உங்கள் வீட்டு பீரோவில் இந்த விதைகள் மட்டும் இருந்தால் போதும் பணமும், நகையும் குறையாமல் சேர்ந்து கொண்டே இருக்கும்

cash1
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடினமாக உழைத்து கொண்டிருக்கிறான். குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் சிலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூர்களுக்கு சென்று வேலை பார்த்து வருகிறார்கள். இப்படி பணத்தை சம்பாதித்தால் மட்டுமே ஒரு கௌரவமான வாழ்க்கையை வாழ முடியும். அப்படி சம்பாதிக்கிற பணம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் அதற்கு சில சூட்சம காரியங்களையும் செய்து தான் ஆக வேண்டும். ஒரு சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் தங்க வில்லையே என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள், அதுமட்டுமில்லாமல் வாங்கி வைத்திருந்த அனைத்து நகையும் அடிக்கடி அடகிற்க்கு சென்று கொண்டிருந்தால் பெண்கள் மனவருத்தத்தில் இருப்பார்கள். இப்படி உங்கள் பீரோவில் இருக்கும் பணமும்,நகையும் சேர்ந்து கொண்டே இருக்க இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள். இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் உடைமைகளையும், பணம் மற்றும் நகைகளை வைத்திருப்பதற்கு பணப்பெட்டி அல்லது பீரோவை பயன்படுத்துவார்கள். இப்படி மிகவும் முக்கியமான பொருட்கள் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் இந்த அலமாரிகளை மிகவும் சுத்தமாகவும், ஐஸ்வரியமாகவும் வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்யும் பொழுது, சாம்பிராணி தூபம் போட்டு அந்த அலமாரிகளுக்கு காண்பிக்க வேண்டும். பெண்கள் வீட்டுக்கு தூரம் போன்ற நாட்களில் இந்த பீரோக்களைத் தொடாமல் இருக்க வேண்டும். அடுத்ததாக கோவிலுக்கு சென்று வாங்கி வந்த மஞ்சள், குங்குமம் மற்றும் துளசி போன்ற மங்களகரமான பொருட்களை அலமாரியில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு மங்களகரமான பொருட்களை பீரோவில் வைத்திருப்பதன் மூலம் நேர்மறையான ஈர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இவற்றின் மூலம் உங்கள் கையில் இருக்கும் பணம், நகை அதிகரித்துக்கொண்டே இருக்கும். அவ்வாறு பல மடங்கு ஈர்ப்பு சக்தி கொண்ட இந்த விதைகளையும் உடன் சேர்த்து வைத்தால், உங்கள் பீரோவில் அள்ள அள்ள குறையாத செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

- Advertisement -

அதற்காக நாட்டு மருந்துக் கடைகளுக்குச் சென்று இந்த விதைகளை வாங்கி கொள்ள வேண்டும். அதற்கு முதலாவதாக தாமரைமணி விதைகள், வெண் பூசணி விதைகள், நாய்க்கடுகு, பாதாம் பிசின் கடைசியாக சிறிதளவு சாம்பிராணி இவை அனைத்தையும் சேர்த்து ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த கண்ணாடி டப்பாவை ஒரு நாள் இரவு முழுவதும் பூஜை அறையில் வைத்து விட்டு, மறுநாள் பூஜை செய்யும்பொழுது இதற்கும் தூப தீப ஆராதனை காண்பிக்க வேண்டும். பிறகு இந்த டப்பாவை நீங்கள் பணம் வைக்கும் பீரோவில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரித்து கொண்டே இருக்கும். வீண் விரயம் என்பது ஆகாது. தங்க நகைகளும் அதிகமாக சேர்ந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -