படாதபாடு படுத்தும் பணக்கஷ்டத்தை படு வேகமாக வீட்டை விட்டு விறட்ட வசம்பை இப்படி வாங்கி வீட்டில் வைத்தால் போதும்.

vasambu
- Advertisement -

எல்லா நல்லதையும் வசியம் செய்யக்கூடிய சக்தி இந்த வசம்புக்கு உண்டு. வசம்பை வைத்து வசியம் செய்யக்கூடிய நிறைய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த பரிகாரங்கள் எல்லாம் நிச்சயம் பலன் அளிக்கக் கூடியது தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு பரிகாரம் நிச்சயம் முழு பலனை கொடுக்கும். இந்த வசம்பு பரிகாரத்தில் இன்னும் நமக்கெல்லாம் தெரியாத இன்னொரு ரகசிய விஷயத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பெயர் சொல்லாதது என்று கூட சில பேர் இந்த வசம்பை சொல்லுவார்கள். இந்த வசம்பை பேரம் பேசாமல் கடையிலிருந்து வாங்க வேண்டும் என்றும் சிலர் சொல்லுவார்கள். சில பேர் பெயர் சொல்லாமல் வசம்பை கடையிலிருந்து கேட்டு வாங்க வேண்டும் என்று கூட சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இது எல்லாவற்றையும் விட, பரிகாரத்திற்காக வசம்பை நாட்டு மருந்து கடைகளிலிருந்து வாங்கும் போது அதை காசு கொடுத்து வாங்கக் கூடாது என்பதில் தான் சூட்சமமே மறைந்திருக்கிறது.

- Advertisement -

காசு பணம் சேர்வதற்காக பரிகாரத்திற்காக பயன்படுத்தும் வசம்பை இனமாக தான் வாங்க வேண்டும். எப்படி. கடைக்காரர் கொடுப்பாரா? உங்களுக்கு தெரிந்த கடைக்காரராக இருந்தால், அவரிடம் பேசி எப்படியாவது இந்த ஒரு வசம்பை இலவசமாக வாங்கப்பாருங்கள். அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் நண்பர்கள் உறவினர்கள் யாராவது காசு கொடுத்து இந்த வசம்பை வாங்கி கொண்டு வந்து, உங்கள் கையில் இனாமாக கொடுக்க வேண்டும். இந்த முறையில் எப்படியாவது ஐடியாவை செய்து வசம்பை வாங்க வேண்டும். அது உங்களுடைய சாமத்தியம்.

இப்படி இனாமாக வாங்கிய வசம்பை ஒரு 10 ரூபாய் நோட்டிலோ அல்லது 50 ரூபாய் நோட்டிலோ, 100 ரூபாய் நோட்டீலோ, 2000 ரூபாய் நோட்டிலோ உங்களுடைய வசதிக்கு தகுந்தது போல சுருட்டி வைக்க வேண்டும். ரூபாய் நோட்டில் இந்த வசம்பை வைத்து அப்படியே சுருட்டி ஒரு நூலை போட்டு கட்டி வசம்பை பணம் வைக்கும் இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் பணப்பெட்டியில் ஒளித்து வைக்க வேண்டும். வெளி ஆட்கள் கண்ணுக்கும் இது தெரியக்கூடாது. அடிக்கடி பீரோவை திறந்து காசு எடுக்கும் போதும் உங்கள் கண்ணுக்கு கூட இது தெரியக்கூடாது.

- Advertisement -

அப்படி ஒரு இடத்தில் வசம்பை மறைத்து வைத்து விடுங்கள். உதாரணத்திற்கு ஒரு சிறிய டப்பாவில் நோட்டில் சுருட்டி வைத்திருக்கும் இந்த வசம்பை போட்டு அது நிரம்ப சில்லறை காசுகளை கொட்டி வைக்கலாம். அல்லது ஒரு சிறிய கிண்ணத்தின் அடியில் இந்த வசம்பை போட்டுவிட்டு அதன் மேலே நிரம்பக் கல்லுப்பைக் கொட்டி கூட பீரோவில் வைக்கலாம். லட்சுமி அம்சம் இன்னும் பெருகும். இப்படி என்ன செய்தாலும் அது உங்களுடைய இஷ்டம். கண்ணுக்கு தெரியாமல் இந்த வசம்பை வைத்து மறைத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். பிறகு தீராத பணக்கஷ்டம் உங்களுடைய வீட்டில் நிச்சயம் தீர்ந்துவிடும்.

இதில் சிரமமான விஷயமே காசு கொடுக்காமல் வசம்பை வாங்கக் கூடிய ஒரு விஷயம்தான். ஆயிரம் ரூபாய்க்கு நாட்டு மருந்து கடைகளில் பொருளை வாங்கினால் நிச்சயமாக அவரிடம் பேசி இந்த ஒரு வசம்பை இனமாக பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. முயற்சி செய்து பாருங்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நீங்களும் பணக்காரர் ஆகலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -