செல்வ வளத்தை கொடுக்கும் அறிகுறிகள். தன யோகம் கொடுக்கும் கனவு பலன்கள்

kanavu
- Advertisement -

எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும், வேலையில் எப்பொழுது உயர் பதவி கிடைக்கும், சொந்த வீடு நம்மால் எப்பொழுது கட்ட முடியும், இந்த தொகை நம் கைக்கு எப்பொழுது வரும் இவ்வாறு பல கேள்விகள் பலரது மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் ஒவ்வொருவருக்கும் முன்கூட்டியே தெரிந்து விட்டால் அதற்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் இவற்றையெல்லாம் நம்மால் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாது. சில நேரங்களில் ஒரு சில அறிகுறிகளின் மூலம் இவற்றை தெரிந்து கொள்ள வாய்ப்பபு கிடைக்கிறது. அவ்வாறு நமக்கு நடக்கவிருக்கும் விஷயங்களைப் பற்றிய அறிகுறிகள் மற்றும் அவற்றின் பலன்கள் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

home

ஒரு சில கனவுகள் நமது கடந்த காலத்தையும், இறந்த காலத்தையும் குறிப்பதாக இருக்கும். அவ்வாறு ஒரு சில கனவுகள் நமது எதிர்காலத்தை குறிப்பதாக இருக்கும். இவ்வாறு நம்மிடம் பணம் வருவதற்கான அறிகுறியையும் ஒரு சில கனவுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மீன் சம்பந்தமான கனவுகள் அதாவது மீன் பிடிப்பதுபோன்றோ, மீன்கள் வலையில் மாட்டிக் கொள்வது போன்றோ, அல்லது மற்றவர்களிடமிருந்து நீங்கள் மீனை வாங்குவது போன்றோ கனவு ஏற்பட்டால் உங்களுக்கு தனவரவு கிடைக்கப் போகிறது என்று அர்த்தமாகும்.

chicken-gravy1

மாமிசம் மற்றும் மாமிசம் உண்பது போன்ற கனவுகள் ஏற்பட்டால் உங்களிடம் பண வரவு அதிகரிக்க போவதாக அர்த்தம். பால் என்பது தெய்வாம்சம் நிறைந்த ஒரு பொருளாகும். இதனை குடிப்பது போன்ற கனவு ஏற்பட்டால் பண வரவை அதிகரிக்கும்.

- Advertisement -

அவ்வாறு வெள்ளை நிறத்தில் இருக்கும் வெண்தாமரை, வெண்ணிற விலங்குகள் போன்றவற்றை கனவில் கண்டால் பணவரவு அதிகரிக்கும். அவ்வாறு வெள்ளைநிற குதிரையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

lotus

மனிதக் கழிவை கனவில் கண்டால் நம்மிடம் இருக்கும் தீயவை அழிந்து நமக்கு நன்மை கிடைக்கப் போவதாக அர்த்தம். வானில் இருக்கும் சந்திரன், சூரியன், வானவில், கழுகு இவற்றை கனவில் கண்டால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையப் போவதாக அர்த்தமாகும்.

- Advertisement -

கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் தீர்ந்து புண்ணியம் கிடைத்ததாக அர்த்தம். அது மட்டும் அல்லாது பரம்பரை சொத்துகள் நிலுவையில் இருந்தால் அவையும் நம் கையில் கிடைக்கப் போவதாக அர்த்தமாகும். நமது கனவில் தெய்வங்களை கண்டால் நமது வேண்டுதல் நிறைவேற போவதாகவும், செல்வம் பெருகவும் அர்த்தமாகும்

Murugan kovil.

குழந்தைகள், இனிப்பு வகைகள் இவற்றை கனவில் கண்டால் வாழ்வில் நன்மை தரக்கூடிய விஷயங்கள் நடக்க போவதாக அர்த்தமாகும். பசு மற்றும் கன்றை கனவில் கண்டால் மகாலட்சுமியின் ஆசி நமக்கு கிடைக்கப் பெற்றதாக அர்த்தமாகும். இதனால் செல்வ நிலை அதிகரிக்கும்.

Baby names Tamil

கோவில் மணி அடிப்பது போன்றோ, அல்லது கோவில் மணியை கனவில் கண்டாலோ நீண்ட நாட்களாக வராத சொத்து, பணம் கைக்கு வரப்போவதாக அர்த்தமாகும். யாராவது நம்மை ஆசீர்வதிப்பது போன்று கனவில் தோன்றினால் இறையாசி நமக்கு கிடைக்கப் பெற்றதாக அர்த்தமாகும். இதனால் நமது பணக்கஷ்டம் தீரர்ந்து தனவரவு அதிகரிக்கும்.

- Advertisement -