக் கூடாது. அந்த புத்தகத்தை பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து கொண்டு வைத்திருக்கும் நோட்டுப் புத்தகத்தை எடுத்து ஒரு பேனாவை எடுத்து அந்த நோட்டில் இப்படி எழுத வேண்டும். கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த நோட்டுப் புத்தகத்தின் மேல் ஒரு பிள்ளையார் சுழியை போட்டுவிட்டு ‘என்னுடைய கடனை கூடிய சீக்கிரம் திருப்பிக் கொடுக்க வேண்டும்’. என்று எழுதி மனதார குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் பிரார்த்தனை செய்து 5 வெந்தயத்தை அந்த பேப்பரின் மேல் வைத்து நோட்டுப் புத்தகத்தை மடித்து அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதேபோல 48 எட்டு நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

கடனை வசூல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பிள்ளையார் சுழியை போட்டுவிட்டு, ‘என்னுடைய பணம் சீக்கிரமே திரும்பி என் கையில் வந்து சேர வேண்டும்’ என்று எழுதி வைத்து அந்த காகிதத்தின் மேல் ஐந்து வெந்தயத்தை வைத்து மூடி விட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் இந்த நோட்டுப் புத்தகத்தில் மேல் சொன்ன விஷயத்தை நம்பிக்கையோடு எழுத வேண்டும். ஒவ்வொரு நாளும் இப்படி எழுதும் போது நீங்கள் எழுதிய எழுத்துக்கு மேலே ஐந்து வெந்தயத்தை வைத்து நோட்டுப் புத்தகத்தை மூடி வைக்கப் போகிறீர்கள். அவ்வளவு தான்.

- Advertisement -

நாற்பத்தி எட்டாவது நாள் இந்த நோட்டுப் புத்தகத்தில் இருக்கும் வெந்தயத்தை எல்லாம் எடுத்து பறவைகளுக்கு சாப்பிட இறையாக போட்டு விடலாம். அல்லது கால் படாத இடத்தில் போட்டுவிடலாம். நோட்டுப் புத்தகத்தை மட்டும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். கடன் தொகை வசூல் ஆகும் வரை அந்த புத்தகம் அப்படியே பூஜை அறையிலோ அல்லது வேறு ஏதாவது அலமாரியிலோ அப்படியே இருக்கட்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பக்கத்தை எடுத்து புரட்டி எழுதிக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையோடு தினம் தினம் நீங்க இந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கக்கூடிய அந்த பணப் பிரச்சனை நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரும். நம்பிக்கையை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டுள்ள தாந்திரீக பரிகாரம் இது. இதை முயற்சி செய்து பாருங்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுடைய பண பிரச்சனைக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -