இந்த அற்புத தீபத்தை உங்கள் வீட்டில் ஒரு நாள் முழுவதும் எரிய விட்டால் போதும். பணம் மலை போல் குவிய ஆரம்பிக்கும்

uppu
- Advertisement -

மனிதனுக்கு தேவைகள் என்பது இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் அந்தப் பணம் தனது குடும்ப வாழ்க்கைக்குப் போதுமானதாக இருப்பதில்லை. குறைந்த பணம் சம்பாதிப்பவருக்கும் சரி, அதிக பணம் சம்பாதிப்பவருக்கும் சரி அவர்களின் வாழ்க்கை சூழ்நிலையைப் பொறுத்து தேவைகள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றன. இப்பொழுதெல்லாம் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கே அதிகம் சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. எனவே பணம் என்பது போதிய அளவிற்கு இல்லை என்பது தான் அனைவரின் வருத்தமாகும். இப்படி பண பிரச்சனை நீங்கவும், வீண் செலவுகள் குறையவும், உங்கள் இல்லத்தில் பணம் அதிகரித்துக் கொண்டே இருக்கவும் இந்த இருபத்தி நான்கு மணி நேர தீப வழிபாட்டை மாதம் ஒருமுறை செய்து வாருங்கள். இதனை சரியான முறையில் செய்து வந்தால் நீங்கள் எதிர்பார்த்திராத பலன் உங்களுக்கு கிடைக்கும். வாருங்கள் இந்த தீப வழிபாட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்த வழிபாடு செய்வதற்கு வீட்டில் உள்ள ஒரு பொருள் மட்டும் போதும். இந்த ஒரு பொருள் மட்டுமே உங்கள் இல்லத்தில் இருக்கும் எதிர்மறை அதிர்வுகளை அழித்து, நல்ல ஒரு முன்னேற்ற வழியை கொடுத்து விடும். இப்படி அதிசக்தி வாய்ந்த இந்த ஒரு பொருள் என்னவென்றால் அது நீங்கள் தினமும் பயன்படுத்தும் உப்பு தான்.

- Advertisement -

இந்த உப்பை வைத்து கண் திருஷ்டி உள்ளவர்களுக்கு கண் திருஷ்டி நீக்க முடிகிறது. பொதுவாகவே உப்பிற்கு எதிர்மறை சக்திகளை ஈர்த்துக் கொள்ளும் திறன் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உப்பு மகாலட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. பார்க்கடலை கடையும் பொழுது கடலில் இருந்து தோன்றியவர் தான் மகா லட்சுமி தேவி. எனவே உப்பும் மகாலட்சுமி தேவியாகும்.

முதலில் இந்த தீபம் ஏற்றுவதற்கு சரியான நேரத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் முதல் நாள் எந்த நேரத்திற்கு நீங்கள் விளக்கு ஏற்றுகிறார்களோ, மறுநாள் அதே நேரத்தில் தான் இந்த விளக்கை எரியவிட வேண்டும். முதலில் ஒரு தாம்பூலத் தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

அதேபோல் பெரிய மண் தட்டு அல்லது வாய் அகன்ற மண் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு அகல் விளக்குகளையும் எடுத்துக்கொண்டு, இவை அனைததிற்க்கும் மஞ்சள், குங்கும பொட்டு வைக்க வேண்டும். பிறகு தாம்புல தட்டின் மீது மண் தட்டை வைத்துவிட்டு அதற்கு மேல் கோபுரம் வடிவில் நிறைந்து இருக்குமாறு உப்பைக் கொட்டி கொள்ள வேண்டும். பின்னர் உப்பின் மீது ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உப்பு வைத்து விட வேண்டும்.

பிறகு உப்பின் மீது ஒரு அகல் விளக்கை வைத்துக் கொண்டு, அதில் அட்சதை சேர்க்கவேண்டும். அட்சதை என்றால் சிறிதளவு பச்சை அரிசியுடன் மஞ்சள் மற்றும் ஒரு சிட்டிகை எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் மீது அகல் விளக்கை வைத்து, எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு மறுநாள் இதே நேரத்தில் விளக்கைக் தானாக மலையேற விட வேண்டும். பின்னர் இந்த உப்பை ஒரு பக்கெட் தண்ணீரில் கரைய விட்டு, அதனை கால் படாத இடத்தில் ஊற்றிவிட வேண்டும். இவ்வாறு மாதம் ஒருமுறை செய்துவர உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -