இந்த ஒரு பொருள் பிரிந்தவர்களையும் கூட ஒன்று சேர்த்து விடும். வாருங்கள் இதை வைத்து செய்யும் பரிகாரத்தை தெரிந்து கொள்வோம்

varahi
- Advertisement -

நிறைய நபர்கள் தங்கள் வாழ்வில் தனக்கு பிடித்த முக்கியமான நபர்களை பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அல்லது அவர்களிடம் பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் இருப்பார்கள். ஒரு சிலர் முன்பு பழகியது போல் பழகாமல் தள்ளி இருப்பார்கள். இவ்வாறு ஏதாவது ஒரு மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். அப்படி தன்னை விட்டுப் பிரிந்து இருப்பவர்களை எவ்வாறு தன்னிடம் வரவழைப்பது என்று பலருக்கும் தெரிவதில்லை. ஒரு சிலருக்கு அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு நம்மால் விடை காண முடியாது என்றாலும்9 அம்மனிடம் இந்த ஒரு பொருளை வைத்து பூஜை செய்வதன் மூலம் நிச்சயம் அதற்கு வழி பிறக்கும். அதுமட்டுமல்லாமல் பணத்தை உங்களிடம் ஈர்ப்பதற்கும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.

marriage
Marriage matching

ஒரு சிலர் சிறு வயதில் இருந்து தான் நன்றாக பழகி வந்த தோழியை ஒரு சின்னப் பிரச்சனைக்காக பிரிந்திருப்பார்கள். ஒரு சிலர் தனக்கு பிடித்த வாழ்க்கைத் துணையை கரம் பிடித்ததால் தாய் தந்தையிடம் எந்த ஒரு உறவும் இல்லாமல் இருப்பார்கள். ஒரு சில பெண்கள் கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றதை நினைத்து மனம் வருந்தி கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

ஒரு சில குழந்தைகள் தன்னுடைய பெற்றோர்கள் யார் என்று தெரியாமல் இருப்பார்கள். இவ்வாறு கணவன் மனைவி, பெற்றோர் குழந்தைகள், அண்ணன் தங்கை என பல உறவுகளும் பிரிந்து இருக்கின்றன. இன்றைய சமூகத்தில் இவ்வாறு பிரிந்தவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்பதற்கு எவரும் இல்லை.

friendship

அதேபோல் பிரிந்து இருப்பவர்களும் கூட தாங்கள் ஒன்று சேரவேண்டும் என்பதில் முயற்சி எதுவும் செய்வதில்லை. ஆனால் மனதிற்குள் மட்டும் எப்படியாவது இவர்கள் நம்மிடம் வந்து பேச வேண்டும் என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி உங்கள் வருத்தத்தை உடனடியாக தீர்த்து வைக்க வராஹி அம்மனுக்கு இந்த கிராம்பு பரிகாரத்தை செய்திடுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை நாளில் மட்டுமே செய்ய வேண்டும். அதற்கு முதலில் 11 எண்ணிக்கையில் அல்லது இருபத்தி ஒரு எண்ணிக்கையில் கிராம்பு எடுத்துக்கொள்ள வேண்டும். ஞாயிற்று கிலமை காலை எழுந்ததும் குளிக்கவில்லை என்றாலும் முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு, எடுத்து வைத்துள்ள கிராம்பு ஒரு வெள்ளை பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும்.

varahi1

பின்னர் அதனை பூஜை அறையில் வராஹி அம்மன் பாதத்தில் வைத்து விடவேண்டும். பிறகு ஒரு தீபம் ஏற்றி வராஹி அம்மனை வணங்க வேண்டும். பிறகு ஒரு நாள் முழுவதும் இந்த கிராம்பு வராஹி அம்மனின் பாதத்தில் இருக்க வேண்டும். பிறகு மாலை நேரம் வந்தவுடன் எப்பொழுதும் போல தீபாராதனை காண்பித்து, வராஹி அம்மனை வணங்கிய பின்னர், ஒரு தாம்புல தட்டில் கற்பூரத்தை ஏற்றி வைத்து, இந்த கிராம்புகளை ஒவ்வொன்றாக எடுத்து கற்பூரம் எரியும் நெருப்பில் போட வேண்டும். அப்பொழுது மனதிற்குள் எனது தங்கை என்னிடம் பேச வேண்டும், எனது கணவர் என்னிடம் திரும்பி வர வேண்டும், இந்த இடத்திலிருந்து எனது பணம் விரைவாக வர வேண்டும் என உங்கள் வேண்டுதலை ஒவ்வொரு கிராம்பையும் தீயில் போடும் பொழுதும் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -