இனி குதிகால் வெடிப்பை மறைக்க வேண்டிய அவசியமே இல்லை. இரண்டு நிமிடத்தில் குதிக்கால் வெடிப்பை சரி செய்ய இந்த ஒரு குறிப்பு.

- Advertisement -

இன்றைய கால சூழலில் பெண்களுக்கு தன் குடும்பத்தையும் குழந்தையும் பார்த்துக் கொள்ளவே நேரம் போதவில்லை. இதில் பல பெண்கள் வேலைக்கு சென்று வந்த பிறகு வீட்டு வேலை பார்த்துக் கொள்வதால் தங்களை கவனித்துக் கொள்ள அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இது போன்ற சூழ்நிலையில் குதிகால் வெடிப்பபை பெண்கள் ஒரு பிரச்சனையாகவே எடுத்துக் கொள்வதில்லை. அதுவாக சரியாகி விடும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு ஒரு முறை வந்து விட்டால் அது தானாக சரியாகாது. அந்த இடத்தில் உள்ள இறந்த செல்களை நாம் அப்புறப்படுத்தினால் ஒழிய மீண்டும் அந்த இடத்தில் பழைய நிலைமை வராது. இதை கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டால் வெடிப்பு நாளடைவில் புண்ணாக மாறி அதிலிருந்து ரத்தம் வந்து வலி எடுக்கும் அளவிற்கு பெரிய காயமாக மாறிவிடும். இதை தடுக்க வீட்டிலே அதிக செலவு இல்லாமல் அதிக நேரமும் செலவில்லாமல் செய்ய கூடிய எளிய குறிப்புகளை தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

ஒரு மெழுகுவர்த்தி எடுத்து அதை கொஞ்சமாக நறுக்கி தூள் செய்து கொள்ளுங்கள். அரை டீஸ்பூன் அளவுக்கு அந்த மெழுகுத்தூள் வந்தால் போதும். அதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து விடுங்கள் அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆலிவ் ஆயில் கிடைக்கவில்லை என்றால் தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம். ஆனால் ஆலிவ் ஆயிலில் கிடைக்கும் ரிசல்ட் தேங்காய் எண்ணெயில் சற்று தாமதமாகத்தான் கிடைக்கும்.

- Advertisement -

இப்போது அடுப்பில் பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். அந்த சுடுதண்ணீரின் மீது இந்த மெழுகுவத்தி ஆலிவ் ஆயில் சேர்த்த கிண்ணத்தை வைத்தால் அந்த ஆவியிலே மெழுகு உருகி இந்த எண்ணெயுடன் நன்றாக கலந்து விடும். பிறகு நீங்கள் ஒரு ஸ்பூன் கொண்டு இதை நன்றாக கலக்கி எடுத்து தனியே வைத்து விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் அப்படி வைத்தாலே போதும். அது ஒரு தைலம் பதத்திற்கு வந்துவிடும். உங்கள் பாதத்தை சுத்தமாக தண்ணீர் வைத்து துடைத்து ஆறிய பின் இதை நீங்கள் பாதங்களில் தடவி வாருங்கள் ஒரு வாரம் இதை போல் செய்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

இதை விட இன்னும் சீக்கிரமாக அதுவும் இரண்டே நிமிடத்தில் பாத வெடிப்பை நீக்க ஒரு அருமையான வழி. ஒரு அகலமான பாத்திரத்தில் உங்கள் கால் சூடு பொறுக்கும் அளவிற்கு சுடு தண்ணிர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பு, ஒரு முழு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்ட பிறகு அந்த தண்ணீரில் உங்கள் கால்களை ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருங்கள். அதன் பிறகு உங்கள் கால்களை எடுத்து ஈரத்தை துடைத்த பிறகு உப்பு காகிதம் வைத்து வெடிப்பு உள்ள இடத்தில் நீங்கள் லேசாக தேய்த்தாலே போதும் அதன் மேல் உள்ள அந்த இறந்த செல்கள், வெடிப்பு வந்த இடத்தில் உள்ள மேல் தோள்கள் எல்லாம் உதிர்ந்து கொட்டி உங்கள் பாதம் இரண்டே நிமிடத்திலே அழகாக மாறிவிடும் அதிசயத்தை பார்க்கலாம்.

- Advertisement -

இது பாத வெடிப்பு சரியாக அழகு நிலையம் செய்தால் அங்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று செலவாகும். ஆனால் வீட்டிலே இவ்வளவு எளிமையாக இதை செய்ய அதிகப்பட்சம் ஐந்து ரூபாய் செலவு கூட வந்திருக்காது. இவ்வளவு எளிமையாக உங்கள் பாதங்களை அழகாக மெருகூட்ட முடியும் என்றால் எதற்காக பணத்தை வீண் விரயம் செய்ய வேண்டும்.

இந்த முறைகளை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து உங்கள் பாதத்தை பட்டு போல் பள பளவென்று பார்ப்பவர் கண்களை பறிக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -