முடி கொட்டிய இடத்தில் 3 நாட்களில் முடி வளர்ச்சியை காண, தினமும் 1 டம்ளர் இந்த பால் குடிங்க போதும்.

hair7
- Advertisement -

முடி கொட்டுது. ஆனால் வளர மாட்டேங்குது. என்ற தொந்தரவு நாளுக்கு நாள் நமக்கு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. தலை முடியை வளர வைக்க என்னதான் எண்ணெய் தேய்த்து, என்னதான் ஹேர் பேக் போட்டு, என்ன தான் ஷாம்பு போட்டாலும் முடி வளர்ந்த பாடாக இல்லை. எப்படி வளரும்? உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் தானே. நம்முடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொண்டால் தான் முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியும். உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடியை வளர வைக்க, இருக்கும் முடியை கொட்டாமல் பாதுகாத்துக்கொள்ள, தினமும் இந்த பொடி போட்டு பால் குடிக்க வேண்டும்

சத்துக்கள் நிறைந்த அந்த பொடியை எப்படி தயார் செய்வது தெரிந்து கொள்வோமா. பச்சை வேர்க்கடலை 1 கைப்பிடி அளவு, பூசணி விதை பச்சை நிறத்தில் இருப்பது – 1/2 கைப்பிடி அளவு, பாதாம் பருப்பு – 1/4 கைபிடி அளவு. அப்படி இல்லை என்றால் மீடியம் சைஸில் ஒரு டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வேர்கடலை – 1 டம்பளர், பூசணி விதை – 1/2 டம்ளர், பாதாம் பருப்பு – 1/4 டம்ளர் இந்த அளவுகளிலும் சேர்த்துக் கொள்ளலாம். (இதில் தேவைப்பட்டால் இன்னும் பத்து பாதாம் பருப்புகளையும் சேர்த்து போட்டுக் கொள்ளலாம். அதில் தவறு ஒன்றும் கிடையாது.)

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடு செய்து இந்த 3 பொருட்களையும் ஒன்றாக போட்டு மிதமான தீயில் வாசம் வரும் வரை நன்றாக வறுத்து எடுக்கவேண்டும். மூன்று பொருட்களையும் ஒன்றாக போட்டு பக்குவமாக வறுத்து எடுக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு பொருட்களாக, தனி தனியாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்.

வறுத்த பொருட்களை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். முதலில் விட்டு விட்டு பல்ஸ் மோடில் ஓட்டுங்கள். இதில் நம் வேர்க்கடலை, பாதாம் பருப்பு சேர்த்து இருப்பதால் அரைக்கும்போது கொஞ்சம் பிசுபிசுப்புத் தன்மையோடு எண்ணெயாக இருக்கத்தான் செய்யும் பரவாயில்லை. மிக்ஸியை வேகமாக ஓட்ட வேண்டாம். மெதுவாக ஓடவிட்டு நைசாக அரைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த பொடியை அப்படியே ஒரு பாட்டிலில் மாற்றிக் கொள்ளுங்கள். ஈரம் படாமல் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிரிட்ஜில் வைக்க வேண்டாம் வெளியில் வைத்தாலே ஒருவாரத்திற்கு இந்த பொடி நன்றாக இருக்கும். கெட்டுப்போகாது ஒருவாரத்துக்கு தேவையான பொடியை மட்டும் தயார் செய்து கொள்ளுங்கள்.

அதன்பின்பு பசும் பாலை நன்றாகக் காய்ச்சி மிதமான சூட்டிற்கு ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள்ஸ்பூன் அளவு அரைத்து வைத்த இந்த பொடி, 1/2 ஸ்பூன் அளவு நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து குடித்து விட வேண்டும். தினமும் 1 டம்ளர் பாலுடன் இந்த பொடியை சேர்த்து குடித்துவர நிச்சயமாக உங்களுடைய உடம்பில் நார்ச்சத்து சத்து, புரதச்சத்து, ஜிங்க், விட்டமின், அயன், ஒமேகா 3, எல்லா வகையான சத்துகளும் சீராக கிடைக்கும். பின்பு முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் வளரும். முடி உதிர்வு குறையும். முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் சீக்கிரம் முடி வளர்வதை காணமுடியும்.

ஒரு நாள் அல்லது இரண்டு நாள் குடித்து விட்டு இந்த பால் குடிப்பதை நிறுத்தி விட்டால் நிச்சயமாக வித்தியாசம் தெரியாது. தொடர்ந்து மூன்று மாதங்கள் நிறுத்தாமல் இந்த பாலை தினம் தோறும் குடித்து வர  நீங்கள் நம்பமுடியாத மாற்றத்தை உங்கள் தலைமுடியில் காண முடியும். ட்ரை பண்ணி பாருங்க. இந்தப் பாலை உங்கள் இஷ்டம் போல எப்போது வேண்டுமென்றாலும் குடிக்கலாம். குடித்து ஒரு மணி நேரம் கழித்து தூங்குவது நல்லது.

பின்குறிப்பு: உங்களுக்கு இந்த பொடியை பாலில் கலந்து குடிக்க பிடிக்கவில்லையென்றால், இதோடு கொஞ்சமாக நாட்டு சர்க்கரை சேர்த்து பிசைந்து லட்டுவாக பிடித்தும் சாப்பிட்டு கொள்ளலாம்.

- Advertisement -