வீட்டில் பணம், காசு புழங்க, வீண் செலவு வராமல் இருக்க பூஜை அறையில் இந்த ஒரு விஷயத்தை தவறாமல் கடைப்பிடித்து பாருங்கள்!

lakshmi-cash
- Advertisement -

நம்முடைய பூஜை அறை சாஸ்திர குறிப்புகளை நாம் முறையாக பின்பற்றி வந்தாலே வீட்டில் சுபீட்சம் நிலைத்து நிற்கும். மகாலட்சுமியின் அருள் கிடைக்க பூஜை அறை மற்றும் பூஜை பொருட்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த வகையில் வீட்டில் வீண் விரயம் அடிக்கடி வராமல் இருக்க, பணம் காசு அதிகம் புழங்க பூஜை அறையில் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்ன? என்பதை பற்றிய ஆன்மீக தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பூஜை பொருட்கள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானவை! விளக்கு ஏற்றி வைத்து விட்டு அதில் எண்ணெயை தேங்க விடக் கூடாது. அதே போல எண்ணெய் முற்றிலுமாக தீர்ந்து, திரி கருகவும் கூடாது. இதனால் வீட்டில் பணம் காசு புழங்குவது குறையும். ஏற்றிய விளக்கை சரியான முறையில் அணைத்து அதை புஷ்பம் அல்லது பேப்பர் கொண்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அப்பொழுது தான் புதிய எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற முடியும்.

- Advertisement -

அதே போல வீட்டில் பணம் காசு அதிகம் புழங்க பஞ்ச பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீர் மிகவும் முக்கியம். பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் மூலமாகத் தான் இறைவன் நம்முடைய வேண்டுதல்களை கேட்பதாக ஒரு ஐதீகம் உண்டு பஞ்ச பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீர் பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருக்கிறது. பூஜை அறையில் பஞ்ச பூதங்களும் அடங்கி இருக்க வேண்டும். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து விஷயங்களையும் கொண்டு பூஜை செய்யும் பொழுது தான் நமக்கு பூஜையின் முழு பலனும் கிடைக்கிறது.

பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைக்காமல் விளக்கு ஏற்றக் கூடாது. பஞ்ச பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரை தினமும் மாற்றி விட வேண்டும். ஒருமுறை வைத்து விட்ட தண்ணீர் அப்படியே சிலர் வைத்திருப்பார்கள். இது தவறான செயலாகும். இதனால் குடும்பத்தில் வீண் விரயங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனவே தேவையற்ற செலவுகள் குறைவதற்கு பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை தினமும் மாற்றி விடுங்கள். மாற்றும் பொழுது அதில் புஷ்பம், ஜவ்வாது, சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து வையுங்கள்.

- Advertisement -

மணம் மிக்க மலர் ஒன்றை அதனுள் போட்டு வைப்பதால் சகல செல்வங்களும் நமக்கு கிட்டும் என்பது நம்பிக்கை. கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது ஆகியவற்றின் வாசம் ஆன்மீக சிந்தனையை தூண்டுவதாக இருக்கும். இதனால் முழுமையாக இறைபக்தி நமக்குள் வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. சிலர் பஞ்ச பாத்திரத்தில் துளசி இலைகள் போட்டு வைப்பார்கள். பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்றவற்றையெல்லாம் போட்டு வைப்பார்கள். இதுவும் பணத்தை ஈர்க்கக் கூடிய அற்புதமான விஷயமாகும்.

எப்படி இருப்பினும் பஞ்ச பாத்திரத்தில் வாசம் மிகுந்த ஆன்மீக பொருட்கள் இருக்க வேண்டும். அதை தினமும் தீர்த்தமாக அனைவரும் வீட்டில் பகிர்ந்து சாப்பிட வேண்டும். மீதம் தண்ணீர் இருந்தால் அதை செடிகளுக்கு ஊற்றி விடுங்கள். பின்னர் மறுநாள் புதிய தண்ணீரை வையுங்கள். நீங்கள் பூஜை செய்யா விட்டாலும் தினமும் தண்ணீர் மாற்றுவது அவசியம் ஆகும் என்பதை தவறாமல் கடைபிடித்து பாருங்கள், உங்கள் வாழ்விலும் வீண் விரயங்கள் நிகழாமல், பணம் காசு அதிகம் புழங்கத் துவங்கும்.

- Advertisement -