பணம் பல வழிகளில் பறந்தோடு உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்க வெள்ளிக்கிழமையில் ஒரே நாளில் இந்த மூன்று வழிபாட்டையும் செய்து விடுங்கள் போதும். வாழ்நாள் முழுவதும் பணத்திற்கு பஞ்சமே வராது.

mahalakshmi panam bangles
- Advertisement -

வெள்ளிக்கிழமை என்றாலே அது விசேஷமான நாள் தான். அதிலும் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதற்கான அற்புதமான ஒரு நாள் எனில் அதுவும் இந்த வெள்ளிக்கிழமை தான். வீட்டில் தன வரவை ஏற்படுத்திக் கொள்ள தாயாரை வணங்க வேண்டும் எனில் அதுவும் வெள்ளிக்கிழமையில் தான். அதே போல் சுக்கிர யோகத்தை பெற்று நாம் கோடீஸ்வர வாழ்க்கை வாழ வேண்டும் எனில் அதுவும் இந்த வெள்ளிக்கிழமை தான். ஆக இந்த ஒரு வெள்ளிக்கிழமையில் நாம் செய்யும் எந்த ஒரு வழிப்பாடும் நம்முடைய செல்வ நிலையில் பல மடங்கு உயர்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியான இந்த கிழமையில் நாம் வணங்க வேண்டிய மூன்று வழிபாட்டு முறைகளை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம் இதன் மூலம் நம்முடைய வீட்டில் பண வரவு தாராளமாக அதிகரித்துக் கொண்டே செல்லும்.

பண வரவை அதிகரிக்க வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய வழிபாடு
வெள்ளிக்கிழமை அன்று முதலில் நாம் செய்ய வேண்டிய வழிபாடு எனில் அது மகாலட்சுமி தாயாரை வணங்குவது தான். இந்த நாளில் காலை ஆறிலிருந்து ஏழு மணி வரை சுக்கிர ஹோரை இந்த நேரத்தில் மகாலட்சுமி தாயார் பூஜை செய்வது மிக மிக சிறப்பு வாய்ந்தது. இந்த நேரத்தில் மகாலட்சுமி தாயாருக்கு குங்கும அர்ச்சனை, மலர் அர்ச்சனை போன்ற உங்களால் முடிந்த அர்ச்சனையை அவருடைய நாமத்தை சொல்லி செய்யலாம். அத்துடன் தாயாருக்கு பிடித்த மலர், நெய்வேத்தியம் போன்றவற்றையும் படைத்து வழிபடுவது மேலும் சிறப்பு.

- Advertisement -

இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு மதிய வேளையில் அல்லது மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் அம்பிகைக்கு பச்சை நிற கண்ணாடி வளையலை வாங்கிக் கொடுத்து வணங்க வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நிறம் எனில் இந்த பச்சை நிறம் தான். அதுவும் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் மகாலட்சுமி தாயாரை இப்படி வளையல் வைத்து வணங்கும் பொழுது அதுவும் நம்முடைய செல்வ வளத்தை அதிகரிக்கும்.

இவற்றுடன் சேர்த்து அன்று மாலை அல்லது பணிக்கு செல்பவர்கள் 7 மணிக்கு மேல் கூட வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்தில் 9 அகல் தீபம் நெய் ஊற்றி ஏற்ற வேண்டும் இந்த தீபமானது செல்வ வளத்தை தருவதோடு மட்டுமில்லாமல் நமக்கு இருக்கும் பண பிரச்சனை கடன் பிரச்சனை மற்ற எந்த விதமான சகல பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய அற்புதமான தீபம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை ஒரே நாளில் செய்யக் கூடிய இந்த மூன்று வழிபாடும் நம்முடைய குடும்ப த்தை ஓஹோவென்று வாழ வைக்கக் கூடிய யோகத்தை கொடுக்கும். இதில் முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது மூன்றையும் ஒரே நாளில் தான் செய்ய வேண்டும். வெவ்வேறு நாட்களில் செய்யும் பொழுது இதற்கான பலன் கிடைக்காது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்வ நிலை உயரவும், கேட்ட வரத்தை கேட்டபடி அருளவும் இந்த விநாயகரை வீட்டில் வைத்து இப்படி வழிபாடு செய்யுங்கள்.

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தேவையான செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ள நாம் தினம் தினம் உழைக்க வேண்டும். இதில் எந்த ஒரு சந்தேகம் இல்லை அத்துடன் சேர்த்து இந்த வழிபாடு முறைகளையும் செய்யும் போது அதற்கான வாய்ப்புகள் நம்மை தேடி வரும் என்பதிலும் சந்தேகமில்லை. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த மூன்று வழிப்பாடியும் ஒரே நாளில் செய்து செல்வ வாழ்க்கை வாழலாம்.

- Advertisement -