போதும் போதும் என்கின்ற அளவிற்கு பணம் உங்களைத் தேடிவர இந்தப் பத்து பொருட்களை இவ்வாறு பயன்படுத்திப்பாருங்கள்

krambu
- Advertisement -

மனித வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவது பணம் ஒன்றுதான். ஏனென்றால் இன்றைய காலகட்டம் பணத்தை வைத்துதான் ஒரு மனிதனை எடை போடுகிறது. பணம் இல்லாத ஒருவனை எவரும் மதிப்பதில்லை. பணம் இருப்பவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். ஒருவர் நல்லவனா, கெட்டவனா என்று இந்த உலகம் பார்ப்பதை மறந்துவிட்டது. ஒருவரிடம் பணம் இருக்கிறதா, இல்லையா என்று தான் பார்த்து பழகுகிறார்கள். எனவே பணத்தை சம்பாதிப்பது என்பது ஒருவரின் கட்டாயமான சூழ்நிலையாக மாறிவிட்டது. அவ்வாறு ஒரு சிலருக்கு என்னதான் உழைத்தாலும் கையில் பணம் தங்கவில்லை, வருமானம் வரவில்லை என்ற கவலை இருக்கும். எவ்வளவு உழைப்பு இருந்தாலும் அதிஷ்டமும், மகாலட்சுமியின் அருளும் இருந்தால் மட்டுமே நமது வாழ்கை சிறப்புடன் அமையும். இவற்றை நம்மிடம் தக்கவைத்துக்கொள்ள அன்றாடம் வாழ்வில் இந்த பத்து பொருட்களை தவறாமல் இந்த முறையில் பயன்படுத்தி வாருங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். அப்படி நாம் பயன்படுத்த வேண்டிய அந்த பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்

பணத்தை ஈர்ப்பது என்றால் முதலில் என்னவென்று தெரிந்து கொள்வோம். பணத்தை ஈர்ப்பது என்பது காந்தம் இரும்பை ஈர்ப்பது போல் பணத்தை ஈர்க்கும் செயல் அல்ல. பணம் நம்மிடம் வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதும், பணத்தைச் சம்பாதிப்பதற்கான ஆற்றலை கொடுப்பதும், பணத்தை பெருக்குவதற்கான தொழிலை முன்னேற்றி கொடுப்பதற்கான சூழ்நிலையை கொண்டுவருவதுதான் பணத்தை ஈர்ப்பது என்று அர்த்தமாகும்.

- Advertisement -

இவ்வாறான அனைத்து விஷயங்களும் சரியாக அமைந்துவிட்டால் பணம் நம் கையில் பல மடங்கு சேர்ந்துவிடும். அதற்காக முதலில் பயன்படுத்த வேண்டிய ஒரு முக்கியமான பொருள் மிளகு. மிளகிற்க்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் இருக்கிறது. எனவே ஒரு பத்து மிளகை வெள்ளைக் காகிதத்தில் மடித்து கொண்டு, அதனை உங்கள் பணம் வைக்க்கும் பர்சில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பொருள் இஞ்சி. இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள பணம் உங்களிடம் வருவதற்கான ஆற்றலையும் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அடுத்ததாக கிராம்பு, இதனை உங்கள் வீட்டின் மற்றவர்கள் கண் படும் இடத்தில் எல்லாம் போட்டு வைக்கலாம். அது மட்டுமல்லாமல் நீங்கள் பணம் வைக்கும் பீரோ மற்றும் டப்பாவிலும் போட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக ஜாதிக்காய், பட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம் இவை அனைத்தையும் நீங்கள் பணம் வைக்கும் பர்ஸ் மற்றும் உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளலாம். இவை அனைத்துக்கும் இயல்பாகவே பணத்தை ஈர்க்கும் திறன் உள்ளது. இவை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களாக பார்க்கப்படுகிறது. அடுத்ததாக துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் உகந்ததாகும். இதனை தினமும் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைப்பது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கிறது.

அடுத்ததாக இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வைக்கும் பொழுது அதற்கு அபரிமிதமான சக்தி கிடைக்கிறது. இதனை தொழில் செய்யும் இடத்தில் வைத்துக் கொண்டால் உங்கள் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வியாபாரம் செய்யக்கூடிய கடைகளில் உங்கள் கல்லா பெட்டியில் வைத்துக் கொண்டால் வாடிக்கையாளர்களின் வரவு அதிகரிக்கும். அதே போல் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் இதனை வைத்துக் கொண்டால் உங்கள் பணம் பல மடங்காகப் பெருகும். அவ்வாறு பச்சை கற்பூரம், 2 ஏலக்காய் மற்றும் 27 எண்ணிக்கையில் சோம்பு மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் ஒன்றாக கட்டி வைக்க வேண்டும்.

- Advertisement -