பெண்களின் கையால் முந்தானையில் இந்த 2 பொருட்களை முடிந்து வைத்துக் கொண்டால், நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் சீக்கிரத்தில் நிறைவேறும்.

women
- Advertisement -

பெண்களுடைய ஆசை சீக்கிரத்திலேயே நிறைவேறுவதற்கு ஒரு அருமையான பரிகாரத்தை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். தாந்திரீக ரீதியாக சொல்லப்போனால் இது மிக மிக சக்தி வாய்ந்த பரிகாரம். இதற்கு நமக்கு தேவையானது இரண்டே பொருள் தான். பட்டை, கல் உப்பு. சமையலுக்கு பயன்படுத்தும் பட்டை கல் உப்பு தான் பரிகாரத்திற்கு பயன்படுத்தவேண்டும். ஆனால் பரிகாரத்திற்கு கடையிலிருந்து புதியதாக வாங்கிக் கொள்ளுங்கள். சமையலுக்கு பயன்படுத்தியதை பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.

pattai

ஒரு சிறிய துண்டு பட்டையையும், ஒரு ஸ்பூன் கல் உப்பையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பூஜை அறைக்கு சென்று உங்களுடைய நிறைவேறாத விருப்பம் என்னவோ அதை மனதார இறைவனிடம் சொல்லி, அது சீக்கிரத்தில் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

வேண்டுதல் வைக்கும் போது பட்டை தூண்டும் கல்லுப்பு இருக்கும் கிண்ணத்தை உங்கள் கையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுதலை முடித்துவிட்டு வந்த பட்டை துண்டையும் கல் உப்பையும் உங்களுடைய முந்தானையின் முனையில் வைத்து சுருட்டி முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். பெண்கள் முந்தானையில் காசு முடிந்து வைத்து இருப்பார்கள் அல்லவா, அதே போல் தான் இந்த பட்டையையும் உப்பையும் சுருட்டி முடிந்து இடுப்பில் சொருகிக் கொள்ள வேண்டும்.

uppu

சில பேர் சுடிதார் போடும் வழக்கம் இருக்கும். அப்படியிருந்தால் உங்களுடைய துப்பட்டாவில் இந்த முடிச்சை கட்டி இடுப்பில் சொருகிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் சிறிய கைக்குட்டையில் இந்த இரண்டு பொருட்களை வைத்து முடிந்தும் இடுப்பில் சொருகிக் கொள்ளலாம். இந்த இரண்டு பொருள் உங்களுடைய உடம்போடு உரசிக் கொண்டிருக்க வேண்டும்.

- Advertisement -

காலையில் இப்படி செய்தால், இரவு தூங்கச் செல்லும் வரை இந்த இரண்டு பொருட்களும் உங்களுடன் இருக்கட்டும். இரவு தூங்க செல்லும் போது இந்த பொருட்களை ஒரு கிண்ணத்தில் போட்டு பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். மறுநாள் காலை மீண்டும் இந்த இருந்த பொருட்களை உங்களுடைய முந்தானையில், உங்களுடைய கோரிக்கைகளை நினைத்து முடிந்து கொள்ள வேண்டும். இப்படி 9 நாட்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்துவர, நீங்கள் என்ன நினைத்து உங்களுடைய முந்தானையில் இந்த இரண்டு பொருட்களை வைத்தீர்களோ, அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஒன்பது நாட்கள் முடிந்ததும் கல் உப்பையும் பட்டையையும் கால் படாத இடத்தில் தூரம் போட்டுவிடலாம். உங்கள் வீட்டில் செடிகள் இருந்தால் அதிலும் போட்டு விடலாம்.

mudichu

பெண்கள் இந்த பரிகாரத்தை செய்தால் தான் அவர்களுடைய ஆசைகள் நிறைவேறுமா. ஆண்களுக்கு இந்த பரிகாரம் கிடையாதா என்று சந்தேகப்பட வேண்டாம். ஆண்களை ஒப்பிடும்போது பெண்களுக்கு நிறைவேறாத ஆசைகள் விருப்பங்கள் நிறையவே இருக்கும். வெளியில் சொல்ல முடியாத சில விஷயங்களும் அவர்களுடைய மனதில் இருக்கும். ஆகையால் தான் அப்படி சொல்லப்பட்டுள்ளது. ஆண்களுக்கு நிறைவேறாத ஆசைகள் விருப்பங்கள் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைந்து கொள்ளலாம். ஆண்கள் சிறிய கைக்குட்டையில் மடித்து உங்களுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

praying-women

உங்களுடைய கோரிக்கை நியாயமான கோரிக்கையாக இருக்க வேண்டும். அதே சமயம் உங்களுக்கு தேவையான விஷயங்களை நியாயப்படி வேண்டிக் கொள்ளுங்கள். எனக்கு ஒரு கோடி வேண்டும், நாளைக்கு பத்து பவுன் தங்கம் வேண்டும், என்றெல்லாம் வேண்டினால் அது நடக்காது. நல்ல வேலை கிடைக்க வேண்டும். குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும். கணவன் நன்றாக இருக்க வேண்டும். கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். கடன் அடைய வருமானம் நிறைய சம்பளம் வேண்டும். இப்படி ஏதாவது நேர்மறையான விஷயங்களை வேண்டிக் கொண்டால் அது கூடிய சீக்கிரத்திலேயே நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -