பெண்கள் மனக் கவலை இல்லாமல், சந்தோஷமாக இருக்க குளிக்கின்ற தண்ணீரில் இந்த பூவை போட்டு குளிக்க வேண்டும்.

bathing
- Advertisement -

தெய்வத்திற்குப் பிறகு போற்றக்கூடிய இடத்தில் இருக்கக்கூடிய ஒரு உயிர் தான் இந்த பெண்ணினம். அதாவது பெண்களுக்குத்தான் இன்னொரு உயிரை உருவாக்கி இந்த பூமிக்கு கொடுக்கக்கூடிய சக்தி உள்ளது. பூலோகத்தில் உயிரினத்தை படைக்க கூடிய இறைவனை நாம் கடவுளாக நினைத்து வழிபாடு செய்து வணங்குகின்றோம். அதேபோலத் தான் ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்களை மரியாதையோடு வணக்கத்தோடு நடத்த வேண்டும். எந்த குடும்பத்தில் பெண் மரியாதையோடு நடத்தப்படுகிறாளோ, அந்த குடும்பம் செல்வ செழிப்போடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும். எந்த குடும்பத்தில் பெண் அவமதிக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறாளோ அந்த வீட்டில் நிச்சயமாக கஷ்டம் குடிகொள்ளும். இது நிதர்சனமான உண்மை. நிறைய பேர் வாழ்க்கையிலும் இதை அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

இத்தனை அருமை பெருமைகளையும் கொண்ட பெண்கள் வீட்டில் எப்போதும் சந்தோஷமாக மன நிறைவோடு தான் இருக்க வேண்டும். எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு கஷ்டத்தை மனதில் போட்டு குழப்பிக் கொண்டு, அழுது கொண்டு, துக்கத்தோடு பொலிவிழந்த முகத்துடன் காணப்படக் கூடாது. மனதில் ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் சந்தோஷமாக முகத்தில் புன்னகையோடு இருக்க வேண்டும். இந்த அம்மா முகத்தைப் பார்த்தால் நமக்கு இருக்கும் கஷ்டம் கூட மறந்து போகிறது என்று அடுத்தவர்கள் சொல்ல வேண்டும்.

- Advertisement -

இதற்காக கஷ்டமே இல்லாமல் பெண்களால் வாழ்ந்து விட முடியுமா. குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. என்ன செய்வது. அந்த கஷ்டங்களை எல்லாம் எதிர்கொண்டு கஷ்டத்திற்கான தீர்வை அலசி ஆராய்ந்து பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு பெண்களுக்கு மன தைரியம் தேவை. சமயோஜித புத்திசாலித்தனம் தேவை. எதிரியும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் தேவை. இவை எல்லாவற்றையும் பெற என்ன செய்யலாம். ஒரு சிறிய ஆன்மீக ரீதியான குறிப்பு இதோ உங்களுக்காக.

மகிழம்பூ, மகிழம்பூ இலை இந்த பரிகாரத்திற்கு தேவை. இந்த இரண்டு பொருட்களையும் முந்தைய நாளே கொண்டு வந்து உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். காலையில் பெண்கள் குளிக்கும் போது குளிக்கின்ற தண்ணீரில் இந்த பூவையும் இலையையும் போட்டு விட வேண்டும். நான்கு பூ, நான்கு இலைகள் போட்டால் கூட போதும். கணக்கெல்லாம் கிடையாது. 10 நிமிடங்கள் அந்த தண்ணீரில் பூவும் இலையும் ஊறிய பின்பு அந்தத் தண்ணீரில் பெண்கள் குளித்து விட வேண்டும். குளித்து முடித்த பின்பு அந்த பூ இலைகளை கால் படாத இடத்தில் குப்பையில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

அவ்வளவு தாங்க பரிகாரம். வாரத்தின் செவ்வாய் வெள்ளி இந்த தண்ணீரில் குளிப்பது சிறப்பு. முடிந்தால் தினம்தோறும் இந்த தண்ணீரில் குளிக்கலாம். சிறிய பெண் குழந்தைகள் முதல் பெரிய பாட்டி வரை இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம் தவறு கிடையாது. இந்த தண்ணீரில் பெண்கள் தினமும் குளித்து வரும்போது அவர்களுடைய மனது தெளிவு பெறும். எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் இருக்கும். எதையாவது நினைத்து துக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மனசு கூட, ஒரு நல்ல நிலையை அடையும்.

பிரச்சனை என்று வந்துவிட்டால் அந்த பிரச்சனையை நினைத்து அழாமல் புலம்பாமல் அந்த பிரச்சனையை எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் ஒரு சில நாட்களில் வந்துவிடும். சில பெண்கள் எல்லாம் கோழையாக இருப்பார்கள் அல்லவா. வீட்டில் இருக்கும் ஆண்கள் எது சொன்னாலும் உடனே அழுது விடுவார்கள். அப்படிப்பட்ட துணிச்சல் இல்லாத கோழையாக இருக்கும் பெண்கள் கூட ஒரு சில நாட்களில் துணிந்த உள்ளம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள்.

உங்களுக்கு மகிழும் பூ செடியிலிருந்து கிடைக்கவில்லை. மகிழம்பூ இலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை மகிழம் பூ காய்ந்ததாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிக் கொள்ளலாம். மகிழம்பூ பொடியும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது அதை வாங்கியும் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். ஒரு சில நாட்களில் உங்களுக்குள்ளே வரக்கூடிய மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

- Advertisement -