வற்றாத செல்வம் வீட்டில் ஊற்றெடுக்க இந்த 4 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதும். பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர் ஆவதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

gaja-lakshm
- Advertisement -

நம்முடைய வாழ்க்கை அனுபவத்தில் நாம் நிறைய பேரை பார்த்திருப்போம். பணம் வைத்திருப்பவர்கள். மேலும் மேலும் பணக்காரர் ஆகி கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் ஒரு வீடு தான் இருக்கும். ஆனால் மிகக் குறைந்த நாட்களிலேயே ‘நான் வேறு இடம் வாங்கி விட்டேன். அந்த இடத்தில் ஒரு வீடு கட்டி இருக்கின்றேன்.’ என்ற செய்தியை நம்மிடம் வந்து சொல்லுவார்கள். இப்படி சொத்துக்களை பல மடங்காக பெருக்கக்கூடிய வித்தை எப்படி பணக்காரர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது. அவர்கள் அப்படி என்னதான் வேலை செய்கிறார்கள் என்று கூட நமக்குத் தெரியாது. ஆனால் ஆடம்பரமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா. அவர்களுக்கு பணத்தின் மீது உள்ள ஆசை. பணத்தின் மீது இருக்கக்கூடிய மோகம். பணத்தின் மீது இருக்கக்கூடிய காதல்‌. பணம் நம்மிடத்தில் வரும், பணத்தை நம்மால் சேர்க்க முடியும். இந்த சொத்தை இரட்டிப்பாக்க முடியும். நமக்கு மேலும் மேலும் பணம் சேரும் என்ற எண்ணத்தை ஆழ்மனதில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -

இதற்காக பண பிசாசு போல பைத்தியம் பிடித்து அலைய வேண்டும் என்று சொல்லவில்லை. பணம் நமக்கு தேவை. அந்த பணத்தை நாம் சம்பாதிக்க வேண்டுமென்று பணத்தின் மீது காதல் கொள்ளுங்கள். ஆசையோடு அதன் மீது நாம் விருப்பத்தை வைக்கும்போது, அந்த பணம் தானாக நம்மை தேடி வரும். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்று சொல்வார்கள் அல்லவா. அதேதான் இங்கும்.

ஒவ்வொரு படியாக நாம் பணத்தை நோக்கி ஆசையோடு செல்லும்போது, அந்தப் பணமும் ஒவ்வொரு படியாக ஆசையாக நம்மை நோக்கி வரத் தொடங்கும். இது ஒரு சிறிய சூட்சமம் தான். எவ்வளவு தான் சேர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் கையில் இந்த பணம் மட்டும் தங்க மாட்டேங்குது. ‘என்ன பணமோ? இந்த பணத்தை வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம்.’ அப்படின்னு யோசிக்காமல் மகாலட்சுமி தாயாரின் ஸ்வரூபமான பணம் கையில் தங்க வேண்டும். பல மடங்கு சொத்து சம்பாதிக்க வேண்டும். முயற்சி செய்தால் அந்த பணம் நம்மிடத்தில் வந்து விடும் என்ற எண்ணத்தோடு இருந்தாலே போதும். பணக்காரர்கள், மேலும் பணக்காரர்களாக ஆவதற்கு இதுவும் ஒரு சூட்சமமான முறை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தா மேல் சொன்ன விஷயங்களை நீங்களும் ட்ரை பண்ணிக்கோங்க.

- Advertisement -

இது இல்லாமல் தாந்திரீக முறையாக ஒரு சிறிய பரிகாரம் உங்களுக்காக. சிறிய மஞ்சள் பையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு, ஒரு கைப்பிடி அளவு துளசி விதை, 2 ஏலக்காய், 2 கிராம், இந்த பொருட்களை போட்டு அந்த மஞ்சள் பையை சுருட்டி வீட்டில் எங்கெல்லாம் வைக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அங்கெல்லாம் வைக்கலாம்

பணப்பெட்டியில் வைக்கலாம். பூஜை அறையில் வைக்கலாம். வரவேற்பறையில் இருக்கும் அலமாரியில் வைக்கலாம். சமையலறையில் வைக்கலாம். எந்த இடத்தில் இந்த மஞ்சள் பைக்குள் இருக்கும் நான்கு பொருட்களும் ஒன்றாக சேர்ந்து இருக்கிறதோ அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் முழுமையாக நிரம்பி, வீட்டில் செல்வம் அதிகரிப்பதற்கு உண்டான வேலையைச் செய்யத் தொடங்கும். ஆறுமாதத்திற்கு ஒருமுறை இதன் உள்ளே இருக்கும் பொருட்களை மாற்றினால் கூட போதும்.

பெரிய மஞ்சள் பையில் தான் இந்த நான்கு பொருட்களையும் போட வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் உள்ளங்கை அளவு ஒரு மஞ்சள் பையை தயார் செய்து கொண்டு அதன் உள்ளே இந்த நான்கு பொருட்களையும் சிறிதளவு சிறிதளவு போட்டு வைத்தாலும் கூட அதன் மூலம் உங்களுக்கு பல வழிகளில் நன்மை தேடி வரும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -