இந்த வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால் நிறைய பணம் வரும். சீக்கிரம் சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறும்.

mahalakshmi2
- Advertisement -

நிறைய காசு நம் கைக்கு வருவதற்கு நேர்மறையான சுலபமான ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். நிறைய பணம் வந்து விட்டால், யார் வேண்டுமென்றாலும் சொந்த வீடு வாங்கலாம் அல்லவா. நிறைய பேருக்கு இப்போது சொந்த வீடு வாங்கக்கூடிய ஆசை கனவாகவே இருக்கிறது. அதை நினைவாக மாற்றுவதற்கு நிறைய பணத்தை சம்பாது சேர்க்க வேண்டும். அது இந்த காலத்தில் அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. பத்து ரூபாயை உண்மையாக சம்பாதிக்க வேண்டும் என்றாலும் நாம் அவ்வளவு கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறது. ஆனால் அப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் என்றுமே வீண் போகாதுங்க. அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிறைய காசு சேர்ந்து உங்களுடைய சொத்து வாங்கும் கனவு சீக்கிரத்தில் நிறைவேறும்.

அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல், கெட்ட எண்ணத்தை மனதிற்குள் வைத்துக் கொள்ளாமல், சொந்த வீடு வைத்திருப்பவர்களை பார்த்து வயிற்றெரிச்சல் படாமல், இந்த பரிகாரத்தை செய்தால் கை மேல் பலன் சீக்கிரமாக கிடைக்கும். பணம் தரக்கூடிய அந்த ஒரு வார்த்தை என்ன என்று இப்போது பார்த்துவிடலாமா. முதலிலேயே அதை பார்த்து விடுவோம். அதன் பின்பு பரிகாரம் எப்படி செய்வது என்பதையும் பார்க்கலாம். அந்த ஒரு வார்த்தை என்ன தெரியுமா மகாலட்சுமிக்கு சொந்தமான வார்த்தை இது ‘ஸ்ரீம்’.

- Advertisement -

மகாலட்சுமிக்கு சொந்தமான பீஜ மந்திரம். இதோடு 528 என்ற இந்த நம்பரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு பின்னால் என்ன ரகசியம் இருக்கிறது. இதை வைத்து எப்படி பணத்தை வர வைப்பது.

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சுக்கிர ஹோரை இருக்கும். அப்போது இந்த ஸ்ரீம் என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் நமக்கு பணவரவு அதிகரிக்கும். கூடவே ஒரு பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை எழுதி விட்டு, அதன் பக்கத்தில் 528 இந்த நம்பரை எழுத வேண்டும். (எத்தனை முறை வேண்டும் என்றாலும் எழுதலாம்.) இப்படி செய்தால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை எல்லாம் படிப்படியாக குறைந்து வருமானம் அதிகரிக்க தொடங்கும். சேமிப்பும் அதிகரிக்க தொடங்கும். பிறகு என்ன நீங்கள் நினைத்த மாதிரி நிலம் வாங்கலாம், வீடு வாங்கலாம், சொத்து சுகம் வண்டி வாகனம் எதை வேண்டும் என்றாலும் சொந்தமாக வாங்கிக் கொள்ளலாம் தானே.

- Advertisement -

இந்த நம்பருக்குள் என்ன அதிசயம் இருக்கிறது. இந்த நம்பர் மூன்றையும் கூட்டினால் 15 கிடைக்கும். 15 கூட்டினால், அதாவது ஐந்து ஒன்றை கூட்டினால் ஆறு கிடைக்கும். ஆறு என்பது சுக்கிர பகவானுக்கு உரிய எண். ஆகவே மகாலட்சுமியின் பீஜ மந்திரத்தையும் சுக்கிர பகவானுக்கு உரிய இந்த எண்ணெயும் நீங்கள் எழுதும் போது உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அதிர்ஷ்டம் அடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை தொடங்கி தொடர்ந்து, 48 நாட்கள் இதை செய்து வரும் போது உங்களுக்கே நல்லது நடப்பது கண்கூடாக தெரிய தொடங்கும். பிறகு எப்போதுமே இந்த மந்திரத்தை உங்கள் மனதிற்குள் நீங்கள் உச்சரிக்க தொடங்கி விடுவீர்கள். பெண்கள் வீட்டில் வேலை செய்யும் போது ஓய்வு எடுக்கும் போது இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். ஆண்களுக்கு வேலை இல்லாத போது ஓய்வு எடுக்கும் போது இந்த மந்திரத்தை மனதிற்குள்ளேயே சொல்லலாம். நிச்சயம் பணம் உங்களைத் தேடி வர அந்த மகாலட்சுமியை பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -