நீங்களும் சீக்கிரத்திலேயே பணக்காரர் ஆகிவிடலாம். பசுமாட்டிற்கு இந்த பொருளை சாப்பிட வைத்தால்.

cow
- Advertisement -

எல்லோருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. சில பேருடைய இந்த ஆசை சீக்கிரம் நிறைவேறிவிடும். சிலபேருக்கு இந்த ஆசை நிறைவேற கொஞ்ச நாட்கள் எடுக்கும். சில பேருக்கு இந்த ஆசை நிறைவேறாமல் போவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. அவரவர் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கர்மவினைகள் தான் இதற்க்கெல்லாம் காரணம். என்னை விட குறைவாக படித்தவன், என்னைவிட புத்திசாலித் தனத்தால் குறைந்தவன், என்னை விட குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் இன்று பெரிய அளவில் வசதி வாய்ப்புகளுடன் பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் வசதி வாய்ப்புகள் வரவில்லை என்று கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் சொல்லப்பட்டுள்ள ஒரு சுலபமான பரிகாரம் தான் இது.

வசதி வாய்ப்புகள் நம்மைத் தேடிவர நாமும் பணக்காரராக பசுமாட்டிற்கு இந்த பொருளை கொடுக்க வேண்டும். அது எந்த பொருள். உளுத்தம் பருப்பு. கொஞ்சமாக உளுத்தம்பருப்பை லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய வீட்டில் சாதம் வடிப்போம். சாதம் வடித்த கஞ்சி நிச்சயமாக இருக்கும் அல்லவா. அந்த கஞ்சியையும் கீழே ஊற்ற வேண்டாம். எச்சில் செய்ய வேண்டாம்.

- Advertisement -

சாதம் வடித்த கஞ்சியோடு இன்னும் கொஞ்சம் குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் சில வீட்டில் சாதம் வடித்த கஞ்சி ரொம்பவும் கட்டியாக இருக்கும். கஞ்சியை தண்ணீர் ஊற்றி லேசாக கரைத்து விட்டு, அரைத்து வைத்திருக்கும் உளுந்தம்பருப்பு பொடியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அந்த கஞ்சி தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து விடுங்கள். இதோடு கொஞ்சமாக கல் உப்பையும் போட்டுக் கொள்ளுங்கள். உளுந்து பொடி கஞ்சி தண்ணீரில் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊரட்டும். ஊறிய பின்பு இந்த தண்ணீரை அப்படியே உங்கள் கையை கொண்டு கரைத்து, கொண்டுபோய் பசுமாட்டிற்கு குடிக்க வைக்க வேண்டும்.

உளுந்தம் பருப்பு சேர்த்த இந்த கஞ்சி தண்ணீரை வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று கோமாதாவிற்கு குடிப்பதற்காக கொடுத்துவந்தால் நம்முடைய பண கஷ்டம் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதிர்ஷ்டக்காற்று நம்முடைய பக்கம் வீசத் தொடங்கும். எத்தனை வாரங்கள் இப்படி கொடுப்பது. கணக்கெல்லாம் கிடையாது. உங்கள் விருப்பம் போல இந்த தண்ணீரை பசுமாட்டிற்கு கொடுத்துவரலாம். தொடர்ந்து ஐந்து வாரங்கள் செய்யும்போது உங்களுக்கு நல்ல பலன் கிடைப்பதை உணரமுடியும்.

- Advertisement -

கோமாதா குடித்துவிட்டு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும் அல்லவா. அந்த தண்ணீரை எடுத்து நீங்கள் உங்கள் தலையில் தெளித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் உங்களுடைய வீட்டில் மூலை முடுக்குகளில் லேசாக தெளித்து விடுங்கள். உங்கள் வீட்டை பிடித்த தரித்திரமும் நீங்கும். உங்களை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தடைகளும் விலகும்.

தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் பசுமாட்டு கோமியத்தை வீட்டிற்கு கொண்டு வந்து, நம் குளிக்கின்ற தண்ணீரில் கொஞ்சமாக கலந்து குளித்து வர நம் உடம்பில் இருக்கும் சோம்பேறித்தனம் விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவோம். வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இயங்கினால் வரக்கூடிய பல பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். சோம்பேறித்தனம் நம்மை விட்டு விலகி விட்டால் பிறகு பல நன்மைகளும் வாய்ப்புகளும் நம்மை தேடி வர தொடங்கும். வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ளும் போது வருமானமும் பெருகும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -