குடும்பத்தில் பணத்தடை நீங்கி குபேர யோகம் பெற செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன தெரியுமா? மறந்தும் இதை செய்ய மறக்காதீர்கள்!

Kuberan valipadu
- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், பணத் தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உயர மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் முக்கியம். செல்வ கடவுளாக இருக்கும் குபேரனை வழிபடுவது கூட செல்வ செழிப்பை அதிகரிக்க செய்யும் ஒரு முக்கிய வழிபாடு ஆகும். குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்க, தன தானியம் பெருக செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

kuberan

பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கு மற்றும் வீட்டில் தன, தானியத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்க வியாழனில் குபேர வழிபாடு செய்வது மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும். அதே போல குரு பகவான் வழிபாடு வியாழன் கிழமையில் செய்ய காரிய தடை அகன்று நல்ல விஷயங்கள் நடைபெறத் துவங்கும்.

- Advertisement -

உங்கள் படுக்கை அறை அமைப்பு, அங்கு நீங்கள் பணப்பெட்டியை வைத்திருக்கும் திசை ஆகியவை குபேரனுக்கு உகந்த முறையில் வாஸ்து படி அமைத்து உள்ளீர்களா? என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். பின்னர் வடக்கு திசையில் எப்பொழுதும் ஒரு சிறிய மண் பானையில் சில்லரை நாணயங்களைப் போட்டு வையுங்கள். வீட்டின் வரவேற்பறையில் அனைவரும் பார்க்கும்படி ஏலக்காய்களை வாங்கி ஒரு கண்ணாடி பௌலில் போட்டு வையுங்கள். இந்த பவுல் திறந்த நிலையில் இருக்க வேண்டும். ஏலக்காய் உடைய வாசம் வீடு முழுவதும் பரவும் பொழுது, அங்கு குபேர யோகம் உண்டாகும் என்கிறது சூட்சம சாஸ்திர குறிப்புகள்.

தன, தானியம் பெருக எப்பொழுதும் உங்கள் வீட்டு அரிசி பானையில் ஒரு ரூபாய் நாணயங்களைப் போட்டு வையுங்கள். அரிசி பெட்டியில் பணம், நாணயம் போன்றவை இருக்கும் பொழுது அங்கு தனமும், தானியமும் தாராளமாக பெருகும் என்பது நம்பிக்கை. எனவே வெறுமனே வைக்காமல் இது போல நாணயங்களை ஆவது போட்டு வையுங்கள். இதே முறையில் கல் உப்பையும் பீங்கான் ஜாடியில் போட்டு அதனுள் 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு வைக்கலாம்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் எப்பொழுதும் விளக்கு ஏற்றும் காமாட்சி அம்மன் விளக்கிற்கு அடியில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து பின்னர் விளக்கு ஏற்றி வர குடும்பத்தில் இருக்கும் வருமான தடை, பணத்தடை அகன்று செல்வ செழிப்பு உயரும். நம் பாட்டி காலத்தில் எல்லாம் சமையலறையில் ஆங்காங்கே பணத்தை சேமித்து வைப்பார்கள். உண்மையில் பணத்தை சேமிக்க சமையலறை சிறந்த இடமாக ஆன்மீக குறிப்புகள் கூறுகிறது.

anjaraipetti2

பணத்தை கிடைக்கும் பொழுது எல்லாம் மசாலா டப்பாவில் போட்டு வைப்பது, உப்பு டப்பாவில் போட்டு வைப்பது அல்லது ஏதாவது ஒரு டப்பாவில் சமயல் அறையில் போட்டு வைப்பது மிகவும் நல்ல பழக்கம் ஆகும். அப்படி போடும் பணம் எவ்வளவு இருக்கிறது? என்பது நமக்கே தெரியக் கூடாது. இப்படி சூட்சமமாக பெண்கள் செய்து வந்தால் நிச்சயம் அவர்களுடைய செல்வச் செழிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உயரும். இந்த வகையில் பீரோவில் எப்பொழுதும் கொஞ்சம் பணத்துடன், பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து வையுங்கள்.

pachai-karpooram2

பணமும், பச்சை கற்பூரமும் எங்கு சேர்ந்து இருக்கிறதோ! அந்த இடங்களில் எல்லாம் பணம் தாராளமாக பெருகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கல்லாப் பெட்டியில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம். பச்சைக் கற்பூரத்திற்கு அப்படி ஒரு அதீத சக்தி உண்டு. பச்சை கற்பூரம் என்பது சாதாரண கற்பூரம் போல அல்ல, அதற்குரிய தெய்வீக தன்மையே வேறு எனவே அனாவசியமாக அவற்றைப் பயன்படுத்தாமல், தேவையான வகையில் பயன்படுத்தி நிச்சயம் பலன் பெறலாம்.

- Advertisement -