பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய இனி 10 நிமிடம் கூட ஆகாது! பித்தளை பொன் போன்று பளபளக்க 10 பைசா செலவில்லாத வழி என்ன?

pooja-items-lakshmi
- Advertisement -

பூஜை பித்தளை பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்வதற்கு என்றே வாரம் ஒரு நாள் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டி இருக்கும். ரொம்பவும் சிரமப்பட்டு ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து அழுத்தி தேய்த்து சுத்தம் செய்தது போதும், இனி 10 நிமிடம் மட்டும் இருந்தால் எல்லா பூஜை பித்தளை பாத்திரங்களும் பளபளன்னு பொன் போல மின்ன வேண்டும். இதற்கு செலவு இல்லாத அற்புதமான வழி என்ன? என்கிற ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்வதற்கு பொதுவாக புளியை பயன்படுத்துவது உண்டு ஆனால் இந்த சமையல் செய்யும் புளியை பயன்படுத்தி நேரடியாக இப்படி பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதை காட்டிலும் ஒரு பேஸ்ட் போல தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த புளி பேஸ்ட் பயன்படுத்தி பூஜை பாத்திரங்களை சிரமம் இல்லாமல் எப்படி மடமட என்று தேய்த்து கழுவி சுத்தம் செய்து நேரத்தை மிச்சப்படுத்தலாம்?

- Advertisement -

முதலில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை விதைகள், நார் போன்றவற்றை நீக்கி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக பிரித்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு கோலமாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கோலப்பொடியில் இருக்கும் நரநரப்பு தன்மை மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று புளியை ஊற வைத்து சுத்தப்படுத்தும்.

இதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு நன்கு புளித்த இட்லி மாவு அல்லது புளித்த தயிர் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். புளித்த தயிர் மற்றும் புளித்த இட்லி மாவில் இருக்கும் நுண்ணுயிரிகள் பித்தளை பாத்திரங்களில் பளபளப்பு தன்மையை அதிகரிக்கும். நீண்ட நாட்கள் வரை நிறம் மங்காமல் பாதுகாக்கும். பின்னர் இதனுடன் முக்கியமாக சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த எல்லா பொருட்களும் சேர்த்து அரைத்தால் பைன் பேஸ்ட் ஆக அரைபட வேண்டும். அந்த அளவிற்கு பார்த்து கஞ்சி தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். கஞ்சி தண்ணீர் சேர்ப்பதால் பித்தளை பாத்திரங்களை தேய்க்கும் பொழுது கொஞ்சம் கூட எண்ணெய் பிசுக்குகள் இல்லாமல் புதிது போல இருக்கும். நன்கு பேஸ்டாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய பூஜை பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக தனித்தனியாக எடுத்து டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பர் கொண்டு எண்ணெய், திரி, குங்குமம் போன்றவற்றை முதலில் நீக்கி விடுங்கள்.

அதன் பிறகு இந்த பேஸ்ட்டை எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தடவி கொடுங்கள். கெட்டியாக நன்கு தடவி அப்படியே பத்து நிமிடம் ஊற விட்டு விடுங்கள். 10 நிமிடம் கழித்து நீங்கள் கைகளால் அல்லது இதற்கென தனியாக ஒரு சாப்ட் ஸ்க்ரப்பர் பயன்படுத்தி லேசாக தேய்த்தால் போதும், பளிச் பளிச்சென கொஞ்சம் கூட சிரமமில்லாமல் தேய்த்து விடலாம். இதை செய்வதற்கு பத்து நிமிடம் கூட ஆகாது. பத்து நிமிடத்தில் மொத்த பூஜை சாமான்களையும் தேய்த்து கழுவி பார்த்தால் புதிதாக வாங்கிய பித்தளை போல தங்கம் மாதிரி தகதகன்னு மின்னும்.

- Advertisement -