சின்ன அட்டையில் இருக்கும் இந்த மகாலட்சுமியின் திருவுருவப்படம் உங்கள் வீட்டில் இருந்தால் கூட போதும். கடுகளவு கஷ்டம் கூட வராது.

mahalakshmi
- Advertisement -

வீட்டில் கஷ்ட நஷ்டங்கள் வந்து போவது என்பது இயற்கையான ஒரு விஷயம். வாழ்க்கையில் கஷ்டமே வரக்கூடாது என்று நினைப்பது தவறு. ஆகவே மகிழ்ச்சி வரும் போது ஏற்றுக்கொள்ளக்கூடிய நம் மனது கஷ்டத்தையும் ஏற்றுக் கொள்வதற்கு பக்குவமடைய வேண்டும் என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம். இஷ்ட தெய்வத்தின் திருவுருவப்படம் குலதெய்வத்தின் திருவுருவப்படம் எல்லாம் நம் வீட்டில் இருக்கின்றதோ இல்லையோ கட்டாயமாக எல்லா வீட்டிலும் மகாலட்சுமியின் திருவுருவப்படம் இருக்கும்.

மகாலட்சுமி என்றாலே அவள் செல்வத்திற்கும் பணத்திற்கும் மட்டும்தான் சொந்தமானவள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பண கஷ்டத்திற்கு மட்டும்தான் மகாலட்சுமியின் திருவுருவப்படம் தீர்வு கொடுக்கும் என்று அர்த்தம் கிடையாது. பணம் மட்டும் வாழ்க்கையில் இருந்துவிட்டால் போதும் மற்ற எல்லா விஷயங்களும் தானாக நம்மைத் தேடி வரும் என்ற நினைப்பு நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. ஆனால் பணம் இருந்தும் மனதில் நிம்மதி இல்லாமல் தவித்து வருபவர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகமாக உள்ளதா. உங்களுக்கு நிறைய கோபம் வருகிறதா. வீட்டில் மங்களகரமான காரியங்கள் நடப்பதற்கு தடையாக இருக்கிறதா. வீட்டில் கண் திருஷ்டியின் மூலம் பிரச்சனைகள் வருகிறதா. இப்படி வீட்டில் இருக்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் நல்லதொரு தீர்வை கொடுக்கக் கூடிய சக்தி மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு உண்டு.

உங்கள் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில், சண்டைகள் எல்லாம் சமாதானமாக மாறி, அமைதியான மன நிலைமை உங்களுக்கும் உங்களுடைய வீட்டிலும் நிலவ வேண்டுமென்றால் வெள்ளை நிறத்திலிருக்கும் மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை பூஜை அறையில் வைக்க வேண்டும். உங்களுடைய கோவ குணமும் இந்த மகாலட்சுமியை பார்க்கும் போது படிப்படியாக குறையும்.

- Advertisement -

மஞ்சள் நிறத்தில் அதாவது தங்க நிறத்தில் ஜொலிக்கும் மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை பூஜை அறையில் வைத்தால் வீட்டில் கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய அன்னியூன்னியம் அதிகரிக்கும். தடைப்பட்டுவந்த மங்களகரமான காரியங்கள் நடக்க தொடங்கும்.

சிவப்பு நிற சேலையை உடுத்தி இருக்கும் மகாலட்சுமியை பூஜை அறையில் வைக்கும் போது நம்முடைய வீட்டில் கண் திருஷ்டியால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உறவினர்கள் வீட்டிற்குள் வந்து போனால் வீட்டில் பிரச்சனைகள் வருகிறது என்றால், சிறிய அளவில் ஒரு சிவப்பு நிற ஆடை உடுத்திய மகாலட்சுமியின் திரு உருவ படத்தை வரவேற்பறையில் வைத்துக்கொள்ளலாம்.

பச்சை நிற வண்ணத்தில் ஆடை உடுத்திய மகாலட்சுமி தாயார் தாமரைப்பூவில் அமர்ந்து இருக்கும்படி பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யும் போது, நம்முடைய வீட்டில் செல்வ கடாக்ஷம் நிறைந்திருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சரி இப்போது நம் எல்லோரது வீட்டிலும் மகாலட்சுமியின் திருவுருவப்படம் இருக்கும். அந்த திருவுருவப் படத்தை எடுத்துவிட்டு நீங்கள் புதியதாக மேல் சொன்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பது அவசியம் கிடையாது.

உங்களுடைய வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் தகுந்தது போல, எந்த வண்ணத்தில் மகாலட்சுமியின் திருவுருவப்படம் உங்கள் வீட்டுக்கு தேவையோ அதை சிறிய அட்டை வடிவத்தில் வாங்கி உங்களுடைய வீட்டு பூஜையறையில் வைத்துக் கொண்டாலும் கூட உங்களுக்கு அதற்குண்டான பலன் நிச்சயம் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த விஷயங்களை பின்பற்றி நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -