பணவசியம் ஏற்பட பரிகாரம்.

pana vasiyam
- Advertisement -

இந்த உலகத்தையே ஆட்டிப் படைக்கும் வல்லமை மிக்க பொருளாக திகழக்கூடியதுதான் பணம். யாரிடத்தில் பணம் அதிகமாக இருக்கிறது அவர்களின் பேச்சை பலரும் கேட்பார்கள். அதேசமயம் நியாயமாக பேசினாலும் அவர்களிடம் பணம் இல்லாத பட்சத்தில் அவர்களை ஒரு பொருட்டாக மதிக்கவே மாட்டார்கள். அப்படிப்பட்ட ஆற்றல் மிகுந்த பணத்தை வசியம் செய்வது எப்படி என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி சம்பாதித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். அதே சமயம் இந்த சமுதாயத்தில் ஒரு உயரிய அந்தஸ்தை பெறுவதற்கும் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட பணத்திற்கு அதி தேவதையாக விளங்கக்கூடியவர் தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை மட்டும் வணங்கினால் பணம் கிடைக்காது. மகாலட்சுமி என்பவள் பதிவிரதை. தன்னை வணங்கா விட்டாலும் தன் பதியான நாராயணனை வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை நாம் புதன்கிழமை அல்லது சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இந்த இரண்டு நாட்களும் பெருமாளுக்கு உரிய நாட்களாக கருதப்படுகிறது. அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு பிரசாதமாக பூ, துளசி, குங்குமம் போன்றவற்றை தருவார்கள். இவை மூன்றையும் பத்திரமாக எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு சிறிய பாட்டிலில் அங்கு இருக்கும் குடி தண்ணீரை பிடித்து வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். புதிதாக ஒரு பச்சை நிற துணியை எடுத்து அதில் நாம் எடுத்து வந்த தண்ணீரை ஊற்றி நன்றாக கழுவி அந்த துணியை காய போட வேண்டும்.

- Advertisement -

நன்றாக காய்ந்ததும் நமக்கு பிரசாதமாக பெருமாள் கோவிலில் கொடுத்த பூ துளசி மற்றும் குங்குமத்தை அந்த துணியில் வைத்து அதனுடன் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் வைத்து மூட்டையாக கட்ட வேண்டும். கட்டிய இந்த மூட்டையை பூஜையறையில் இருக்கும் பெருமாளின் புகைப்படத்திற்கு முன்பாக வைத்து அவரிடம் மனதார நம்முடைய வேண்டுதலை கூற வேண்டும்.

பிறகு இந்த மூட்டையை பூஜை அறையிலேயே வைத்திருக்கலாம் அல்லது பணம் வைத்திருக்கும் பெட்டியில் வைக்கலாம். தொழில் செய்பவர்களாக இருந்தால் அவர்களின் கல்லாப்பெட்டியில் இந்த மூட்டையை வைத்துவிட வேண்டும். 15 நாட்கள் வரை இந்த மூட்டை அப்படியே இருக்கட்டும். 16வது நாள் இந்த மூட்டையை ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும். தேவைப்பட்டால் மறுபடியும் இந்த பரிகாரத்தை புதிதாக செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வாஸ்து குறைபாடு நீங்க உதவும் தீபம்.

இப்படி செய்வதன் மூலம் பணவசியம் என்பது ஏற்பட்டு தடைபட்டிருந்த பணவரவு அனைத்தும் நம்மை தேடி வரும்.

- Advertisement -