தாமரைமணி மாலையை பீரோவில் இப்படி வைத்தால் தங்காத பணமும் தங்கும்.

thamarai-vithai-lakshmi
- Advertisement -

மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களில் இந்த தாமரை மணியும் ஒன்று. நாட்டு மருந்து கடைகளில் இந்த தாமரை மணி மாலை நமக்கு கிடைக்கின்றது. பண வசியத்தை ஏற்படுத்திக்கொள்ள தாமரைமணியை நம்முடைய வீட்டில் பணம் வைக்கும் பெட்டியில் எப்படி வைக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் தீராத வறுமை, வருமானத்திற்கு வழி இல்லை என்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் வருமானத்திற்கான வழி கிடைக்கும். வீட்டில் பணம் வந்த வண்ணமே இருக்கும். வீண் செலவை குறைக்கும்.

thamarai-mani-malai

தாமரை மணி மாலையாக நிறைய இடங்களில் கிடைக்கும். ஆனால் அதை வாங்க வேண்டாம். தாமரை மணிகள், ஓட்டை இல்லாத தாமரை மணிகளை வாங்கி வைத்துக்கொள்ளவும். கிடைக்காத பட்சத்தில் மாலையிலிருந்து மணிகளை தனியாக அவிழ்த்து எடுத்துக் கொள்ளுங்கள். நம்முடைய விருப்பம்போல ஒற்றைப்படையில் மணிகளை வாங்கிக்கொள்ளலாம். 3, 5, 7, 9, 11 இப்படி உங்கள் இஷ்டம் போல எத்தனை தாமரைமணிகள் உங்களால் வாங்க முடியுமோ அதை வாங்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கூடவே நாட்டு மருந்து கடைகளில் தாழம்பூ எசன்ஸ் என்று கிடைக்கின்றது. இது தாழம்பு வாசத்தோடு இருக்கக்கூடிய ஒரு பொருள். அதாவது இந்த வாசத்திற்கு நல்ல சக்திகள் வசியமாகும். ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக தாழம்பூ எசன்ஸ் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் தாமரைமணிகளை போட்டு மூன்று நாட்கள் அப்படியே ஊற வைத்துவிடுங்கள். அதன் பின்பு ஏசன்சிலிருந்து இருந்து எடுத்த தாமரைமணி மாலைகளை உங்கள் வீட்டு பீரோவில் வைக்க வேண்டும். வெறும் 3 தாமரை மணிகளை இப்படி செய்தால் கூட பரவாயில்லை. அதுவே போதுமானது.

thazhambu

இப்படியாக இந்த தாழம்பு ஏசன்சில் ஊறவைத்த வாசம் நிறைந்த நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய பணவரவை கொடுக்கக்கூடிய தாமரைமணிகளை எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தில் பொருட்கள் பல மடங்காக பெருகும். உதாரணத்திற்கு இந்த தாமரை மணிகளை பீரோவில் வைத்தால் பணம் அதிகரிக்கும். சமையலறையில் மளிகை ஜாமான்கள் வைத்திருக்கும் அலமாரிக் வைத்தால், வீட்டில் தன தானியத்திற்கு குறைவிருக்காது. குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால் அவர்கள் புத்தகப் பையில் வைத்தால் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். (இப்படி எல்லா இடத்திலும் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் மணியில் இருந்து ஒவ்வொரு மணியை வைத்தால் கூட போதும்.)

- Advertisement -

உங்கள் பர்சில் வைத்துக் கொண்டால் பர்ஸில் பணம் வருவதும் போவதுமாக இருக்கும். இப்படி எல்லா நல்ல விஷயத்திற்கும் இந்த தாமரை மணி மாலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். திருமணம் நடக்காதவர்களுக்கு அவர்களுடைய ஜாதகப் பையில் தாமரைமணியை வைத்தாலும் கூட திருமணம் கைகூடிவரும். இந்த தாமரைமணி மாலையை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வருடத்திற்கு ஒரு முறை மாற்றினால் கூட போதும்.

thamarai-mani

பணக்கஷ்டத்தில் சிக்கித் தவிப்பவர்கள், கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள், வருமானம் இல்லை என்று கருதப்படுபவர்கள் மேல் சொன்ன சுலபமான பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -