பணப்புழக்கம் அதிகரிக்க, நகை அடகு போகாமல் இருக்க இந்த ஒரு குச்சியை பணத்துடன் வைத்து தான் பாருங்களேன்!

money-madhulai
- Advertisement -

எல்லோருக்குமே பணத் தேவை என்பது நிச்சயம் இருக்கும். எவ்வளவு பணம் இருந்தாலும், அது வந்த வழியில் வேறு ஒரு விஷயமாக, பொருளாக மாறி சென்று கொண்டே இருக்கும். தேவைக்கு மீறிய செலவு செய்பவர்கள், பணமிருந்தும் செலவு செய்யாமல் இருப்பவர்கள் இது இரண்டுமே தவறான ஒரு விஷயம் தான். பணம் அதிகரிக்கவும், நகை அடகுக் கடைக்கு செல்லாமல் இருக்கவும் செய்யக்கூடிய அற்புத சக்தி இந்த குச்சிக்கு உண்டு. அது என்ன? ஏன் அவ்வாறு கூறப்படுகிறது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

பணப்புழக்கம் அதிகரிக்கவும், அடிக்கடி வீட்டில் இருக்கும் நகை, அடகு கடைக்கு செல்லாமல் இருக்கவும் நம் வீட்டில் சில விஷயங்களை கடைபிடித்து ஆக வேண்டும். பணத்தை திட்டமிட்டு செலவு செய்பவர்களும், திட்டமிடாமல் செலவு செய்பவர்களும் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டவர்கள் தான். இறைக்கிற கிணறு ஊறும் என்பது பழமொழியாகும். இறைக்க இறைக்கத் தான் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கும். அது போல பணத்தை ஒரு இடத்தில் முடங்கி கிடக்கும் படி நீங்கள் செய்து விட்டால் அது அப்படியே முடங்கிப் போய்விடும். மீண்டும் சேர்வதற்கு வாய்ப்புகள் குறைந்துவிடும்.

- Advertisement -

பணம் அதிகரிக்க நல்ல எண்ணங்கள் முதலில் அதிகரிக்க வேண்டும். நல்ல விஷயங்களுக்காக உங்களால் செய்யப்படும் செலவானது எப்படியாவது வேறு ஒரு வழியில் உங்களை மீண்டும் வந்து அடையும். எனவே கையில் பணம் இல்லையே, இருந்திருந்தால் நான் இந்த நல்லது செய்து இருப்பேனே, அந்த நல்லது செய்திருப்பேன் என்று வாயால் கூறுவதை விட இருக்கின்ற பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள்? யாருக்கு செலவழிக்கிறீர்கள்? என்பதை பொறுத்து தான் உங்களுடைய வாழ்க்கையும் அமைகிறது.

பத்து ரூபாய் வைத்து இருந்தாலும் அதில் ஒரு ரூபாய் மற்றவர்களுக்காக செலவழிப்பவர்களிடம் பணம் பன்மடங்கு பெருகும் என்பது தான் சூட்சம விதியாகும். எனவே பணத்தை தேக்கி வைக்காமல் உங்கள் தேவைக்கு மட்டும் செலவு செய்து, மீதம் இருக்கும் பணத்தை ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வாருங்கள். அது மட்டுமல்லாமல் பணத்தை ஈர்க்கக் கூடிய அற்புத சக்தி மாதுளைக்கு உண்டு என்றால் ஆச்சரியப்படுவீர்கள் அல்லவா?

- Advertisement -

மகாலட்சுமி நெல்லிக்காய், மாதுளை, மருதாணி போன்ற மரங்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அந்த வகையில் மாதுளையில் இருக்கும் தெய்வீக அம்சம் உங்களுடைய பணத்தேவையை பூர்த்தி செய்யும் என்று நம்பப்பட்டு வருகிறது. மாதுளை மரத்தில் இருந்து உடைக்கப்பட்ட ஒரு சிறு குச்சி ஒன்றை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் மற்றும் நகை வைத்திருக்கும் இடங்களில் வைத்து விட்டால் போதும்! உங்களுக்கு சரியான வழியில் பணத்தை செலவழிக்கும் யுக்தி கிடைக்கும்.

இதனால் பணமானது தேவையில்லாமல் விரயம் செய்வது தடுக்கப்படும். மாதுளை மரக் குச்சியை பூஜை அறையில் வைத்து மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும். அதன் பிறகு நீங்கள் பணம் வைத்திருக்கும் பீரோ அல்லது பெட்டி ஏதாவது ஒன்றில் அதை வைத்து விடுங்கள். அதில் வாசனை மிகுந்த மற்ற சில பொருட்களை சேர்ப்பதன் மூலமும் பணம் சேரும். பச்சை கற்பூரம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு, துளசி இலைகள், மல்லிகைப்பூ போன்றவையும் பணத்தை ஈர்க்கும் பொருட்கள் ஆகும்.

- Advertisement -