பணம் பலவழிகளிலும் வந்து சேர திருப்பதி உண்டியலில் எந்த நாணயங்களை போட வேண்டும் தெரியுமா?

perumal-cash
- Advertisement -

எல்லோருக்குமே பணம் வீட்டில் செழிக்க ஆசை தான். நாம் உழைக்கின்ற உழைப்பு வீணாகி போகாமல் எல்லோரைப் போலவும் நாமும் பணத்தை அதிகம் சேர்த்து நம் குடும்பத்தையும் உயர்வான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற விருப்பத்துடன் எல்லோருமே இருப்பது நியாயம் தான். இதற்காக நாம் பணத்தாசை பிடித்தவர்கள் ஆக ஆகிவிட முடியாது. உழைப்பே இல்லாமல் பணம் வரும் என்று நினைப்பது தான் முட்டாள்தனமே தவிர, நம் உழைப்பை கொடுத்து, அதன் பலனை அனுபவிக்க இறை வழிபாடு செய்வது முட்டாள்தனம் ஒன்றும் இல்லை. அத்தகைய சக்தி மிகுந்த ஒரு வழிபாட்டை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

perumal1

தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களிலெல்லாம் மகாலட்சுமி மற்றும் திருப்பதி பெருமாளுடைய படங்களை மாட்டி வைத்திருப்பதை பெரும்பாலும் நாம் பார்த்து இருக்கிறோம். தொழில் வளத்தை சிறக்கச் செய்யும் ஒரு மாபெரும் சக்தியாக தான் பெருமாள் இருக்கின்றார். இவரை வேண்டி தரிசனம் செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும் என்பது தீவிரமான நம்பிக்கை. துளசி மாலை சாற்றி ஒரு கற்பூரம் ஏற்றி வைத்தால் போதும் இல்லத்தில் எந்த விதமான தீய சக்திகளும் நம்மை அணுகாது.

- Advertisement -

செல்வ செழிப்புக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்த பெருமாள் கோவிலுக்கு செல்லும் முன் உண்டியலில் பணம் சேர்ப்பது வழக்கம். அப்படி நீங்கள் சேர்க்கும் பணமானது எந்த பணமாக இருக்க வேண்டும்? எப்படியான பணமாக இருக்க வேண்டும் தெரியுமா? நீங்கள் தினமும் சம்பாதிக்கும் ரூபாய் நோட்டுகளை செலவிடும் பொழுது உங்களுக்கு கிடைக்கும் சில்லரை நாணயங்களை மட்டும் எடுத்து வைக்க வேண்டும். இந்த நாணயங்களை தினந்தோறும் உங்கள் வீட்டில் பூஜை அறையில் இருக்கும் திருப்பதி உண்டியலில் போட்டு வர வேண்டும்.

coins

எப்போதும் கிடைக்கும் நாணயங்களைப் போடுவது ஒன்றும் பெரிதல்ல ஆனால் நீங்கள் தினமும் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து கிடைக்கக்கூடிய சில்லறை நாணயங்களை இது போல் தினமும் நீங்கள் சேகரித்தால் அது இன்னும் சிறப்பு. ஏனெனில் நாம் சம்பாதிக்கும் ஒரு தொகையிலிருந்து பெருமாளுக்கு செலவிடுகிறோம் என்று கூறும் பொழுது அங்கு நமக்கு பெருமாள் பன்மடங்கு செல்வத்தை வாரி வழங்குவார் என்பது தான் காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

- Advertisement -

இந்த நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு தான் பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் தங்கள் பங்கிற்கு தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு தொகையைக் கொண்டு போய் அங்கு கோடி கோடியாக கொட்டுகின்றனர். இதே தாந்திரீகத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த பரிகாரமும் நம்பப்பட்டு வருகிறது. நீங்கள் தினமும் செலவு செய்யும் 100 ரூபாய் நோட்டுகளில் இருந்து கிடைக்கும் சில்லரை நாணயங்களை திருப்பதி உண்டியலில் சேகரித்து வாருங்கள்.

thirupathi

இதை நீங்கள் தினமும் செய்ய வேண்டும். அப்பொழுது தான் உங்கள் உழைப்பில் ஒரு பங்கு இறைவனுக்கு சென்றடையும். இதன் மூலம் உங்கள் வீட்டில் எப்பொழுதும் பணவரவிற்கு குறைவிருக்காது. எவ்வளவு தடைகள் வந்தாலும், எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் இதே முறையை கடைபிடித்து உண்டியலை நிரப்பி அடிக்கடி திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் உண்டாகும்.

- Advertisement -