போதும் என்ற அளவில் பணம் உங்களைத் தேடி வர தினமும் காலை கண்விழித்ததும் இதனை மட்டும் தொடர்ந்து எழுதிப்பாருங்கள்

cash2
- Advertisement -

“உப்பில்லாத சாதம் குப்பையிலே” என்ற பழமொழிக்கு ஏற்ப “பணம் இல்லாத வாழ்க்கை நிம்மதி இல்லாத வாழ்க்கை” என்பது இன்றைய சமூக நிலையில் நிலவிக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதன் தனது வாழ்க்கையை சாதாரணமாக வாழ்வதற்கும் பணம் மிகவும் அவசியமாக இருக்கிறது. பணம் சம்பாதிக்க வேலை கிடைக்கவேண்டும். ஆனால் அதிலும் போட்டிகள் இருக்கின்றன. கிடைக்கின்ற வேலைக்கு சென்றாலும் அதில் வரக்கூடிய வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இருப்பதில்லை. வாங்கிய வருமானத்திற்கு மேல் செலவு இருப்பதனால் ஒரு இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கும் மிகவும் போராட்டமான நிலைமை தான் இருக்கிறது. இவ்வாறான போராட்டங்கள் விலகும், பணம் போதுமென்ற அளவிற்கு நம்மை தேடி வருவதற்கு நம்பிக்கையுடன், முழுமனதுடன் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். நிச்சயம் ஒருநாள் உங்களுக்கு இதன் பலன் கிடைக்கும். வாருங்கள் இதனை எப்படி முறையாக செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Govt job

பணம் படைத்தவனிடம் குணமிருக்காது,குணம் படைத்தவனிடம் பணம் இருக்காது என்பது முன்னோர் வாக்கு. ஆனால் இன்றைய காலகட்டம் எவராக இருந்தாலும் அவர்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதில்லை. எப்படி பணத்தை அதிக அளவில் சம்பாதித்து மற்றவர்களை விட முன்னேறி செல்ல முடியும் என்பதை பற்றிதான் அனைவரும் யோசித்து கொண்டிருக்கின்றனர். இதற்காக பலவித வேலைகளை செய்கின்றனர்.

- Advertisement -

ஒரு சில நேர்மையான வழியில் மட்டுமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஒரு சிலர் இவற்றை எல்லாம் தகர்த்து, பிறரை அழித்து, தீய வழியில் சென்று, பணத்தை சேமிக்கின்றனர். ஆனால் இவ்வாறு தீய வழியில் சென்று சேமிக்கும் பணம் நமது வாழ்க்கையில் நிம்மதியை கொடுப்பதில்லை. என்றாவது ஒருநாள் நம்மை அழித்துவிடுகிறது. உலகில் மிகவும் வலிமையான ஒன்று மனிதனின் எண்ணங்கள் தான். நமது எண்ணத்திற்கு ஏற்ப தான் நமக்கு பலன்கள் கிடைக்கின்றன.

cash

இதுவரை உங்களிடம் பணம் அதிகமாக சேர வேண்டும் என்ற எண்ணத்தை தினமும் மனதில் நினைத்து கொண்டிருந்தால் அந்தப் பலன் நிச்சயம் உங்களை வந்து சேரும். அதற்காக தினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு, தர்ண்ணீர், உணவு ஏதும் அருந்துவதற்கு முன்னர் ஒரு பேப்பர் மற்றும் பேனாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பேனாவின் நிறம் வெள்ளையாக இருக்க வேண்டும். அதில் எழுதப்படும் மையின் நிறம் பச்சை அல்லது சிகப்பாக இருந்தால் அதிக பலன் கொடுக்கும்.

handwriting

எந்த பேனாவை பயன்படுத்தி நோட்டு அல்லது பேப்பரில் “ஏராளம் எண்ணிக்கை 3300” “Eralam ennikkai 3300” என்று தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஒரு பக்கம் முழுவதும் எழுத வேண்டும். பின்னர் இந்த வார்த்தையை ஒரு நாளில் முப்பத்தி ஐந்து முறையாவது மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். ஒரு முறை இரண்டு முறை செய்துவிட்டு பலன் கிடைக்கவில்லையே என்று விட்டு விடாமல் தொடர்ந்து இதனை எழுதி வர வேண்டும். இவ்வாறு செய்வது நிச்சயம் உங்களுக்குப் பலனைத் தரக்கூடும்.

- Advertisement -