பணம் உங்களை நோக்கி வந்து கொண்டே இருக்க, பணத்தை பீரோவில் வைக்கும் போது இந்த ஒரு வார்த்தையை மட்டும் பயன்படுத்தி பாருங்கள். இனி பண தட்டுப்பாடு என்பதே உங்களுக்கு இருக்காது

- Advertisement -

பணம் இந்த வார்த்தை கேட்காத இடமே இன்று இல்லை என்று சொல்லலாம். பணம் நம் வாழ்க்கையில் அத்தனை இன்றியமையாத ஒரு விஷயமாக மாறி விட்டது. வாழ்க்கைக்கு பணம் இருந்தால் போதும் என்ற நிலை மாறி, பணம் இருந்தால் தான் வாழ்க்கையே என்ற நிலைமை இப்போது வந்து விட்டது. இவ்வளவு முக்கியமான இந்த பணத்தை நாம் எப்படி நம் வசமாக்குவது என்பதை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணத்தை நம் வசம் ஆக்க வேண்டும் என்றால் நாம் எதுவும் செய்யாமல் இருந்து கொண்டு பணம் ஆனது நம்மை தேடி வர வேண்டும் என்பது அல்ல. நாம் உழைத்து சம்பாதிக்கும் பணம் நம் கையில் தங்கி அது பல மடங்கு பெருக வேண்டும் என்பதே. இப்படி நாம் வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேற்றம் அடைய ஒரு சில விஷயங்களை பின்பற்றினால் அது நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணத்தை நாம் கையாள சில வழிமுறைகள் உள்ளது. அதன் படி கையாளும் போது பணமானது நம்மிடம் தங்கி பல மடங்கு பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு நீங்கள் கொஞ்சம் பணத்தை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தும் பணத்தை நாம் செலவு செய்யக் கூடாது. இதற்கு 200 ரூபாயை பத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த பணத்தை செலவு செய்யக் கூடாது. எனவே அதிக பணத்தை நம்மால் எடுத்து வைக்க முடியாது அல்லவா!

இந்த 200 ரூபாயை நாம் தினமும் எடுத்து எண்ண வேண்டும். அதாவது பணத்தை எண்ணும் போது நாம் சொல்ல வேண்டிய அந்த முக்கியமான வார்த்தை கவுண்ட் (count). இந்த வார்த்தையை திரும்பத், திரும்ப சொல்ல வேண்டும். நீங்கள் 200 ரூபாயை கையில் எடுத்து 10, 20, 30 என்று எண்ண தேவையில்லை. ஆனால் நோட்டை எண்ணும் போது கவுன்ட் என்ற வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.  இந்த வார்த்தை சொல்லி பணத்தை எண்ணிய பிறகு பீரோவில் வைத்து விடுங்கள். மறுபடியும் அடுத்த நாள் எடுத்து எண்ணுங்கள். இதே போல தினமும் செய்யும் போது பணமானது நம்மை தேடி வரும் யோகம் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதற்குக் காரணம் 200 ரூபாயில் இரண்டு நூறு ரூபாயாக எடுத்தால் இரண்டு நோட்டுகள் மட்டுமே இருக்கும். பத்து ரூபாய் நோட்டாக மாற்றும் போது இருபது நோட்டுகள் அதாவது கை நிறைய பணம் இருப்பது போல் தோன்றும். இதை தினமும் எடுத்து எண்ணும் போதும் வைக்கும் போதும் நம் மனதுக்குள்ளே நம்மிடம் இவ்வளவு பணம் இருக்கிறது என்ற எண்ணம் வரும். இந்த எண்ணத்தினால் மேலும் மேலும் நம்மிடம் பணம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் இந்த கவுண்ட் என்ற வார்த்தைக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

அது மட்டும் இன்றி உங்கள் கையில் இருக்கும் பணத்தை யாருக்காவது கடனாகவோ அல்லது எதையாவது வாங்க கொடுக்கும் பொழுது பணத்தை மடித்து மடிப்பின் திறந்த பகுதி உங்கள் பக்கமும், மூடிய பகுதி வாங்குபவரின் பக்கமும் இருக்கும்படி கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் கையில் இருந்து செல்லும் பணம் மறுபடியும் பெருகி உங்களுக்கு வரும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: மாங்கல்ய பலம் நீடிக்க சுமங்கலிகள் குங்குமம் வைக்கும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? சந்தனம், குங்குமம் வைப்பதன் பின்னணியில் இப்படி ஒரு அறிவியல் உண்மை இருக்கிறதா?

பணத்தை உழைத்து தான் பெற வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உழைத்து பெற்ற பணம் அதிகரிக்க, இது போல சின்ன சின்ன பரிகாரங்களை செய்வதால் நடக்கும் என்றால் நாம் அதை செய்து தான் பார்ப்போமே. இந்த பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த முறையை பின்பற்றி பாருங்கள்.

- Advertisement -