உங்கள் பாவம் தீர இந்த நாட்களில் செய்ய வேண்டிய குறிப்பிட்ட பரிகாரங்கள்

nava
- Advertisement -

நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் நாம் முன்பிறவியில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்கள் தான். இந்தத் தவறுகள் காரணமாக தான் நவகிரகங்கள் நமக்கு பலவித சோதனைகளைக் கொடுக்கின்றன. கணவன் மனைவி ஒற்றுமை குறைவு, நோய் உண்டாதல், மனநிம்மதி இல்லாமல் இருத்தல், குழந்தைகள் கவலை இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் நாம் செய்த பாவங்களாகும். இதற்கான தகுந்த பரிகாரங்களை கணிப்பதற்கு ஜாதகத்தில் வழி இருக்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு விதமான பரிகாரங்கள் செய்வதன் மூலம் சிறந்த தீர்வை பெற முடியும். பொதுவாகவே இறைவனை வணங்குவதாக இருந்தால் தீபம் ஏற்றி வழிபடலாம். ஆனால் இந்த தீபம் ஏற்றும் வழிபாட்டை குறிப்பிட்ட நாட்களில் சரியான முறையில் செய்வதன் மூலம் இப்படிப்பட்ட தோஷங்களில் இருந்து விடுபட முடியும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இரத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், நாத்திக எண்ணங்கள், தெய்வ சிந்தனை, பெரியார்களை அவமதித்தல், பெற்றோர்களை எதிர்த்து பேசுதல், பித்ரு பூஜைகளை விட்டு விடுதல் இதுபோன்ற செயல்களுக்கு ஞாயிற்றுகிழமை தோறும் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி நவகிரகத்தை வழிபட வேண்டும்.

- Advertisement -

மனக்கவலை, மன நிம்மதியின்மை, தாழ்வு மனப்பான்மை, குழந்தைகளுக்கு வரும் ஆட்டிசம் குறைபாடு, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு திங்கட்கிழமை தீபமேற்றி வழிபட வேண்டும். பெண்களுக்கு திருமணம் தடைபடுதல், ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், முன்கோபம், அவசர புத்தி, பிடிவாதம், வார்த்தைகளால் பிறரை காயப்படுத்துதல் இவை அனைத்தும் விலக செவ்வாய்க்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

படிப்பில் தடை, ஞாபகம் மறதி, படிக்க ஆர்வம் இன்மை இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைக்காக புதன்கிழமை தோறும் தீபம் ஏற்றி நவகிரகத்தை வழிபட வேண்டும். ஆண்களுக்கு விவாக தடை, குடும்பத்தில் மகிழ்ச்சி இன்மை, புத்திர பாக்கியம் தடை படுதல் இது போன்ற பிரச்சனைகளுக்கு வியாழக்கிழமை தோறும் தீபமேற்றி வழிபட நல்ல மாறுதல் உண்டாகும்.

- Advertisement -

தாம்பத்திய பிரச்சினைகள், கணவன் மனைவி சண்டை, மாங்கல்ய பலம் குறைவு, கடன் தொல்லை, பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் மனக்குழப்பம், குடும்ப உறவினர்கள் இடையே அடிக்கடி சண்டை நடத்தல் இது போன்ற குடும்ப பிரச்சினைகளுக்கு வெள்ளிக்கிழமை தோறும் நவக்கிரகத்திற்கு தீபமேற்றி வழிபட வேண்டும்.

ஆயுள், ஆரோக்கியம், விபரீதமான நோய்கள், பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகள், வேலையில் நிரந்தரமின்மை போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் சனிக்கிழமை தோறும் தீபமேற்றி வழிபட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு விதமான பிரச்சனைகளும் இந்த குறிப்பிட்ட தினங்களில் நெய் ஊற்றி, தீபமேற்றி நவக்கிரகத்தை வழிபட்டு வரும் பொழுது நீங்கள் செய்த பாவங்கள் குறைந்து படிப்படியாக உங்கள் வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் உண்டாகும்.

- Advertisement -