வற்றாத பண வரவிற்கு மணி பர்சில் இதை மட்டும் வச்சிக்கிட்டா போதுமே! பணம் இல்லைன்னு இனி ஏன் கவலைப்படுறீங்க?

budhan-purse
- Advertisement -

எவ்வளவு பிரச்சனைகளை சமாளிக்க முடிந்தாலும், இந்த பண பிரச்சனையை மட்டும் சமாளிக்க முடியவில்லை என்பவர்களுக்கு ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த பரிகாரம் ஒரு வரப் பிரசாதமாக இருக்கும். ஓடி ஓடி உழைத்து சம்பாதித்த பணம் வீணாக விரயமாகி கொண்டே இல்லாமல் நிலைத்தன்மையை பெற்று தேவைக்காக செலவழிய ஒரு சூட்சமமான குறிப்பு ஒன்று உண்டு. இதை மட்டும் செஞ்சீங்கன்னா, உங்க பாக்கெட்டில் எப்பொழுதும் பணம் குறையவே குறையாது தெரியுமா? இதைப் பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பணம் என்பது எப்பொழுதும் நிலை இல்லாத ஒரு பொருளாக இருக்கிறது. இன்று ஒருவருடைய கைகளில் இருந்தால், அது நாளை வேறொருவருடைய கைகளுக்கு சென்று விடுகிறது எனவே பணம் என்பது ஒருவரிடம் நிலைத்தன்மையை பெறுவதில்லை. மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக இருப்பவர்களுக்கு மட்டுமே உழைத்து சம்பாதித்த பணம் தங்களுக்கு என்று செலவு செய்து கொள்ள முடியும் என்கிறது ஆன்மீகம்.

- Advertisement -

பணம், வீண் விரயம் ஆவதும் தேவையில்லாத வழிகளில் செலவழிந்து கொண்டிருப்பதும் உங்களுடைய உழைப்பை மட்டும் அல்லாமல் உங்களுடைய நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது. இதை சில சூட்சம பரிகாரங்கள் செய்து பார்ப்பதன் மூலம் சரி செய்ய முடியும் என்கிறது தாந்த்ரீகம். சில குறிப்பிட்ட பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை உண்டு. குறிப்பாக பச்சை கற்பூரம் பற்றி அனைவரும் அறிந்திருப்போம்.

பச்சை கற்பூரத்தை பணம் இருக்கும் இடங்களில் நொறுக்கி வைத்தால் அதன் வாசம் பணத்தை தக்க வைத்து, மேலும் மேலும் பெருக செய்யும் என்கிற ஐதீகம் உண்டு. அதே போல புத்தி காரகனாக இருக்கக்கூடிய புத பகவானுக்கு விருப்பமான நிறத்தில் பட்டு துணி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். நம்முடைய அறிவை, சிந்தனையை எப்படி எல்லாம் பணத்தை செலவு செய்வது? எப்படி எல்லாம் சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வது? எந்த வழிகளில் எல்லாம் பணத்தை சேமிப்பது? என்பது போன்ற தெளிவை உண்டாக்கக் கூடியவர் புத பகவான் ஆவார்.

- Advertisement -

இந்த புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை ஆகும். எனவே பச்சை நிற பட்டு துணி ஒன்றை எடுத்து அதில் சிறிதளவு லவங்கப்பட்டையை பொடித்து பவுடராக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். லவங்க பட்டையில் இருக்கும் வாசம் மகாலட்சுமிக்கு இஷ்டமான வாசம் ஆகும். பச்சை கற்பூரத்திற்கு இணையாக இருக்கும் இந்த இலவங்க பட்டை இருக்கும் இடங்களில் எல்லாம் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. பணத்துடன் லவங்கப்பட்டை சேர்த்து வைக்கும் பொழுது பணம் ஆனது அந்த இடத்தில் பெருக துவங்கும்.

பிறகு இதை பச்சை நிற நூலால் மூட்டை போல கட்டிக் கொள்ளுங்கள். இதை எவ்வளவு சிறியதாக செய்து கொள்ள முடியுமோ, அவ்வளவு சிறியதாக செய்து கொள்ளுங்கள். பின்னர் இந்த மூட்டையை மணிபர்ஸ் அல்லது உங்களுடைய சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் இது உங்களுடன் இருக்கும் பொழுது புதன் மற்றும் மகாலட்சுமியின் காரகத்துவம் பெற்றுள்ள அம்சம் கிடைக்கும். இதனால் பணவரவு என்பது தங்கு தடை இல்லாமல் இருக்கும். 100 ரூபாய் வரவு வந்தால், அந்த வரவுக்கு மீறிய செலவு திடீரென வந்து சேரும். அதை எப்படி சமாளிப்பது? என்பதை இந்த ஒரு மூட்டை உங்களுடைய புத்திக்கு சொல்லிக் கொடுக்கும் என்பது தான் இதில் இருக்கும் சூட்சமமாகும்.

- Advertisement -