தினமும் இந்த 1 பொருளை நெற்றியில் இட்டுக் கொண்டால் போதுமே! கோடிகோடியாக பணம், பறந்து வந்து, உங்கள் வீட்டு பணப்பெட்டியை நிரப்பி விடும்.

cash
- Advertisement -

அட! கட்டுக்கட்டாக பணம் பறந்து வந்து நம் வீட்டில், பண பெட்டியை நிரப்பி விடுமா? எந்த பொருளை நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்? என்று, அந்த ரகசியமான ஒரு பொருளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ளீர்களா? அதற்கு முன்பு சில விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கட்டுக்கட்டாக பணம் கைக்கு வந்து சேர வேண்டும் என்றால், முதலில் நாம் தோல்வியை கண்டு துவள கூடாது. எதிர்காலத்தில் உங்கள் கையில் பணம் பணம் கட்டுக் கட்டாக சேரப் போகிறது என்பதை உணர்த்துவதற்கான அறிகுறிதான் தோல்வி. பல தோல்விகளை சந்தித்து, பல கஷ்டங்களை எதிர்கொண்டு, விடாமுயற்சியோடு மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டே இருந்தால் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

cash

ஆக, நீங்கள் தோல்வியை கண்டு பயப்படாமல் இருப்பவர்களாக இருக்க வேண்டும். விடாமுயற்சியை மேற்கொள்பவர்கள் ஆக இருக்கவேண்டும். கடின உழைப்பாளிகளாக இருக்க வேண்டும். கஷ்டங்கள் வந்தாலும் அந்தக் கஷ்டங்களை கடந்து சென்று வாழ்க்கையை வாழ தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி உங்கள் ரத்தத்தில் இருக்க வேண்டும்.

- Advertisement -

இத்தனையும் உங்களிடம் இருந்தால் தான் இப்போது சொல்லப் போகின்ற பரிகாரம் உங்களுக்குப் பலன் தரும். இல்லை என்றால் இந்த பரிகாரத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம். பதிவையும் தொடர்ந்து படிக்க வேண்டாம். இத்தனை நாட்களுக்குள், இந்த பணத்தை சம்பாதித்து இந்தக் குறிக்கோளை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி கொண்டவர்கள் இன்றைக்கே இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கலாம்.

manjal

கடைக்கு சென்று கொஞ்சமாக மஞ்சளை வாங்கி கொள்ளுங்கள். 10 ரூபாய்க்கு குறைந்த அளவில் மஞ்சள் வாங்கிக் கொண்டால் போதும். அந்த மஞ்சளை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். காலை 6 மணி அளவிலோ, மாலை 6 மணி அளவிலோ பூஜை செய்யும் நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, ஒரு பித்தளை தாம்பூலத் தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பித்தளை தட்டு இல்லாதவர்கள், பீங்கான் தட்டை புதியதாக வாங்கிக் கொள்ளுங்கள். எச்சில் பட்ட தட்டையும் பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. தயாராக இருக்கும் தட்டில் நீங்கள் வாங்கிவந்த மஞ்சளை கொட்டி நன்றாக பரப்பி விடுங்கள்.

plate

உங்களுடைய வாழ்நாளில் நீங்கள் எவ்வளவு பணத்தை சம்பாதித்து சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது உங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். சேமிக்க வேண்டிய தொகை என்பது ஒரு லட்ச ரூபாயாக இருக்கலாம், இரண்டு லட்ச ரூபாயாக இருக்கலாம், அல்லது பத்து லட்ச ரூபாய் ஆக கூட இருக்கலாம். ஆனால் இந்தப் பணம் அவரவர் தகுதியை பொறுத்தது.

- Advertisement -

plate1

மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்கள், வருடத்தில் 50 ஆயிரம் ரூபாயை சேமிப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். உங்களுடைய வருமானத்திற்கு ஏற்றவாறு ஒரு வருடத்தில் எவ்வளவு ரூபாய் சேமிக்க வேண்டுமோ அந்த தொகையை சேமிப்பு தொகையை வைத்துக் கொள்ளுங்கள்.

Amman-deepam-1

உங்கள் மனதில் நினைத்து வைத்திருக்கும் அந்த தொகையை தட்டில் பரப்பி வைத்திருக்கும் மஞ்சளில், வலது கை மோதிர விரலால் எழுத வேண்டும். எடுத்துக்காட்டிற்கு ஒரு வருடத்தில், ஒரு லட்சம் ரூபாய் பணம் உங்களுடைய பணப்பெட்டியை நிரப்பவேண்டும் என்றால் அந்த மஞ்சளில் 1,00,000 என்று எழுதி விடுங்கள்.

praying-god

தொகையை எழுதி வைத்திருக்கும் அந்த மஞ்சள் தட்டு ஒரு நாள் இரவு முழுவதும் உங்கள் பூஜை அறையிலேயே இருக்கட்டும். மறுநாள் காலை தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இந்த மஞ்சளை ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை எழுந்தவுடன் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் டப்பாவில் கொட்டி வைத்திருக்கும் இந்த மஞ்சலை தொட்டு உங்களுடைய நெற்றியில் லேசாக இட்டுக்கொண்டு தினசரி வேலைக்கு சென்றால் போதும்.

poojai-turmeric

உங்களது குறிக்கோளை மறந்து விடக்கூடாது. அதற்கான முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். நிச்சயமாக ஒரு வருடத்தில் நீங்கள் எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த அளவிற்கான பணத்தை உங்களால் சேமிக்க முடியும். அதற்கான வழிகளை காட்டக்கூடிய தாந்த்ரீக பரிகாரம் தான் இது.

thilagam

நிச்சயமாக உங்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் இந்த திலகம், தடைகளை தகர்த்து, பணத்தைப் பல வழிகளில் கொண்டு வந்து உங்கள் கைகளில் சேர்க்கும். ஏதாவது ஒரு வழியில் பணம் உங்கள் கைக்கு வந்து கொண்டே இருக்கும். விடாமுயற்சியோடு செயல்பட்டால்! முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -