இந்த 1 வேரை பணப்பெட்டியில் இப்படி வைத்தாலே போதும். தெருக்கோடியில் இருப்பவரையும், பல கோடிக்கு சொந்தக்காரராக மாற்றக்கூடிய சக்தி இந்த வேருக்கு உண்டு.

cash4
- Advertisement -

கஷ்டத்தில் வறுமையில் இருப்பவர்களைக் கூட, வெகு சீக்கிரத்தில் பணக்காரராக மாற்றக்கூடிய சக்தி சில தாந்த்ரீக பரிகாரத்திற்கு உண்டு. அதாவது சில பேருடைய வாழ்க்கையில் வறுமை நீங்காமல் இருக்கும். துரதிர்ஷ்டம் அவர்களுடைய வாழ்க்கையோடு ஒட்டிக் கொண்டு, வாழ்க்கையை புரட்டிப் போடும். இப்படிப் பட்டவர்களும் இந்த தாந்திரீக ரீதியான பரிகாரத்தை செய்து பலனடையலாம். அடுத்தபடியாக, சில பேர் பரம்பரையாக ஆண்டாண்டு காலமாக நன்றாக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து இருப்பார்கள். ஏதோ ஒரு கால சூழ்நிலையின் காரணமாக, சொத்துக்கள், பணம் நகைகளை, இடைப்பட்ட காலத்தில் இழந்திருப்பார்கள். இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கவும் இந்த தார்மீக ரீதியான பரிகாரங்கள் உடனடியாக கைமேல் பலனை கொடுக்கும்.

money-1

ஏழையாக இருப்பவர்கள் பணக்காரராக மாறவும், இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கவும் நம்முடைய பணப்பெட்டியில் எந்த வேரை, எப்படி வைக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள். இந்த வேரை முடிந்தவரை நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வாங்கிக் கொள்ளலாம். முடிந்தால் உங்கள் வீட்டினருகில் இந்த மரம் இருக்கும் பட்சத்தில், அந்த வேரை உங்கள் கையாலேயே எடுத்து பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்க்கு நாம் பயன்படுத்த போவது ஆல மரத்து விழுது வேர். ஆலமரத்தின் அடியில் இருக்கும் வேர் கிடையாது. ஆலமரத்தில் விழுதுகள் மேலே இருந்து கீழே தொங்கியபடி இருக்கும். அந்த விழுதில், எந்த விழுது பூமியைத் தொட்டு இருக்கின்றதோ, அந்த வேரை சிறிதளவு உங்கள் கையாலேயோ அல்லது கூர்மையான கல் கொண்டோ, உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பு கத்தியை வைத்து எக்காரணத்தைக் கொண்டும் வேரை அறுத்து எடுக்கக்கூடாது.

alamaram

இந்த வேரை வீட்டிற்கு கொண்டுவந்து, மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு, அதன் பின்பு சுத்தமான நீரில் கழுவி விட வேண்டும். சுத்தி செய்யப்பட்ட வேர் அப்படியே இருக்கட்டும். சுத்தமான ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெற்றிலையின் மேல் கொஞ்சம் மஞ்சள் தூளை எடுத்து தண்ணீரில் குழைத்து தடவிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு தயாராக இருக்கும் வேரை எடுத்து, மஞ்சள் தடவிய வெற்றிலையின் மேல் வைத்து, சுருட்டி மடித்து மஞ்சள் நூல் போட்டு கட்டி அப்படியே பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

உங்களுடைய கஷ்டத்திற்காக, உங்களுடைய சொத்துக்களை அடமானம் வைத்திருப்பீர்கள். நகைகளை அடமானம் வைத்து இருப்பீர்கள். அந்த ரசீது பத்திரம் இருக்கும் இடத்தில் கூட வெற்றிலையில் மடித்த இந்த ஆல மர வேரை வைத்தால், இழந்த செல்வங்களை மீண்டும் சீக்கிரமே மீட்டெடுத்து விடலாம்.

vetrilai

உங்களுடைய கஜானா காலியாக இருக்கும் பட்சத்தில், இந்த வெற்றிலை முடிச்சை அந்த பண பெட்டியிலோ அல்லது பர்ஸிலோ வைத்துக்கொள்ள வேண்டும். நிச்சயமாக பணம் பல வழிகளில் உங்களது பணப் பெட்டியை நிரப்பும் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்.

manjal

பழைய வேரை மீண்டும் மீண்டும் பரிகாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். வெற்றிலையை மட்டும் வாரம் ஒருமுறை புதியதாக வாங்கி, மீண்டும் அதன் மேல் மஞ்சளை தடவி பழைய வேரை ஒரு முறை தண்ணீரில் கழுவி, வெற்றிலையில் வைத்து மீண்டும் மஞ்சள் நூலை போட்டு கட்டி, மீண்டும் பணப் பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். இப்படி எத்தனை நாட்கள் செய்வது? உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும் வரை செய்யலாம். நம்பிக்கையோடு செய்யும் பரிகாரங்கள் யாவும் நல்ல பலனை கூடிய விரைவில் முழுமையாக கொடுக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -