பணத்தடை நீங்க வெல்லம் பரிகாரம்

cash wakeup
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரின் முக்கிய பிரச்சனையே பணம் தான். பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடியே அனைவரின் வாழ்க்கையும் பாதிக்கு மேல் வீணாகி விடுகிறது. இது தெரிந்தாலும் கூட வேறு வழி இல்லை நாம் ஓடித் தான் ஆக வேண்டும். அப்படி ஓடியே பலரால் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகிறது.

இதற்கெல்லாம் காரணம் பண பற்றாக்குறை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சிலர் என்ன தான் பாடுபட்டாலும் குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவர்களால் செல்லவே முடியாது. இன்னும் சிலரோ வேலை செய்வார்கள் ஆனால் அதற்கான ஊதியம் கைக்கு வராது. இப்படி பணம் வராமல் இருப்பதும் வந்தாலும் தங்காமல் போவதற்கும் பல காரணங்கள் உண்டு.

- Advertisement -

சரி காரணங்கள் என்னவென்று ஆராய்வதை விட அதிலிருந்து தப்பித்து பணத்தை எப்படி சேமிப்பது என்று பார்க்கலாம். ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பணத்தடை பணத்தட்டுப்பாடு நீங்குவதற்கான எளிய ஒரு பரிகார முறையை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணப்பிரச்சனை தீர பரிகாரம்

முதலில் பணம் நம்மிடம் தங்குவதற்கும் பணம் நம்மிடம் சேராமல் போவதற்கும் பண ஈர்ப்பு தன்மை இல்லாமல் போவது ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இது மட்டும் இன்றி இன்னும் சிலர் கர்ம வினையால் உழந்து கொண்டிருப்பார்கள். அவர்களால் எத்தனை முயன்றாலும் வாழ்க்கையில் அவ்வளவு எளிதில் முன்னேற முடியாது.

- Advertisement -

இன்னும் சொல்லப் போனால் இவர்கள் கடன் தொல்லையால் பெரிதும் அவதிப்படுவார்கள் என்று கூட சொல்லலாம். இப்படியான சூழ்நிலைகள் நீங்கி நம்முடைய கர்மாக்கள் தொலைய செய்யக் கூடிய எளிய ஒரு தான பரிகார முறையை தான் செய்யப் போகிறோம். இதற்கு நீங்கள் நாள் கிழமை என எதையும் பார்க்க வேண்டாம். நீங்கள் நினைக்கும் நாளன்று இதை செய்ய தொடங்கி விடுங்கள்.

இதை பரிகாரத்தை செய்வதற்கு காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து விட வேண்டும். குளித்து முடித்த பிறகு முதலில் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு விடுங்கள். இந்த கோலத்தை முடிந்த வரையில் பச்சரிசி மாவினால் போடுங்கள் அது மிக மிக நல்லது. அதன் பிறகு பூஜை அறையில் உங்கள் குலதெய்வம், இஷ்ட தெய்வம் போன்றவரை மனதார நினைத்துக் கொண்டு ஒரு சிறிய கட்டி வெல்லத்தை வையுங்கள்.

- Advertisement -

வெல்லத்தை பூஜையறையில் வைத்த பிறகு உங்களுடைய பணத்தடை, பண பிரச்சனை என பணம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் சொல்லி அது சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த வெல்ல கட்டியை எடுத்து சென்று உங்கள் வீட்டிற்கு வெளியே நீங்கள் போட்ட கோலத்தின் மேல் நடுவில் வைக்க வேண்டும். அவ்வளவு தான் பரிகாரம்.

நீங்கள் வைத்திருக்கும் இந்த வெல்ல கட்டியை வாயில்லா பூச்சிகள், எறும்புகள் போன்றவை உண்ணும். இதனால் உங்களுடைய கர்மாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உங்கள் வாழ்க்கையில் நிம்மதி நிலவ ஆரம்பிக்கும். நிம்மதி நிலவுவது என்றால் நம்முடைய தேவைகள் அனைத்தும் நிறைவேறினாலே நிம்மதி தானே.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் வெற்றி பெற சொல்ல வேண்டிய அம்மன் மந்திரம்

அது மட்டும் இன்றி இது வரை இருந்து வந்த காரியத்தடை, பணத்தடை போன்றவை எல்லாம் மெல்ல மெல்ல விலக ஆரம்பிக்கும் அதிசயத்தை நீங்களே கண்கூடாக காண்பீர்கள். இந்த முறையும் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து பின்பற்றிய ஒரு முறை தான். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதைப் பின்பற்றி நல்லதொரு மாற்றத்தை பெறலாம்.

- Advertisement -