பண்டிகை நாட்களில் சமையலறையில் இதை செய்தால் தான் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்கும்.

anjarai-petti-lakshmi
- Advertisement -

நல்ல நாள் பண்டிகை தினம் என்றதுமே நம்முடைய கவனத்தில் முழுவதும் இருப்பது பூஜை அறை தான். இறைவனுக்கு பூஜை எப்படி செய்வது? பூஜை அறையை எப்படி சுத்தம் செய்வது. சுவாமிக்கு என்ன நிவேதனம் செய்வது, என்பதை பற்றிய சிந்தனை முழுவதுமாக இருக்கும். இதோடு சேர்த்து வீட்டையும் சுத்தம் செய்யக்கூடிய வேலையை நாம் கவனிப்போம். அதாவது வீடு துடைக்கும் வேலை. பண்டிகை நாளுக்கு முந்தைய நாள் வீட்டை சுத்தம் செய்து விடுவோம். இவ்வாறு ஒரு நல்ல நாள் கிழமையில் மற்ற எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தக்கூடிய நாம் நம்முடைய சமையலறையில் கவனம் செலுத்துவதே இல்லை.

ஒரு சில பேர் பின் சொல்லக்கூடிய விஷயங்களை பின்பற்றலாம். சிலருக்கு இந்த சாஸ்திரம் தெரிந்தும் இருக்கலாம். இருப்பினும் தெரியாதவர்கள் இந்த குறிப்புகளை தெரிந்து கொண்டு பின்பற்றி பாருங்கள். உங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் பெறுக இந்த குறிப்பு உங்களுக்கு உதவி புரியும்.

- Advertisement -

சமையலறையில் இருக்கக்கூடிய உப்பு ஜாடி, புளி ஜாடி, அஞ்சரை பெட்டி, அரிசி அளக்க பயன்படுத்தும் ஆழாக்கு, படி, அரைப்படி, முறம் இவைகளை நல்ல நாள் கிழமையில் சுத்தம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள் வந்தால் இப்படி லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடிய பொருட்களை சமையலறையில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். ஜாடியில், அஞ்சரை பெட்டியில் எல்லாம் மளிகை ஜாமான்கள் இருந்தாலும் அதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு, இந்த பொருட்களை எல்லாம் சுத்தமாக கழுவி காயவைத்து அதன் பின்பு அதில் பொருட்களை நிரப்பி வைக்க வேண்டும்.

இதே போல சமையல் மேடையை துடைத்து சுத்தம் செய்து, அந்த அடுப்புக்கு மேல் பக்கத்தில் மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, பிள்ளையார் சுழி போட்டு, லாபம் என்று எழுத வேண்டும். கொஞ்சமாக மஞ்சளை தண்ணீரில் கரைத்து அதைத் தொட்டு லாபம் என்று எழுதலாம். அப்படி இல்லை என்றால் தனலாபம் என்று கூட எழுதி வைக்கலாம். இப்படி செய்வது சமையல் அறைக்கே ஒரு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

- Advertisement -

சமையலறை என்று இருந்தால் அந்த சமையலறையில் சிறிய உரல், அம்மிக்கல் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் சமையலறை மேடையில் வைக்கும் அளவிற்கு மிகச் சிறிய அளவில் உரல் அம்மிக்கல் எல்லாமே கிடைக்கின்றது. அதை வாங்கி பயன்படுத்துவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். வாரம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை என்றால் இந்த சிறிய உரலுக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

இதேபோல சமையலறை அலமாரியை ஒவ்வொரு பண்டிகை நாட்களுக்கும் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். சமையலறையில் இருக்கும் பாத்திரங்கள் மளிகை ஜாமான்கள் கொட்டி வைத்திருக்கும் டப்பாக்கள் அனைத்தும் எண்ணெய் பிசுக்கோடு அசுத்தமாக இருக்கவே கூடாது. எல்லா வேலையையும் ஒட்டுமொத்தமாக செய்ய முடியவில்லை என்றாலும் பண்டிகை நாட்கள் வருவதற்கு பத்திலிருந்து பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே சமையலறையை சுத்தம் செய்ய தொடங்கி விடுங்கள். பண்டிகை நாட்களில் பூஜை அறை எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு சமையலறையும் சுத்தமாக இருந்தால் தான் வீட்டில் லட்சுமி கடாட்சத்தில் நிறைவிருக்கும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -