பண வரவு அதிகரிக்க அட்சய திருதியை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

mahalashmi7
- Advertisement -

இன்றைய தினம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் அட்சய திருதியை. எல்லோரும் வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். குடும்பத்தோடு சேர்ந்து கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்ய வேண்டும். இறைவனின் பரிபூரண ஆசி இன்று உங்கள் குடும்பத்திற்கு கிடைத்தால் அது பல நன்மைகளை கொடுக்கும்.

ஆகவே இன்றைய தினம், இறை வழிபாடு செய்வது அவசியம். உங்களால் முடிந்த அளவுக்கு அடுத்தவர்களுக்கு அன்னதானம் கொடுங்கள். உங்களுடைய நிதி நிலைமையை பொருத்து எத்தனை பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க முடியுமோ, வாங்கி கொடுங்க. பல தலைமுறைகளுக்கு புண்ணியத்தை கொடுக்கும் தானம் அன்னதானம் மட்டும் தான்.

- Advertisement -

இதோடு சேர்த்து நம்முடைய பண பிரச்சனையை தீர்த்துக் கொள்ளவும், நமக்கு வருமானம் அதிகரிக்கவும், செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்று எல்லோர் வீட்டிலும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி பூஜை இருக்கும். அந்த பூஜையை செய்யும் போது இந்த பரிகாரத்தையும் கூடவே செஞ்சிருங்க. உங்கள் பண பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

பணக்கஷ்டம் தீர்க்கும் பரிகாரம்

ஒரு புது ரூபாய் நோட்டு எடுத்துக்கோங்க. எந்த ரூபாய் நோட்டா இருந்தாலும் சரி, 10 ரூபாய் நோட்டில் இருந்து, 500 ரூபாய் நோட்டு வரை உங்களிடம் இருக்கக்கூடிய ஒரு நோட்டை எடுத்துக்கோங்க. அந்த நோட்டு ரொம்பவும் நசுங்காமல், கொஞ்சம் புதுசாக இருந்தால் நல்லது. ஒரே ஒரு துண்டு வசம்பை மகாலட்சுமி பாதத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். தீப தூப ஆராதனை காண்பித்து மகாலட்சுமியை வழிபாடு செய்த பிறகு, இந்த வசம்பை எடுத்து ரூபாய் நோட்டில் வைத்து, அப்படியே அந்த ரூபாய் நோட்டை வசம்பில் சுற்றி விட வேண்டும். இது அவிழாமல் இருப்பதற்கு ஒரு மஞ்சள் நூல் போட்டு கட்டிக் கொள்ளவும்.

இந்த நோட்டை அப்படியே உங்களுடைய வலது கை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, பணம் உங்களுக்கு பல மடங்கு பெருக வேண்டும், பல மடங்கு வருமானம் அதிகரிக்க வேண்டும், என்ற பிரார்த்தனையை மகாலட்சுமி தாயாரிடம் செய்யுங்கள். பிறகு கையோடு வசம்பில் சுற்றி வைத்திருக்கும் நோட்டை, பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். பரிகாரம் இவ்வளவு தான்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இன்று மாலை மாலட்சுமி பூஜை செய்யும் போது, உங்களுடைய வீட்டில் செய்துவிட்டால், இந்த வருடம் முழுவதும் பணம் உங்களை நோக்கியே வர தொடங்கி விடும். வசம்பில் பணத்தை எப்படி சுற்றி வைத்திருக்கிறீர்களோ, அதே போல அந்த பணம் அனுதினமும் உங்களை சுற்றிவர தொடங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்க அட்சய திருதியை பரிகாரம்

அந்த ஒரு துண்டு வசம்பு பணத்தை உங்களுக்கு வசியப்படுத்தி கொடுத்து விடும். பண வரவை அதிகப்படுத்தும் இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு செய்தவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -