தினமும் இந்தப் பொருளைக் கொண்டு உடம்பைத் தேய்த்து குளித்தாலே போதும். உடம்பில் எந்த கெட்ட சக்தியாலும் தங்க முடியாது. தினம் தினம் குளிக்கும் போதே கண் திருஷ்டி உங்கள் உடம்பை விட்டு விலகிவிடும்.

bath
- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே கண் திருஷ்டியால் அவதிப்பட்டு வருவது வழக்கம்தான். குழந்தைகள் கொஞ்சம் நன்றாக சிரித்து விளையாடினால் போதும். அதற்கு கண்திருஷ்டி வந்துவிடும். பெரியவர்கள் அழகாக ஆடை அணிந்து கொண்டு அலங்காரம் செய்து கொண்டு வெளியிடங்களுக்கு சென்று வந்தாலோ அல்லது அன்றாடம் சோர்வு இல்லாமல் வேலைக்கு சென்று வந்தாலும் கூட அவர்களின் மேல் கண் திருஷ்டி விழுவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. பெரியவர்களுக்கு கண் திருஷ்டி நீங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு கண் திருஷ்டி நீங்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும். என்பதை பற்றிய 2 தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

baby-cry

முதலாவது குழந்தைகளுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்க என்ன செய்யலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், பெருங்காயம், இந்த ஐந்து பொருட்களையும் வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஐந்து பொருட்களையும் நெருப்பில் போட்டு சுட்டு பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு கருப்பு வண்ணத்தில் இருக்கும். இதில் கொஞ்சமாகத் தேங்காய் எண்ணெய் விட்டு குழைத்து குழந்தைகள் குளித்தவுடன் இதை நெற்றியில், கன்னத்தில் உள்ளங்கை உள்ளங்கால்களில் பொட்டு வைத்தால் குழந்தைகளுக்கு எந்த ஒரு கண் திருஷ்டியும் அண்டாது. அந்தக் காலத்திலிருந்தே நம்முடைய முன்னோர்கள் இந்த முறையை பின்பற்றி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

சில குழந்தைகள் எப்போதும் அழுது கொண்டே இருக்கும். தாய்ப்பால் கூட குடிக்காது. உடம்பு மெலிந்து கொண்டே செல்லும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் அந்த குழந்தைக்கு கண் திருஷ்டியின் மூலம் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. மேல் சொன்ன விஷயத்தை முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் உண்டு.

thrishti

பொதுவாகவே குழந்தைகளுக்காக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் திருஷ்டி கழிக்கும் போது அதாவது சூடம் சுற்றும் போதும், உப்பு மிளகாய் இப்படி சுற்றி போடும் போதும் வலதிலிருந்து இடது பக்கம் சுற்றி போட்டாலே போதும். நிறையபேர் வலமிருந்து இடது பக்கம் சுற்றுவார்கள். மீண்டும் இடமிருந்து வலது பக்கம் தலைகீழாக சுற்றுவார்கள். இப்படி சுற்றினால் அதன் மூலம் நமக்கு பலன் கிடைக்காது. வலமிருந்து இடமாக பிரதட்சணமாக மட்டும் திருஷ்டி கழிப்பது போதுமானது.

- Advertisement -

சரி, அடுத்ததாக பெரியவர்களுக்கு எப்படி திருஷ்டி கழிப்பது என்று பார்த்துவிடுவோம். தினசரி பெரியவர்கள் குளிக்கும்போது இந்த ஒரு பொருளை பயன்படுத்தி குளிக்கவேண்டும். நாட்டு மருந்து கடைகளில் பேய் பீர்க்கங்காய் என்ற பொருள் விற்கிறது. இதை வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். எப்போதும் போல சோப்பு போட்டு குளித்து விட்டு, நார் போல இருக்கும் இந்த பொருளை உங்கள் உடல் முழுவதும் தேய்த்து குளித்தாலே போதும். உங்களை பிடித்த கண்திஸ்டி அனைத்தும் மூன்றே நாளில் நீங்கிவிடும்.

pey-perpangai

குறிப்பாக சில இடங்களுக்கு நாம் சென்று வந்த பின்பு நம்மை யாரோ அடித்தது போல, உடல் உபாதைகளும் உடல் வலியும் ஏற்படும். சாப்பாடு பிடிக்காது. தலைசுற்றல், வாந்தி வரும். எப்போதும் மயக்கத்திலேயே சுருண்டு படுத்துக் கிடப்பார்கள். இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் உடனடியாக நாட்டு மருந்து கடையில் இருந்து பேய் பீர்க்கங்காய் வாங்கி வந்து மூன்று நாட்கள் தொடர்ந்து தேய்த்து குளித்து பாருங்கள். நிச்சயமாக உடம்பில் நல்ல வித்தியாசம் தெரியும். இந்த பேய் பீர்க்கங்காய் பயன்படுத்தி தினம்தோறும் குளித்து வந்தால் சருமத்தில் உள்ள பிரச்சனைகளும் நீங்கும். சருமம் அழகு பெறும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -