தரித்திரம் நீங்கி, பண புழக்கம் அதிகரிக்க உங்களுடைய பார்சில் இந்த 1 பொருளை வைத்தால் போதுமே!

thorana-ganapathy-yelakkai
- Advertisement -

நாம் பேசும் வார்த்தைகளும், நாம் நடந்து கொள்ளும் முறையும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன என்பது ஆன்மிக உண்மை ஆகும். நல்ல வார்த்தைகளை பிரயோகிப்பதும், நல்ல விஷயங்களை செய்வதும் நம்மை மென்மேலும் முன்னோக்கி கூட்டி செல்லும். நல்ல வார்த்தைகளை பிரயோகிக்காதவர்கள் இடத்தில் தரித்திரம் குடிகொள்ளும். நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள் இல்லாதவர்கள் இடத்திலும் இது போல தரித்திரங்கள் குடிகொள்ளும் என்கிறது ஆன்மீகம்! இப்படிப்பட்டவர்களிடம் பணப்புழக்கம் என்பது குறைவாக இருக்கும்.

என்னதான் அவர்களிடத்தில் திறமையும், உழைப்பும் இருந்தாலும் அதற்குரிய பலன்கள் கிடைப்பதில்லை. இத்தகையவர்கள் உங்களுடைய மணி பர்சில் பணத்துடன் இதை வைத்துக் கொண்டால் உங்களிடம் இருக்கும் தடைகள் நீங்கி நல்ல சிந்தனைகளும், நல்ல விஷயங்களையும் செய்யக்கூடிய ஆற்றலை கொடுக்கும். அப்படியான பொருள் என்ன? அதை எப்படி நம்முடைய மணி பர்சில் வைத்துக் கொள்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

- Advertisement -

பொதுவாக தரித்திரம் என்பது நமக்கு ஏற்படும் தோல்விகளையும், பண தட்டுப்பாடுகளும், நம்மிடம் இருக்கும் கெட்ட விஷயங்களையும் குறிக்கிறது. ஒருவர் நல்ல திறமை உள்ளவராக இருந்தாலும், அவர்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்படும் பலன் கிடைக்காமல் தோல்விகளும், அவமானங்களும் ஏற்படுவது உண்டு. இப்படிப்பட்டவர்கள், அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளை கவனிக்க வேண்டும். அது போல தெய்வீக அருள் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

நம்மிடம் தெய்வீக மணம் வீசும் பொழுது இயல்பாக நல்ல சிந்தனைகள் பிறக்கும். காலையில் எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு சுத்தத்துடன் வெளியில் கிளம்ப வேண்டும். சுத்தமில்லாதவர்களிடத்தில் மகாலட்சுமி ஆனவர் தங்குவதில்லை. நம்முடைய மணிபர்சில் பணத்துடன் இந்த பொருளை சேர்த்து வைத்தால் அதிலிருந்து வரக்கூடிய ஆற்றல் தெய்வீக தன்மையை நமக்குள் உணரச் செய்யும். இதனால் கெட்ட வார்த்தைகள் நம்மையும் அறியாமல் நம்மிடம் வராது என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ஒரு சிறிய அளவிலான மஞ்சள் துணியை எடுத்து கொள்ளுங்கள் அல்லது வெள்ளை துணியை மஞ்சளில் முக்கி காய வைத்து மஞ்சள் ஆக்கி வைத்துக் கொள்ளுங்கள். சதுரமாக அதனை வெட்டி அதில் கொஞ்சம் பச்சைக் கற்பூரம், இரண்டு ஏலக்காய், ஒரு கிராம்பு மட்டும் வைத்து முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே உங்களுடைய மணி பர்சில் வைத்துக் கொண்டால் போதும், அதிலிருந்து வரக்கூடிய ஆற்றல் உங்களுக்கு எவ்வகையிலும் பணத்தை ஈர்த்து கொடுக்கும். நாம் செய்யும் செயலிலும், நம்முடைய நடவடிக்கைகளிலும் நல்ல விஷயங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அடுத்தவர்களை பார்த்து பொறாமை படுவது அல்லது அவர்களுடைய வளர்ச்சியை பொறுக்க முடியாமல் பொங்கி எழுவது, சூழ்ச்சிகள் புரிவது, பழி வாங்குவது என்று வில்லத்தனமாக யோசித்தால் உங்களிடம் இருக்கும் மகாலட்சுமி போய் தரித்திரம் வந்துவிடும்.

எப்பொழுதும் ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்’ என்கிற வாசகத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவுதான் நாம் கெட்டது செய்து, நல்லது நடந்தாலும் அதற்கு உரிய கர்மா என்கிற வினையை வேறு வகையில் நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும். எனவே நல்ல விஷயங்களை செய்து தான, தர்மங்களை நம்மால் இயன்ற அளவிற்கு செய்து வந்தால் நம்மிடம் பணப்புழக்கம் அதிகரிக்க துவங்கும். சுயநலமாக யோசிப்பவர்கள் இடத்தில் பணம் தங்குதடையின்றி வருவதில்லை. பொது நலத்துடன் உங்களுடைய உழைப்பை இறை அர்ப்பணிப்புடன் கொடுத்துப் பாருங்கள். கையில் இருக்கும் பணம் கரைந்து கொண்டே இருந்தாலும், வேறு வகையில் உங்களுக்கு வந்துக் கொண்டே இருக்கும்.

- Advertisement -