வாஸ்து கூறும் இந்த ரகசியங்களை தவறாமல் கடைப்பிடித்தால் நாமும் பணக்காரர் ஆக முடியுமா என்ன?

- Advertisement -

பல்வேறு சாஸ்திரங்களில் வாஸ்து சாஸ்திரமும் மிக முக்கியமான பங்களிப்பை உலக மக்களுக்குக் கொடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு மிகப்பெரிய வரமாகவே கருதப்பட்டு வருகிறது. அதனை சரியாக பின்பற்றி வந்தால் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிக் கொண்டே செல்லலாம் என்பது நம்பிக்கை. குப்பையில் இருப்பவரை கோபுரத்திலும், கோபுரத்தில் அமர்ந்து இருப்பவரை குப்பை மேட்டிற்கும் கொண்டு வந்து விடும் சக்தி வாஸ்துவிற்கு உண்டு. அதில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களைக் கடைப்பிடித்தால் நாமும் பணக்காரர் ஆக முடியுமா? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

வாஸ்து முறைப்படி நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கமாக தலை வைத்து தூங்கினால் உங்கள் கைக்கு அடிக்கடி பணமானது வந்து கொண்டே இருக்குமாம். உங்கள் வீட்டில் எது மேற்கு? என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு, அந்தப் பக்கத்தில் தலையை வைத்துக் கொண்டு தூங்குங்கள். காலையில் சூரியன் கிழக்கு பக்கமாக உதிக்கும் பொழுது உங்கள் முகத்திற்கு நேரே சூரிய ஒளி பட வேண்டும். அதற்கு எதிர் திசையில் தான் நீங்கள் மேற்குப்புறமாக தலையை வைத்து படுக்க வேண்டும். தவறியும் கூட வடக்குப் புறத்தில் தலையை வைத்து தூங்க கூடாது. வடக்கில் தலை வைத்து தூங்கினால் சம்பாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் குறைந்து சோம்பேறி தனம் மேலிட ஆரம்பிக்குமாம்.

- Advertisement -

வெளியில் செல்லும் போது, அதிக பணத்தை கொண்டு செல்லும் சமயங்களில் நீங்கள் எப்பொழுதும் சிவப்பு நிறத்தில் உடையை அணிந்து செல்வது மிகவும் விசேஷமான பலன்களைக் கொடுக்கும். சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிறத்தில் கூட நீங்கள் உடைகளை அணிந்து கொள்ளலாம். வீடு வாங்குவது, விற்பது போன்ற அதிக பணம் புழங்கும் விஷயங்களில் இவ்வாறு செய்ய எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். இந்த நிறத்தில் உடை அணியவில்லை என்றாலும், ஒரு சிறு கர்சீஃப் ஆவது கையில் எடுத்து செல்லுங்கள் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

வீட்டின் எந்த ஒரு இடத்திலும் தண்ணீர் தேங்குவது அல்லது அதன் மூலம் உண்டாகும் பூஞ்சைகள் போன்றவற்றால் நிச்சயம் கடன் பிரச்சினைகள் ஏற்படும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். எனவே தண்ணீர் குழாய்களை சரியாகப் பராமரியுங்கள். அதில் தண்ணீர் ஒழுகுவது என்பது அதிகமான கடனை வரவழைக்கும். எனவே எந்த ஒரு இடத்திலும் தண்ணீர் தேங்காமல், பூஞ்சை பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வாஸ்து படி உங்கள் வீட்டின் கிழக்கு திசையில் ஒரு சிறிய மண் பானை ஒன்றை வைத்து அதில் சில்லரை நாணயங்களைப் போட்டு யாருடைய கண்களிலும் படாதவாறு மறைத்து வையுங்கள். அந்த பானையை எதைக் கொண்டும் மூடி வைக்கக் கூடாது. அப்படியே திறந்த நிலையில் மறைமுகமாக வைக்க வேண்டும். உங்கள் கைகளில் கிடைக்கும் சில்லரை நாணயங்களை அவ்வப்போது போட்டு வாருங்கள். பானை நிறைந்த பின் அதில் இருக்கும் சில்லரை நாணயங்களை கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். இவ்வாறு செய்து வர பணமானது உங்களிடம் தானாகவே வந்து சேர்ந்து கொள்ளுமாம்.

நீங்கள் வீட்டில் சாப்பிட அமரும் இடத்தில் ஒரு மிகப்பெரிய கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். அந்த கண்ணாடியில் நீங்கள் சாப்பிடும் உணவு வகைகள் தெரியுமாறு வைக்க வேண்டும். அப்படி செய்வதால் பணமானது உங்கள் வீட்டில் இருப்பதை விட இரண்டு மடங்காக பெருகுமாம். மேலும் உங்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் ஒரு மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். அதில் ஒன்பது என்கிற எண்ணிக்கையில் மீன்களை நிரப்பி வைக்க வேண்டும். குறிப்பாக அதில் 8 சிகப்பு அல்லது பொன் வண்ண நிறத்தில் இருக்கும் மீன்களும், ஒரே ஒரு கருப்பு மீண்டும் சேர்ந்து இருக்க வேண்டும். இப்படி செய்ய அதிர்ஷ்டம் உங்களைத் தேடி ஓடி வருமாம்.

- Advertisement -