நரசிம்மருக்கு இந்த மாலையை சாற்ற உங்கள் பணக் கஷ்டம் அடியோடு அகன்று விடும். ஒவ்வொரு நாளும் இதைப் பயன்படுத்த பணம் உங்களிடம் வந்து கொண்டே இருக்கும்

ealakai
- Advertisement -

இன்றைய சமூகத்தில் அனைவருக்கும் தேவையாக இருப்பது ஒன்று தான் . பலரின் துன்பத்திற்கும், இன்பத்திற்கும் காரணமான பணம் இந்த பணம் தான் அது. பணம் இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஆனால் இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு வேலை வேண்டும், தொழில் செய்ய வேண்டும். இப்படி வேலை, தொழில் இருந்தாலும், பணம் நம்மிடம் அதிகமாக இருப்பதற்கு சுக்கிரனின் அருள் கிடைக்க வேண்டும். எவர் ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பார்வை பலமாக இருக்கிறதோ அவர்களுக்கு பூர்வீக சொத்து இருக்கும். அல்லது தான் சம்பாதித்த பணமே அவர்களின் பிள்ளையின் தலைமுறை வரை நன்றாக வாழ வழி வகுக்கும். ஆனால் சுக்கிரன் பலம் குறைவாக இருந்தது என்றால் நிச்சயம் பணத் தட்டுப்பாடு ஏற்படும். பணத்தை சம்பாதிப்பது என்பதே மிகவும் கடினமாக இருக்கும். இப்படி சுக்கிர பகவான் பார்வை நமது மீது விழுந்து விட்டால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி தான். அவ்வாறு இந்த சுக்கிர பலத்தை அதிகப்படுத்த நரசிம்மருக்கு இந்த ஏலக்காய் மாலை பரிகாரம் செய்ய வேண்டும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு வீட்டிலும் அழகான கணவன், மனைவி, தாய், தந்தை, பிள்ளைகள் என்று நல்ல குடும்பமாக இருப்பார்கள். ஆனால் அந்த வீட்டில் எப்போதும் சண்டை, சச்சரவு, அழுகை, புலம்பல் என இப்படி எதிர்மறையான விஷயங்கள் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும். இதற்கு காரணம் அந்த வீட்டில் உள்ள அனைவரும் தீயவர்கள் என்பது கிடையாது. அவர்கள் வீட்டில் பணப் பற்றாக்குறை இருப்பதினால் தான் இவ்வாறு மோதல்கள் எழும்புகிறது.

- Advertisement -

பணத்தை சம்பாதிப்பதற்கு நல்ல படிப்பு மற்றும் உழைப்பு இருந்தால் மட்டும் போதாது. அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அதிர்ஷ்டம் இருக்க வேண்டுமெனில் மகாலட்சுமி நமது வீட்டில் இருக்க வேண்டும். மகாலட்சுமி நமது வீடு தேடி வர அவரை ஈர்ப்பதற்கான விஷயங்களையும் நாம் செய்ய வேண்டும்.

அப்படி ஏலக்காய் வைத்து நிறைய பரிகாரங்கள் செய்யப்படுகிறது. ஏனென்றால் இயற்கையாகவே இந்த ஏலக்காய்க்கு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் திறன் இருக்கிறது. இதற்கு முதலில் 27, 54 அல்லது 108 எண்ணிக்கையில் ஏலக்காய்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை ஊசி நூல் வைத்து மாலையாக கோர்த்து கொள்ள வேண்டும். பிறகு இந்த மாலையை உங்கள் இல்லத்தில் இருக்கும் நரசிம்மர் படத்திற்கு சாற்றிடலாம். அல்லது கோவிலுக்குச் சென்று நரசிம்மருக்கு மாலையாக அணிவிக்கலாம்.

- Advertisement -

பின்ன நரசிம்மருக்கு சாத்திய மாலையை மறுநாள் எடுத்துக்கொண்டு, அதில் இருக்கும் ஏலக்காய்களை தனியாக உறுவிகொள்ள வேண்டும். பின்னர் இதில் சிலவற்றை எடுத்து பணம் வைக்கும் டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீதமிருக்கும் ஏலக்காய்களை தினமும் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு ஒரு வெற்றிலையில் சிறிதளவு ஏலக்காய், ஒரு ரூபாய் நாணயம் மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து கட்டிக்கொள்ள வேண்டும்.

பின்னர் இதனை தினந்தோறும் பூஜை அறையில் வைத்து விட்டு, அதில் இருக்கும் ஏலக்காயை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளவும். ஒரு ரூபாய் நாணயத்தை பணம் பெட்டியில் வைத்துக் கொள்ளவும் இவ்வாறு தொடர்ந்து செய்துவர உங்கள் கைக்கு பணம் எப்படி வருகிறது என்பதை பற்றி யோசிக்கவே முடியாத அளவிற்கு பணம் உங்களைத் தேடி வரும்.

- Advertisement -