பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம்

mahalshmi1
- Advertisement -

நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் இருக்கக்கூடிய கஷ்டம், இந்த பண கஷ்டம். பணத்தை சம்பாதிக்கவும் முடியாமல், சம்பாதித்த பணத்தை சேமிக்கவும் முடியாமல், நிறைய பேர் திண்டாடி வருகிறார்கள். வருமானமும் இருக்க வேண்டும். வருமானத்திற்கு மீறிய செலவும் வரக்கூடாது. வீண்விரையம் குறைய வேண்டும்.

மாத கடைசி வரை, அடுத்த மாதம் சம்பளம் வாங்கும் வரை கையில் காசு இருக்க வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்யலாம். மகாலட்சுமி கடாட்சம் பெற ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிமையான குளியல் முறையைத்தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். மகாலட்சுமியின் அம்சத்தை பெற மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை இப்படி குளித்தாலும் போதும். அந்த மாதம் முழுவதும் உங்களுக்கு லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். பஞ்சம் இருக்காது. வறுமைக்கு வாய்ப்பில்லை.

- Advertisement -

லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க குளியல் முறை

இந்த குளியலுக்கு நமக்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்து விடுவோம். மருதாணி இலை, மாதுளை இலை, கருவேப்பிலை, நெல்லி இலை, எலுமிச்சை இலை, இந்த இலைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள் போதும். எல்லா இலைகளையும் முதலில் கழுவி விட்டு பிறகு நன்றாக அரைத்து இதை அப்படியே தலையில் பூசி தலைக்கு குளித்து விட வேண்டும். அவ்வளவுதான்.

இந்த குளியல் ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டம் வாய்ந்த குளியலாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய உடம்பை பிடித்த பீடை விலகும். கலை இழந்த முகம் தேஜஸ் ஆக மாறும். எப்போதும் நீங்கள் வசீகரத் தோற்றத்தோடு இருப்பீர்கள். உடம்பில் சோம்பேறித்தனம் கொஞ்சம் கூட தாங்காது. இதனால் உங்களுக்கு முழுமையான மகாலட்சுமி கடாட்சமும் கிடைக்கும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே இப்படி குளித்து விடுங்கள். குளித்து முடித்த பிறகு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லவும். அங்கு பைரவர் சன்னிதி கட்டாயம் இருக்கும். அந்த பைரவர் சன்னதியில் இரண்டு நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வைத்து, பைரவரை மனதார வழிபாடு செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு வீடு திரும்பி உங்களுடைய அன்றாட வேலையை தொடங்கலாம். மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை மேல் சொன்ன வழிபாட்டை பின்பற்றி வந்தால் உங்களுக்கு அந்த மாதம் முழுவதும் வரக்கூடிய கஷ்டங்கள் குறையும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர பீரோவில் வைக்க வேண்டிய பொருள்

பணக்கஷ்டம் இருக்காது. சந்தோஷமாக நாட்களை நடத்திச் செல்வீர்கள். எதிர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நிம்மதியான வாழ்க்கையை வாழக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எளிமையான இந்த வழிபாட்டு முறையை நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -