பண சிக்கல் தீர தை அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த 4 ஒரு ரூபாய் நாணயப் பரிகாரம்

cash-deepam-vilakku
- Advertisement -

பணப் பிரச்சினை என்பது குடும்பத்திற்கு குடும்பம் இருக்கின்ற ஒரு சமூக ரீதியான பிரச்சனை தான். இன்றைய சமுதாயத்த்ல் ஒருவன் வெளியில் சென்று பணம் சம்பாதித்து வருவதென்பது மிகவும் போட்டியாக மாறிவிட்டது. எவர் ஒருவர் மற்றவர்களை விட முன்பாக சொல்கிறானோ அவனுக்கு மட்டுமே அன்றைய தினத்தில் வேலை இருக்கிறது. எனவே ஒவ்வொருவர் இடையேயும் போட்டிகள் உருவாகிவிட்டது. எனக்குத்தான் இந்த பணம் வேண்டும், எனக்குத்தான் இந்த வேலை வேண்டும் என்று ஒவ்வொருவரும் தன்னை பற்றி மட்டும் தான் சுயநலமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது எனது குடும்பமும் நானும் வாழ்ந்தால் தானே மற்றவர்களை பற்றி யோசிக்க முடியும் என்றாகி விட்டது.

ஆகையால் முதலில் தனக்கானதை மட்டுமே மனிதன் யோசிக்கிறான். இவ்வாறு பணத்தை சம்பாதிப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதுபோல குடும்பத்தில் இருப்பவர்கள் இடையே பலவித கருத்து மோதல்களும், சண்டைகளும் இந்த பணத்தின் மூலமாகவே உருவாகின்றன. இவை அனைத்திலிருந்தும் விடுபட இந்த தை அமாவாசை பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனபிறகும் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றாலும், கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் உண்டாகும். ஏனென்றால் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கும் இருக்கின்ற ஒன்றாகும். எனவே ஒவ்வொரு நாளும் போராட்டமாகத் தான் இருக்கும்.

இது மட்டுமல்லாமல் தங்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றி கொள்வதற்காக அவர்கள் செய்யத் துவங்கும் ஒவ்வொரு காரியமும் தோல்வியில் மட்டுமே முடியும். அல்லது ஒரு விஷயத்தை செய்ய துவங்குவதற்கு முன்னரே பல தடங்கள் வந்துகொண்டிருக்கும். எதையும் நினைத்தவுடன் செய்ய முடியாமலிருக்கும் இதுபோன்ற தடங்கல்கள் விலகவும், பணப்பிரச்சனை தீரவும் செய்யவேண்டிய சிறப்பு பரிகாரம்.

- Advertisement -

முதலில் இந்த பரிகாரம் செய்வதற்கு நான்கு மண் அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மஞ்சள், குங்கும பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு நான்கு கைப்பிடி பச்சை அரிசி எடுக்க வேண்டும். பின்னர் 4 பஞ்சு திரி, நல்லெண்ணெய் மற்றும் நான்கு ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பரிகாரத்தை இரவு ஒன்பது மணிக்கு செய்ய வேண்டும். அத்துடன் இந்த பூஜை முறையை உங்கள் வீட்டின் மொட்டைமாடி அல்லது பால்கனி போன்ற இடத்தில் செய்ய வேண்டும். முதலில் நீங்கள் பூஜை செய்ய தேர்ந்தெடுக்கும் இடத்தை தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அங்கு மஞ்சள் தடவி நான்கு திசைகளிலும் குங்கும பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த குங்கும பொட்டின் மீது நான்கு திசைகளிலும் ஒரே ஒரு கைப்பிடி அரிசியை வைக்க வேண்டும். பிறகு அந்த அரசியின் மீது நான்கு அகல் விளக்குகளையும் வைத்துவிட வேண்டும்.

பின்னர் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த விளக்குகளின் நடுவே சிறிதளவு பூக்களை வைக்க வேண்டும். இந்த தீபம் எரியும் பொழுது அந்த இடத்தில் எரியும் விளக்குகளை அனைத்து விட வேண்டும். ஏனென்றால் இந்த தீபம் இருட்டில் தான் எரிய வேண்டும். இந்த தீபத்தை அப்படியே விட்டுவிட்டு நீங்கள் உறங்கச் சென்று விடலாம். மறுநாள் காலை விளக்கை சுத்தம் செய்துவிட்டு, அரிசியை அப்படியே எடுத்து வைக்க வேண்டும். இதனை மறு மாதம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஏழு மாதங்கள் செய்ய வேண்டும். இதில் வைத்துள்ள ஒரு ரூபாய் நாணயத்தை சிவப்புத் துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். மறு மாதம் இந்த ஒரு ரூபாய் நாணயங்களை குலதெய்வக் கோவில் அல்லது ஏதேனும் ஒரு தெய்வத்தின் உண்டியலில் போட்டு விட வேண்டும்.

- Advertisement -