கோடி கோடியாக பண மழையை கொட்டி தரும் ஒரே தீபம், இந்த தீபம் தான். இந்த விளக்கை 48 நாள் ஏற்றிவிட்டால் உங்களுக்கு பணம் வருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

cash1
- Advertisement -

கொஞ்சம் இஷ்டப்பட்டு அல்லது சிரமப்பட்டு இந்த ஒரு விளக்கை உங்களுடைய வீட்டில் தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றங்கள். அதன் பின்பு உங்கள் வீட்டிற்குள் வராத நல்லது, வராத பணம், வராத தங்கம், வராத ஐஸ்வரியம் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வர தொடங்கும். சில பேர், அவர்களிடம் ஏற்கனவே இருந்ததை இழந்திருப்பார்கள் அல்லவா. இழந்ததை மீட்டெடுக்கவும் இந்த விளக்கு ஒரு வழியை காட்டிக் கொடுக்கும். அதேசமயம் உங்களுடைய அப்பா, உங்களுடைய தாத்தா, அதற்கும் முன் தலைமுறையில் வாழ்ந்தவர்கள் இந்த நல்லதை எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள். இவ்வளவு சொத்து சேர்க்க வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள் அல்லவா. ஆனால் அதையெல்லாம் அவர்கள் சாதித்து இருக்க மாட்டார்கள். அதைக் கூட உங்கள் தலைமுறையில் நீங்கள் சாதிக்க சந்தர்ப்பங்கள் உங்கள் வீடு தேடி வரும். அப்படி ஒரு அற்புதம் வாய்ந்த நல்ல பலனை கொடுக்க கூடிய இந்த தீபத்தை எப்படி ஏற்றுவது.தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வமாக உள்ளதா. நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை படித்து முயற்சி செய்து பாருங்கள். கை மேல் பலன் கிடைக்கும்.

ஒரு தாம்பல தட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அது பித்தளை தட்டாக இருக்கட்டும். அந்த பித்தளை தட்டில் முதலில் ஒரு மண் அகல் விளக்கை வைத்து விடுங்கள். அந்த அகல் விளக்கை சுற்றி, வர மிளகாய் காம்போடு உடையாதது 3, ஒரே ஒரு புளியம் பழம், ஒரு கைப்பிடி பச்சரிசி, ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு வைக்க வேண்டும். (புளி எடுப்பதற்கு முன்பாக ஓடோடு காய்ந்த புளியம்பழம் கிடைக்கும் அல்லவா. அந்த புளியம்பழத்தை எடுத்து ஆட்டி பார்த்தால் கூட நமக்கு உள்ளே புளி ஆடுவது சத்தம் கேட்கும். அந்த புளியம்பழம் ஒன்று. அது உடைந்திருக்கக் கூடாது. முழுசாக இருக்க வேண்டும் பார்த்துக் கொள்ளுங்கள்).

- Advertisement -

இப்படி மேலே சொன்னபடி இந்த தட்டை அலங்காரம் செய்துவிட்டு அந்த மண் அகல் விளக்கில் புங்கை எண்ணெய் ஊற்றி, மஞ்சள் திரு இரண்டாக திரித்து போட்டு, தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறையிலும் இந்த தீபத்தை ஏற்றலாம் அல்லது வரவேற்பு அறையில் சௌகரியம் இருந்தால் கூட அங்கேயும் இந்த தீபத்தை ஏற்றுக் கொள்ளலாம். குறிப்பாக இந்த தீபம் உங்களுடைய வீட்டில் சூரிய உதயத்திற்கு முன்பு ஏற்றப்பட வேண்டும். விடியர் காலை 5 மணிக்கு ஏற்றினால் 5.50 வரை இந்த தீபம் எரியலாம். சூரிய உதயத்திற்கு பின்பு இந்த தீபத்தை மலையேற்றி விடுங்கள்.

காலையில் இந்த தீபத்தை ஏற்ற முடியாது என்பவர்கள் மாலை 6:30 மணிக்கு மேல் சூரியன் முழுமையாக அஸ்தமனம் ஆகி இருள் வந்த பிறகு, இதே போல இந்த தீபத்தை ஏற்றி வைக்கலாம். மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் இந்த தீபம் இருந்தால் கூட தவறு கிடையாது. மாலையில் சூரியன் பிறகு உதயமாகப் போவது கிடையாது அல்லவா. ஆக ஒரு மணி நேரம் இந்த தீபம் எரிந்த பின்பு மலை ஏற்றி விடுங்கள். (காலை அல்லது மாலை ஏதாவது ஒரு சமயம் இந்த தீபத்தை ஏற்றினால் போதும்.)

- Advertisement -

தொடர்ந்து 48 நாள் தவறாமல் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றிய பின்பு உங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாக தீர தொடங்கும். வீட்டில் பெண்கள் இந்த தீபத்தை ஏற்ற முடியாத சூழ்நிலையில் இருக்கும்போது, ஆண்களும் இந்த தீபத்தை ஏற்றலாம். தட்டில் இருக்கக்கூடிய பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 48 நாட்களில் அந்த பொருட்கள் தூசி அடைந்து விட்டாலோ அல்லது நீங்கள் ஊற்றிய எண்ணெய் அதில் பட்டு அதனுடைய தன்மை மாறி இருந்தாலும் பழைய பொருட்களை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு, மீண்டும் புதிய பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விளக்கிற்கு தினமும் பூ போட வேண்டும் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. தினமும் புங்கை எண்ணெய் ஊற்றி திரி மாற்றி விளக்கு ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை நீங்கள் ஏற்றுவதற்கு இடையூறு வந்தாலோ அல்லது இந்த தீபம் காற்று இல்லாமல் நன்றாக தான் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இடையிடையே அணைந்து போகிறது என்றாலும், உங்களுடைய வளர்ச்சியில் ஏதோ ஒரு தடை இருக்கிறது என்று தான் அர்த்தம்.

தடையில்லாமல் இந்த பரிகாரத்தை செய்து முடிப்பவர்களுக்கு நிச்சயமாக நல்ல முன்னேற்றம் வருவது மட்டும் உறுதி. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அந்த காலத்திலேயே சித்தர்களால் சொல்லப்பட்ட பரிகாரம்தான் இது. நம்பிக்கை இருக்கிறவங்க முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -