பணத் தேவையை பூர்த்தி செய்யும் கசகசா

kasakasa
- Advertisement -

இந்த உலகத்தையே ஆட்டி படைக்கும் வல்லமை மிக்க ஒரு பொருளாக கருதப்படுவது தான் பணம். பணம் இல்லாமல் நம்மால் ஒரு நாள் அல்ல ஒரு நிமிடம் கூட வாழ முடியாது என்றுதான் கூற வேண்டும். நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய மிகவும் முக்கியமான ஒன்றாக தான் பணம் திகழ்கிறது. அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதற்காக தான் அனைவரும் ஓடி ஓடி உழைக்கிறோம். அப்படி உழைத்தாலும் பணத்தை ஈட்ட முடியாத சூழ்நிலை பலருக்கும் இருக்கிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் சமையலுக்கு உபயோகப்படுத்தும் கசகசாவை வைத்து எப்படி பண தேவைகளை பூர்த்தி செய்வது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

எந்த அளவுக்கு கடினமாக நாம் முழைக்கிறோமோ அந்த அளவிற்கு தான் பணத்தை நம்மால் சம்பாதிக்க முடியும். அப்படியே சம்பாதித்தாலும் அதை சேமித்து வைப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. பலருக்கு வீண் விரயம் ஏற்பட்டு பணம் கையிலே தங்காமல் போய்விடும். தங்களுடைய தேவைக்கு அந்த பணத்தை உபயோகப்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்படும். இப்படி பணம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் எவ்வளவு பெரிய பண தேவையாக இருந்தாலும் அதை பூர்த்தி செய்யும் ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை திங்கள், புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் செய்வது மிகவும் சிறப்புக்குரியது. முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முகம் தெரியும் அளவிற்கு எவ்வளவு குறைவாக தண்ணீர் ஊற்ற முடியுமோ அவ்வளவு குறைவாக ஊற்றி அதில் உங்கள் முகத்தை பாருங்கள். அப்படி பார்க்கும் பொழுது உங்களுடைய பணத் தேவை எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை அந்தத் தொகையை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அந்த தண்ணீரிலிருந்து கால் டம்ளர் அளவிற்கு மட்டும் தண்ணீர் எடுத்து அதை கால் டம்ளர் காய்ச்சாத பசும்பாலில் ஊற்ற வேண்டும். பிறகு அதில் ஒரு வெள்ளை நிற துணியை நனைத்து அதை பிழியாமல் காய போட வேண்டும். துணி நன்றாக காய்ந்த பிறகு அதை இடது கையில் வைத்து விட்டு வலது கையில் ஒரு ஸ்பூன் கசகசாவை அந்த துணியில் வைத்து அந்த துணியை மூட்டையாக கட்ட வேண்டும். இவ்வாறு கட்டும் பொழுதும் நாம் ஏற்கனவே வேண்டிய பண தேவையை மனதிற்குள் நினைத்து மனதார வேண்ட வேண்டும்.

- Advertisement -

ஒரு டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள். இது எந்த உலோகத்தில் இருந்தாலும் பரவாயில்லை. அதில் இந்த மூட்டையை வைத்து அதற்கு மேல் அரிசியை போட்டு நிரப்ப வேண்டும். பச்சரிசியோ அல்லது சாப்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் அரிசியோ, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த மூட்டை வெளியில் தெரியக்கூடாது. இப்பொழுது இதை மூடி போட்டு ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். சரியாக ஒரு மாதம் கழித்து இதை மாற்றி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நீண்ட நாட்களாக பிரிந்து இருக்கும் கணவனும் மனைவியும் ஒன்று சேர பரிகாரம்

இந்த தாந்த்ரீக முறையை பின்பற்றி நம்முடைய பணத் தேவையை நாம் பூர்த்தி செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

- Advertisement -