குபேரை நினைத்து ஐந்து ரூபாய் நாணயத்தை இப்படி செய்த பின் வரவேற்பறையில் வைத்து பாருங்கள் பணத்தை தேடி நீங்கள் அலையவே வேண்டாம் பணம் உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.

kuberar five rupee coin
- Advertisement -

இன்றைக்கு இருக்கும் பண தேவைக்கு ஒரு மனிதன் ஒரு நாள் முழுவதும் உழைத்தாலும் கூட அதை ஈடு செய்ய முடிவதில்லை. ஏனெனில் வரும் வருமானத்திற்கு மீறி தான் செலவு ஆகிறதே தவிர வருமானத்திற்குள் செலவு அடங்குவதே இல்லை. இதற்காக நாம் எந்த ஒரு செலவையும் குறைத்துக் கொள்ள முடியுமா என்றால் அதுவும் கொஞ்சம் சந்தேகம் தான். ஆடம்பர செலவுகளை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளலாம். அத்தியாவசிய தேவைக்கு போதாத போது என்ன செய்வது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு பண வரவு அதிகரிக்க வேண்டும். இந்த பணவரவை அதிகரிப்பதற்கான ஒரு பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பண வரவு அதிகரிக்க வேண்டும் எனில் பரிகாரம் செய்தால் போதுமா? என்று கேள்வி அனைவர் மனதிலும் எழும். பரிகாரம் செய்வதால் மட்டும் பணவரவு அதிகரிக்காது. பணவரவு அதிகரிக்க நிச்சயம் நாம் உழைக்க வேண்டும் அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் உழைக்கும் அனைவரிடமும் பணம் தங்குகிறதா என்ற ஒரு கேள்வியும் உள்ளது. நாளெல்லாம் பாடுபட்டாலும் ஒரு ரூபாயும் சேமிக்க முடிவதில்லை, சிலருக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கூட கிடைப்பதில்லை, சிலருக்கு பணம் வர வேண்டிய இடத்தில் இருந்து வராமல் தடைபட்டுக் கொண்டிருக்கும். இந்த தடைகளை தகர்த்தெறிவதற்கான ஒரு பரிகாரத்தை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பண வரவு அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்
இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு சிறிய சிகப்பு நிற துண்டு, ஐந்து ரூபாய் நாணயம், ஒரு கைப்பிடி உப்பு இவை மூன்றும் இருந்தால் போதும். இதையெல்லாம் முதல் நாள் இரவே தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறை வேலை அனைத்தையும் கூட முதல் நாளே முடித்து வைத்து விடுங்கள்.

வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்து முடித்து முதலில் உங்கள் பூஜை அறையில் அன்றைய தின பூஜை வேலைகளை முடித்து விளக்கேற்றி வழிபட்ட பிறகு, இந்த சிகப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கைப்பிடி நிறைய உப்பை வைத்து உப்பின் மேல் இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து மஞ்சள் நிற நூலால் முடிச்சு போல கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து கற்பூர தீபாராதனை காட்டி உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டி வணங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த முடிச்சை உங்கள் வீட்டு வரவேற்பரையின் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். இதை அப்படியே வைக்கலாம் அல்லது கட்டி தொங்க விடலாம் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வரவேற்பு அறையில் வடகிழக்கு மூலையில் இந்த முடிச்சு இருக்க வேண்டும். இந்த முடிச்சிலுள்ள ஐந்து ரூபாய் நாணயமானது குபேரரை குறிக்கும். உப்பு மகாலட்சுமி தாயாரை குறிக்கும். அதே போல இந்த திசையும் குபேரருக்கு உரியதாக சொல்லப்படுகிறது. ஆகையால் வடகிழக்கு மூலையில் இதை வைக்கும் போது உங்கள் வீட்டிற்கான பணவரவு தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா? வீட்டில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறதா? அப்போ துர்கை அம்மனை வீட்டிலேயே இப்படி வழிபட்டு பாருங்கள். எந்த வகையான கண் திருஷ்டியாக இருந்தாலும் அது விலகி ஓடியே விடும்.

இந்த எளிய பரிகார முறையில் நம்பிக்கை இருக்கும் நம்பிக்கையுடன் இந்த பரிகார முடிச்சு கட்டி வைத்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணத்தடைகள் அனைத்தையும் நீங்கி பணவரவு அதிகரிக்க செய்து கொள்ளலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -