முகவசியம் ஏற்பட பரிகாரம்

mahalakshmi lady face wash
- Advertisement -

பெண்கள் என்றாலே அழகு தான் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அது கருப்பாக இருந்தாலும் சரி வெள்ளையாக இருந்தாலும் சரி முகம் நல்ல கலையுடனும், வசீகரத்துடனும் இருக்கும் போது அனைவரும் பார்த்து ரசிக்கத் தான் செய்வார்கள். அதே நேரத்தில் இப்படியான முகத்தோற்றம் உடையவர்கள் இடம் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும்.

ஒரு சிலரைப் பார்த்தால் நல்ல கருப்பாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் முகத்தை பார்க்க ஒரு வித தெய்வீக தன்மையுடன் இருக்கும். ஒரு முறை பார்த்தால் நமக்கே இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும். இப்படியான தோற்றத்தை தான் முக வசீகரம் என்று சொல்வார்கள். இந்த தோற்றம் மகாலட்சுமியின் அருள் கடாட்சம் இருந்தால் மட்டுமே பெண்களுக்கு ஏற்படும்.

- Advertisement -

முகத்தை நிறமாகவும் அழகாகவும் வேண்டுமானால் நாம் அழகு நிலையம் அல்லது பல அழகு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் முக வசீகரத்தன்மை ஏற்பட வேண்டும் எனில் அதற்கு தெய்வ கடாட்சம் நிச்சயம் வேண்டும். அப்படியான ஒரு அமைப்பை பெறுவதற்கு இந்த பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முக வசீகரம் ஏற்பட

முகம் வசீகரமாக இருக்க செய்ய வேண்டியது. இதற்கு அரிசி கழுவிய தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கிராம்பு இரண்டை தட்டி தூள் செய்து போட்டு விடுங்கள். அத்துடன் கொத்தமல்லி வேரை சின்ன சின்னதாக நறுக்கி நன்றாக அலசி சேர்த்த பிறகு மூன்று சொட்டு தேனை அதில் விட்டு விடுங்கள்.

- Advertisement -

இவை எல்லாம் ஒன்றாக கலந்து அப்படியே இரவு முழுவதும் வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் தூங்கி எழுந்து நம் முகம் கை கால் கழுவும் போது இந்த தண்ணீரில் கழுவும் போது முகம் வசீகரத் தன்மை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் போல குளித்து விடலாம். ஒரு வேளை இதை இரவே ஊற வைத்து காலையில் எழுந்ததும் செய்ய முடியாது என்பவர்கள் பகலிலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இது குறைந்தது ஒரு மணி நேரமாவது இந்த பொருட்களை அரிசி கழுவிய தண்ணீரில் ஊற வேண்டும்.

இதில் சேர்த்து இருக்கும் ஒவ்வொரு பொருளும் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருட்கள். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து பிறகு அதில் முகத்தை அலங்பும் போது நமக்கு வசீகரத் தன்மையுடன் மகாலட்சுமியின் கடாட்சம் கிடைத்தும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. பொதுவாகவே நாம் பூஜை செய்யும் போது நன்றாக முகம் அலம்பி பூ வைத்து பொட்டு வைத்து நம்மை அலங்காரம் செய்து பிறகு வணங்கினால் தாயாரின் அனுகிரகம் முழுவதுமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பிறந்த நேரத்திற்கான பலன்கள்

அது மட்டும் இல்லை எப்பொழுதும் இது போல நாம் இருக்கும் போது சுக்கிரனுடைய அருட்கடாச்சமும் நமக்கு கிடைக்கும். இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இது போல செய்து தாயாரின் கடாட்சத்தை பெறுவதுடன் முக வசீகரத்துடன் அழகாக வலம் வரலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -