பசுவிலிருந்து கிடைக்கும் இந்த பொருளை வாரம்தோறும் வீட்டில் தெளித்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகுமா? பணம் கொழிக்க பஞ்சகவ்யம்!

gaja-lakshm
- Advertisement -

ஒரு மனிதன் பசுவிற்கு கொடுக்கும் மரியாதை, பக்தி அவனுடைய சகல விதமான தோஷங்களையும் போக்குகிறது. கோமாதா என்று அழைக்கப்படும் பசு எல்லா தெய்வங்களையும் தன்னுள்ளே உள்ளடக்கியுள்ளது. பசு மாட்டின் தலை முதல் வால் வரை எல்லா இடங்களிலும் தேவர்களும், தெய்வங்களும் வசிப்பதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. இங்கனம் பசுவிலிருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து வீடு முழுவதும் எப்படி லட்சுமி கடாட்சத்தை பெருகச் செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வாரம் ஒரு முறை துளசி தீர்த்தம், மஞ்சள் தண்ணீர் போன்றவற்றை வீடு முழுவதும் தெளித்து வந்தால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அகலும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் பசுவிலிருந்து கிடைக்கக் கூடிய இந்த ஒரு பொருளும் நம் குடும்பத்தை செல்வ செழிப்புடன் இருக்க செய்யும். எத்தகைய பிரச்சினைகளாக இருந்தாலும், அந்த பிரச்சினைக்கான தீர்வை வெளியில் தேடுவதை விட, நமக்குள்ளே தேடுவது தான் புத்திசாலித்தனம்.

- Advertisement -

கண்ணை மூடி பத்து நிமிடம் தியானம் இருக்க சொன்னால் யாரும் இருக்க போவதில்லை ஆனால் அதையே சற்று வித்தியாசமாக பரிகாரம் என்கிற பெயரில் எதையாவது கூறினால் அதை உடனே செய்து விடுவார்கள். பக்தி என்பது வெளியில் கிடைக்கும் ஒரு பொருள் அல்ல, நம்முள்ளே இருக்கும் ஒரு ஆத்மா ஆகும் எனவே பக்தியை நிரூபிக்க எந்த ஒரு பொருளையும் வாங்கி வழிபட வேண்டிய அவசியமில்லை, மனதார இறைவனை நினைத்தால் நிச்சயம் அவர் அதற்கான தீர்வையும் கொடுப்பார்.

பசுவில் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணம், கோமியம் ஆகியவற்றின் கலவையை பஞ்சகவ்யம் என்று கூறுவார்கள். இந்த பஞ்சகவ்யத்தை கொண்டு தீபங்கள் தயாரிப்பதும் உண்டு. பஞ்சகவ்ய தீபத்தில் விளக்கு ஏற்றி வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். மேலும் தீராத கடன் பிரச்சினைகள் தீர்ந்து, செல்வ வளம் பெருகும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த பஞ்சகவ்யத்தில் எதிர்மறை ஆற்றல்களை முற்றிலுமாக அழிக்கும் தன்மை உண்டு. எனவே வீட்டில் வாரம் ஒருமுறை பஞ்ச கவ்யத்தை தெளித்து, வீட்டில் இருக்கும் அத்துணை துஷ்ட சக்திகளை விரட்டியடித்து லட்சுமி கடாட்சத்தை பெருக செய்யலாம்.

- Advertisement -

பால், தயிர், நெய், சாணம், கோமியம் எல்லாவற்றிலும் எல்லா தெய்வங்கள் இருந்தாலும், மகாலட்சுமியின் ஸ்வரூபமாக இவை பார்க்கப்படுகிறது, எனவே மகாலட்சுமியை வீட்டில் வரவேற்பதற்கு பஞ்சகவ்ய தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். பசுவில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த ஐந்து பொருட்களையும் தனித்தனியாக கிடைத்தாலும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒன்றாக சேர்த்து வீடு முழுவதும் வாரம் ஒரு முறை தெளித்து வர குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும்.

பஞ்ச கவ்யத்தை விளக்காக மட்டும் பயன்படுத்தாமல், இப்படி தீர்த்தமாகவும் பயன்படுத்துவது ரொம்பவே சிறந்த பலன்களை கொடுக்கும். எனவே வெள்ளி அல்லது செவ்வாய் கிழமையில் ஏதேனும் ஒரு நாளில் வீடு முழுவதும் பஞ்சகவ்யத்தை தெளித்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு வர இருக்கின்ற வறுமை நீங்கி, செல்வ வளம் பன்மடங்கு பெருகும்.

- Advertisement -