இந்த புதிய வருடம் உங்களிடம் பணம் அதிகமாக சேர, பணத்தை ஈர்க்கும் இந்த ஐந்து வழிமுறைகளை தவறாமல் கடைபிடித்து வாருங்கள்

panam
- Advertisement -

காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக தனது காலை வேலைகளை முடித்து அனைவரும் வீட்டை விட்டு வெளியில் சென்று விடுகின்றனர். இதற்கு என்ன காரணம்? அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஏதேனும் ஒரு தொழிலையோ, வேலையையோ செய்துவர வேண்டும். அதன்மூலம் கிடைக்கின்ற வருமானத்தை வைத்து தான் வாழ்க்கை நடத்த முடியும். இவ்வாறு குடும்பத்தை பிரிந்து, வெகு தூரத்திற்கு சென்று, கிடைக்கின்ற வேலையை செய்து, சரியாக உணவு இல்லாமல், தூக்கம் இல்லாமல் இப்படி பாடுபட்டு உழைப்பது அனைத்துமே பணத்திற்காகத் தான். பணம் இருந்தால் மட்டுமே மனிதன் இந்த உலகத்தில் உயிர் வாழ முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையாகும். இந்த பணத்தை நம்மிடம் ஈர்ப்பதற்காக செய்ய வேண்டிய ஐந்து வழிமுறைகளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

2022ஆம் ஆண்டு இனிதாக துவங்கிவிட்டது இந்த வருடத்தில் அனைவரும் சுகமாக வாழவும், நல்ல வருமானம் ஈட்டவும் எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும். இதற்காக நமது இல்லங்களில் செய்யவேண்டிய சில சிறப்பு வழிமுறைகளை பின்பற்றி வருவதன் மூலம் பணத்தை வெகுவாக நம்மிடம் இருக்க முடியும்.

- Advertisement -

இந்த வருடத்தின் முதல் வாரத்தில் வரக்கூடிய செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பூஜை செய்யும்பொழுது ஒரு தாம்பூலத்தட்டில் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக பரப்பி கொள்ள வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி, தீபாராதனை காண்பித்து முடித்த பின்னர், உங்களுக்கு இந்த வருடத்திற்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதனை மோதிர விரலை பயன்படுத்தி மஞ்சளில் எழுத வேண்டும். பின்னர் இதனை ஒரு நாள் முழுவதும் பூஜை அறையில் அப்படியே வைத்துவிடவேண்டும்.

பிறகு இந்த மஞ்சளை ஒரு டப்பாவில் வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெளியில் செல்லும்போது இந்த மஞ்சளை நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும் இதன் மூலம் பணத்தை வெகுவாக நம்மிடம் ஈர்க்க முடியும். அடுத்ததாக வீட்டின் வாசலில் கற்பூரவள்ளி செடியை வளர்ப்பதன் மூலம் பண வரவை அதிகரிக்க முடியும்.

- Advertisement -

ஒருவரிடம் பணத்தை வாங்கும்பொழுது லாபம் என்று மூன்று முறை மனதில் சொல்லிக் கொண்டு வாங்க வேண்டும். ஒருவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது அக்ஷய என்ற வார்த்தையை மூன்று முறை சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலம் நம்மிடம் வரும் பணமாகட்டும், நம்மை விட்டு செல்லும் பணமாகட்டும் நம்மிடம் பல மடங்காக திரும்பி வந்துவிடும்.

அடுத்ததாக ஒரு 5 ஏலக்காய் சிறிய கிண்ணத்தில் வைத்து, அதனை வீட்டின் வரவேற்பு அறையில் வைத்துவிட வேண்டும். இதிலிருந்து வரும் நறுமணம் எதிர்மறை சக்திகளை அதிகரித்து, பணத்தை நம்மிடம் ஈர்த்துக் கொடுக்கிறது. அடுத்ததாக பணம் வைக்கும் பீரோவில் பணத்துடன் சேர்த்து ஆறு வெற்றிலை, மூன்று பாக்கு இவற்றை சேர்த்து வைக்க வேண்டும். இதன் மூலம் பணப் பெட்டியில் வைக்கப்படும் பணம் விரைவில் இரட்டிப்பாகும்.

- Advertisement -