பெண்களின் கால்கள் எப்போதும் இப்படி இருந்தால், அவர்களுடைய கையில் எப்போதும் கட்டு கட்டாக பணம் சேரும்.

cash
- Advertisement -

வீட்டில் இருப்பவர்களுடைய ஆண்களின் அவசர தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு வீட்டுப் பெண்களின் கையில் சேமிப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பெண் சாமர்த்தியமான பெண் என்று அர்த்தம். சில பேர் கேட்கலாம். கையில் பணம் காசு சேர்க்கும் பெண் மட்டும் தான் சாமர்த்தியமான பெண்ணா. மற்ற வேலைகளை செய்து சம்பாதித்து உழைக்கக்கூடிய, பணம் காசு இல்லாமல் கூட குடும்பத்தை நடத்தும் பெண்கள் எல்லாம் சாமர்த்தியமான பெண்கள் இல்லையா என்று. அப்படி கிடையாது. கணவர் சம்பாதித்துக் கொண்டு வந்து கையில் கொடுக்கக்கூடிய காசு பணத்தை கச்சிதமாக செலவு செய்து, மீதியை சேமிப்பில் வைக்கக் கூடிய பெண், குடும்பம் எந்த காலத்திலும் பணத்திற்கு கஷ்டப்படக் கூடாது என்று நினைக்கக்கூடிய பெண், எல்லா விதத்திலும் நல்ல தகுதியை பெற்றவளாக இருப்பாள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

ஊதாரித்தனமாக செலவு செய்யாமல் சேமிப்பை நம்பும் பெண்கள் நிச்சயமாக பொறுப்போடு தான் இருப்பார்கள் என்பது ஒரு விதமான நம்பிக்கை. சரி இன்றைய பதிவில் பெண்களுடைய கையில் பணம் தங்க வேண்டும் என்றால் பெண்கள் எப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் பின்பற்ற வேண்டும் என்ற சில ஆன்மீக ரீதியான குறிப்புகளை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

எத்தனை முறை சொன்னாலும் சரி அல்லது சொல்லவில்லை என்றாலும் சரி, பெண்கள் எல்லாருமே மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியவர்கள் தான். பெண்களை பார்க்கும் போது எப்போதுமே லட்சனமாக இருக்க வேண்டும். தலை சீவி பொட்டு வைத்து கையில் வளையல் அணிந்து தலையில் பூ சூடி பார்த்தவுடன் கையெடுத்து கும்பிடும் பாடி தான் பெண்களின் தோற்றம் இருக்க வேண்டும்.

புடவை தான் கட்டிக் கொள்ள வேண்டும் என்று கிடையாது. உங்களுக்கு சௌகரியமா, அடுத்தவர்களுக்கு அசௌகரியம் தராத எந்த உடையை வேண்டும் என்றாலும் நீங்கள் அழகாக அணிந்து கொள்ளலாம். அதேபோல பெண்களுடைய கைகள் எப்போதும் மருதாணி இட்ட கைகளாக இருக்க வேண்டும். இது சாத்தியமா என்று சில பெண்கள் யோசிக்கலாம். மருதாணி இடுவது ஒன்றும் அவ்வளவு பெரிய மலை அளவு காரியம் கிடையாது. கொஞ்சம் முயற்சி செய்தால் கையில் மருதாணி இலையை அரைத்து இட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

மருதாணி இலைகளை அரைத்து வைத்த பெண்களின் கைகள் மகாலட்சுமி அம்சம் பொருந்தியது. கூடவே இரண்டு கண்ணாடி வளையலை கையில் போட்டுக் கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது மஞ்சள் தேய்த்து குளிக்க கூடிய பழக்கம் பெண்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். முகத்தில் உங்களால் மஞ்சள் பூசுவதற்கு வாய்ப்பு இல்லை. அதாவது தினமும் வேலைக்கு செல்பவர்கள் என்றாலும் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி முகத்திலும் லேசாக மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும்.

குளிக்கும்போது இறுதியாக உங்களுடைய தாலி சரட்டில் இருக்கும் மஞ்சள் கயிருக்கு கொஞ்சமாக மஞ்சள் தடவ வேண்டும். உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளிலும் மஞ்சள் தடவிக் கொள்ள வேண்டும். குறிப்பாக கால்கள், பெண்கள் பாதங்களிலும் மகாலட்சுமி வாசம் செய்கின்றாள். உங்களுடைய பாதங்கள் என்றால் நடக்கக்கூடிய அடிப்பக்கத்தில் மஞ்சளை தேய்க்கக்கூடாது. பாதத்திற்கு மேல் பக்கத்தில் மஞ்சள் பூசி குளிப்பது மகாலட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும்.

தினம் தினம் முகத்தில் மஞ்சள் பூச முடியாது என்பவர்கள் கொஞ்சமாக உள்ளங்கைகளில் மஞ்சளை போட்டு தண்ணீரில் கரைத்து தாலி சரடு, உள்ளங்கை, பாதங்களில் லேசாகவும் மஞ்சள் தேய்த்து குளித்து வந்தாலே அந்தப் பெண்ணிடம் லட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்கும். கையில் பணம் புரள ஆரம்பித்து விடும். இது ஒரு சின்ன விஷயம் தான். இதை பின்பற்றுங்கள். கூடவே செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சிக்கனமாக செலவு செய்யக்கூடிய பெண்மணிகளின் குடும்பம் எப்போதுமே சிறப்பாகத் தான் இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -